தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண். 50
தமிழ்நாட்டுக் கல்வவட்டுகள் ஒதாகுதி-30
குருவண்ணாமலை மாவட்டக் கல்வவட்டுகள் எதாகுதீ - 1)
தமிழ்நாட்டுக் கல்வெட்றுகள் வரிசை எண். 5௦
தம்ழ்நாட்டுக் கல்வாட்டுகள் வதாகுதீ-20
குருவண்ணாமலை மாவட்டக் கல்வவட்டுகள் எதாகுதீ - 1)
பொதுப்பதிப்பாசிரியர்
முனைவர் 12. ஜகந்நாதன், இஆப., ஆணையர் மு.கூ.பெற்
பதிப்பாசிரியர் இரா. சிவானந்தம் உதவி கண்காணிப்பு கல்வெட்டாய்வாளர்/ துணை இயக்குநர்டுபறி
வவளியீடு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கசன்னை-600 008 2017-திருவள்ளுவர் ஆண்டு 2047
Title
Editor Copyright Subject Language Edition Publication No Year
Type point No. of pages No. of copies Paper used
Printer
Publisher
Price
BIBLIOGRAPHICAL DATA
TAMILNATTUK KALVETTUKAL-VOL. XI R. SIVANANTHAM
Tamilnadu State Dept. of Archaeology Epigraphy
Tamil
First
288
2017
14
424
1000
80 Gsm Maplitho
Thirumullaivail Stationary Printing Book binding Aluminium &
Leather Manufacturers Industrial Co.op. Society, 40, I“ floor, Anderson street, Chennai- 600 001.
State Department of Archaeology, Tamil Valarchi Valaagam,
Thamizh Salai, Egmore,
Chennai - 600 008.
Rs.140/-
பதிப்புரை முன்னுரை திருவோத்தூர் பிரம்மதேசம் Summary சொல்லடைவு
. நிழற்படங்கள்
319
365
381
இ.க. ஆண்டறிக்கை - இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை
தெ.க. தொ - தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி
முனைவர் 19. ஐகந்நாதன், இஆப., தொல்லியல் துறை . ஆணையர் மூ.கூ.பெறி தமிழ்வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, சென்னை-600 0௦௦8.
பதிப்புறை
வரலாற்றினை எழுதுவதற்கு துணைபுரியும் சான்றுகளாகத் திகழ்பவை அகழாய்வுத் தொல்பொருட்கள், கல்வெட்டுகள், காசுகள், செப்பேடுகள், வரலாற்றுச் சின்னங்கள், இலக்கியங்கள் போன்றவையாகும். வரலாற்றினை அறிய உதவும் கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து, படித்து, பதிப்பித்து, நூலாக வெளியிடும் பணியினைத் தனது முதன்மைப் பணிகளில் ஒன்றாகச் செய்து வருகிறது.
இத்துறைக் கல்வெட்டுப் பிரிவு வாயிலாக சென்ற ஆண்டு வரை 6827 கல்வெட்டுகள் 47 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 2016-17-ஆம் ஆண்டில் நான்கு கல்வெட்டு நூல்கள் வெளிவருகின்றன. இவற்றில் இந்நூல் கல்வெட்டு வரிசை எண் 50-ஆவது நூலாக வெளியிடப்படுகின்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள திருவோத்தூர், பிரமதேசம் ஆகிய ஊரிலுள்ள 172 கல்வெட்டுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி-X1 (திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி -] என்னும் தலைப்பில் வெளிவருகின்றது.
இக்கல்வெட்டுகளைப் பதிப்பித்து நூலாக வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்ட இத்துறை உதவி கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர் திரு இரா. சிவானந்தம் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலில் இடம்பெற்றுள்ளக் கல்வெட்டு வாசகங்களைத் தட்டச்சு மாற செய்த திரு. மு. சக்திவேல் அவர்களுக்கும், அச்சுப்பிழைத்திருத்திய திருமதி ச. சரஸ்வதி அவர்களுக்கும், இந்நூலிற்கு அட்டைப்படம் வடிவமைத்த திரு த. பிரகாஷ் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசு புதுமை முயற்சிகள் திட்டம் 2016-17 திட்டத்தின் கீழ் நான்கு கல்வெட்டு நூல்களை வெளியிட நிதியுதவி நல்கிய தமிழ்நாடு அரசிற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
துறை அலுவலர்களின் உழைப்பாலும், பெரும் முயற்சியாலும் இது போன்ற நூல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். முதன்மைச் சான்றாக உள்ள இக்கல்வெட்டு வாசகங்களை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் பயன்படுத்தி இப்பகுதியின் வரலாற்றினை எழுதுவதற்கு உதவும் என்ற நோக்கில் இந்நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
“(532
ஆணையர்
மூன்னுறை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தின் தலைநகராக உள்ள செய்யாறு என்னும் ஊர் திருவத்திபுரம், திருவத்தூர், திருவத்தியூர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரையுள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் “திருவோத்தூர்” என்றே அழைக்கப்பட்டுள்ளது. சேயாறு என்ற ஆற்றின் பெயரால் தற்போது இவ்வூர் “செய்யாறு” என்றழைக்கப்படுகிறது.
திருவோத்தூர் கோயிலில் காணப்படும் மிகப் பழமையானக் கல்வெட்டு முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலத்தியது ஆகும். இக்கல்வெட்டு தற்போதுள்ள வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை மற்றும் முன்மண்டபங்களில் வெட்டப்படவில்லை. இக்கோயிலில் சிதம்பரேஸ்வரர் என்ற சன்னதியின் தெற்கு ஜகதிமில் வெட்டப்பட்டுள்ளது. சங்கரநாரணர் என்பவரின் தம்பி ஆதித்தகுட்டியார் என்பவர், தனது தமையன் பெயரில் “சங்கரநாரண ஈஸ்வரம்” என்ற இக்கோமிலை எடுப்பித்துள்ளார் என்பதை கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக ' அறிகிறோம். மேலும், இக்கல்வெட்டு - இக்கோமிலுக்கென்று நந்தவனம் ஒன்றினைத் திருவோத்தூர் சபையார் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. முற்காலச் சோழர் காலக் கல்வெட்டுகள் அனைத்தும் சிதம்பரேஸ்வரர் கோமில் கருவறை அதிட்டானத்திலே காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோமிலில் உள்ள இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின் 27-ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 966) கல்வெட்டில் “திருவோத்தூர் மகாதேவர்” என்று இக்கோமில் இறைவன் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரையிலானக் கல்வெட்டுகளில் இக்கோமில் இறைவன் திருவோத்தூர் மகாதேவர், திருவோத்தூர் உடையார், .திருவோத்தூர் ஆளுடையார், ஆளுடையார் திருவோத்தூருடையார், உடையார் திருவோத்தூருடையார், திருவோத்தூருடைய நாயனார் என்ற ஊரின் பெயரால் காலவாரியாக தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டுள்ளார். “வேதபுரீஸீவரர்” என்ற பெயர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே சூட்டப்பட்டிருத்தல் வேண்டும். உத்தமசோழனின் அரசியர்கள் செம்பியன் மகாதேவியார், ஆருரன் அம்பலத்தடிகள் ஆகியோர் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். உத்தமசோழ மாராயன்
திருவோத்தூர் மகாதேவர். கோமிலில் திருநந்தா விளக்கெரிக்க ஆடுகள் வழங்கியுள்ளான். சூளை நோயினால் இறந்த பின்னர், அரசியார் செம்பியன் மகாதேவியாரிடம் இவ்விளக்கு எரிக்க வழிவகைச் செய்ய வேண்டுமென ஊரார் முறையிட்டனர். மீண்டும் 200 ஆடுகள் வழங்கி, இக்கோயிலில் இரண்டு திருநந்தாவிளக்குகள் எரிக்க, மாதம் ஒன்றுக்கு 16 நாழி ஓர் உரி மற்றும் ஓர் ஆழாக்கு அளவு நெய் கோயிலிலேக் கொண்டுச் சென்று கொடுத்திட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னன் உத்தமசோழனின் பட்டத்து அரசியார் ஆருரன் அம்பலத்தடிகள் என்பவர் திருவோத்தூர்க் கோயிலில் விளக்கெரிக்க 25 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளார்.
கண்டகோபாலனின் படைத்தளபதி பட்டமுடையார் காங்கயர் என்பாரின் பேரன் பெருமானடி நாயக்கர் என்பவர் இக்கோயில் கருவறையையும் ஓடும் மேய்வித்ததாகக் கல்வெட்டொன்றுக் கூறுகிறது. இக்கல்வெட்டு, கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தெலுங்குச் சோழன் கண்டகோபாலன் காலத்தியது ஆகும். மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி. 1810) ஆட்சிக் காலத்தில் சிவனம்மை என்பவள் இக்கோயிலில் சோமநாததேவர் திருமேனியை எடுப்பித் துள்ளாள். இதேபோன்று சம்புவராயர் இராசநாராயணன் ஆட்சியின்போது (கி.பி. 1850) வீரவல்லாள தேவர் என்பவன் இக்கோயிலில் அண்ணாமலையார் திருமேனி ஒன்றினை அமைத்துள்ளான். மேலும், இவ்வூரில் கொற்றவைக்கு தனிக்கோயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. “கானகரை செல்வி அம்மை” என்று கொற்றவை அழைக்கப்பட்டுள்ளாள். திருவோத்தூர் கோயிலைச் சார்ந்த தேவரடியாள் சம்பா என்பவள் விசைய கண்ட கோபாலன் (கி.பி. 1277) ஆட்சிக்காலத்தில் “கானகரை செல்லி அம்மை” கோயிலை எடுப்பித்துள்ளாள்.
புவனேகபாகு தேவர் என்பவர் இக்கோயிலில் பூசை செய்வதற்கான உரிமை பெற்றிருந்த செய்தியினை இவ்வூரிலுள்ள இராசநாராயணின் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. (கி.பி. 1848) திருவோத்தூர் கோயிலில் திருப்பாட்டு (தேவாரம்) ஓதும் மாகேசுவரர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டுள்ளது.
திருவோத்தூர் கோயிலுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு உணவளிக்க வேண்டி “புட்பகிரி ஜீயர்” மடத்திற்கு நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தனியூர் பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) மேலைச்சேரியில் “ஸ்ரீபதஞ்சலிமகாமுனி தேவன் திருமடம்” என்கிற பிக்ஷா மடத்தினை நிர்வகிப்பதற்காக அத்திப்பற்று மற்றும் அழிபடைத்தாங்கிபற்று நாட்டவர்கள் நிலக்கொடை அளித்துள்ளனர். திருவோத்தூர் கோயிலில் பலபண்டங்கள் விற்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளதை கி.பி. 15-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றுத் தெரிவிக்கிறது. |
ப்
ந்
திருவோத்தூர் இறைவனுக்குப் பொன்னாலான பட்டங்கள் தானமளிக்கப்பட்டுள்ளன. பொன்னூர் ஊரைச் சார்ந்த கண்ணுடையான் காரணை விழுப்பரையன் என்பவன் இரண்டு பட்டங்களுக்கு 100 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளான். அதேபோன்று, பாண்டிய அரசி உலகுமுழுதுடையார் என்பவர் “கலியுகராமன் திருத்தோள் பிரியாத திருக்கானை” என்ற தனது பெயரில் 48 கழஞ்சுப் பொன்னில் ஆன பட்டம் ஒன்றைத் தானமளித் துள்ளார்.
பாண்டிய மன்னன் வீரபாண்டியன் பெயரில் “வீரபாண்டியன் சந்தி” ஒன்றினை இக்கோயிலில் கண்டியதேவர் என்பவன் .ஏற்படுத்தியுள்ளான். திருவோத்தூர் இறைவனுக்கு திருப்பள்ளித்தாமம் (பூமாலை) வழங்கிட வேண்டி அழகியசீயன் என்பவன் 520 குழி அளவு நிலத்தில் “தப்பாமொழி” என்ற பெயரில் நந்தவனம் ஒன்றினை உருவாக்கியுள்ளான்.
இக்கோயிலுக்குப் பல்வேறு தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கோமிலில் திருநந்தாவிளக்கு, சந்தி விளக்கு, வழிபாட்டுச் செலவினம் போன்றவற்றிற்காகப் பல்வேறு நபர்கள் தானம் வழங்கியுள்ளனர். மூன்றாம் இராசராசன் காலத்தில் செங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலிச்சோழ சம்புவராயன் என்னும் கூடலாளப் பிறந்தார் காடவராயரின் நம்பிராட்டியார் மீட்டாண்ட நாச்சியார் என்பவர் திருநாமத்துக்காணியாக தேவாரமூவர் முதலிகளான எம்பெருமக்கள் மூவர் வழிபாட்டிற்காக ஆயிரம் குழி நிலம் தானமாக வழங்கியுள்ளார்.
திருவோத்தூருடைய நயினார் கோயிலில் (தேவார மூவர் முதலிகளில் ஒருவரான) திருஞானசம்பந்தப்பெருமாளுக்கு சித்திரைத் திருநாள், ஆனித்திருநாள் திருவிழாக்களில் பத்தாந் திருநாளில் நிருத்த மண்டபத்தில் திருகண்சாத்து நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. அவ்விழாவில் திருஞானம், சுகந்தம், அடைக்காயமுது, திருவிளக்கு ஆகியவற்றை வழங்கிட 100 பணம் அளித்து 200 குழி நிலம் ஒன்றினை வாங்கி இந்நிலத்தின் மூலம் வரும் மேல்வாரத்தினைப் பயன்படுத்திக்கொள்ள நமினார் திருச்சனை என்பவர் ஏற்பாடுச் செய்துள்ளார்.
முற்காலச் சோழர் காலத்தில் “கைக்கோளப்படை” அரசு படையாக விளங்கியது. மன்னர்களின் பெயரில் பல கைக்கோளப்படைகள் இருந்தன. இப்படைப் பிரிவினர் “தெரிஞ்ச கைக்கோளர்” என்ற சொல்லினைப் பின்னொட்டாக பெற்றிருந்தனர். உதாரணமாக மதுராந்தகத் தெரிஞ்ச கைக்கோளர், பராந்தகத் தெரிஞ்ச கைக்கோளர், வீரச்சோழ தெரிஞ்ச கைக்கோளர் போன்றவற்றினைக் குறிப்பிடலாம். திருவோத்தூரில் உள்ள உத்தமசோழனின் கல்வெட்டில் (கி.பி. 984) “இரண்டு தலை பொற்கோமில் கைக்கோளப் பெரும்படை” பற்றிய குறிப்புக் காணப்படுவது ஒப்புநோக்கத்தக்கது.
Vv
ஜயங்கொண்டசோழ மண்டலத்திலுள்ள பெரிய வயலூர் ஊரைச் சார்ந்த வேட்டைக்காரர்கள் சோழமுத்தரையன் மகன் சீயமுத்தரயன் மற்றும் சேந்தமுத்தரயன் மகன் பந்தல் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்ற போது, சீயமுத்தரயன் விட்ட அம்பு தவறுதலாக பந்தல் என்பவன் மீது பாய்ந்து இறந்து விட்டான். இந்த குற்றம் நீங்க ஆளுடையார் திருவோத்தூர் கோயிலுக்கு சீயமுத்தரையன் தானம் வழங்கியுள்ளான். அதேபோன்று சூற்றி என்பவனின் மகன் கொங்கன் செல்வமுத்தரையன் என்பான் மிருகவேட்டைக்கு சென்ற போது, மிருகத்தின் மீது எறிந்த அம்பு தவறுதலாக புலியன் என்பவன் மீது பாய்ந்து இறந்துவிட்டான். பன்னாட்டார் என்னும் நிர்வாக அமைப்பினர் கூடி இரு குடும்பத்தாரிடம் பகை ஏற்படவேண்டாம் என்று செல்வமுத்தரையனை இக்குற்றத்திலிருந்து விடுவித்துள்ளனர். இக்குற்றத்திற்காகத் திருவோத்தூர் இறைவனுக்கு ஒரு விளக்கு வைக்க பதினாறு பசுக்களைக் கொடுக்கத் தீர்ப்பளித் துள்ளனர்.
செங்கேணி அத்திமல்ல நாயன் என்கிற இராசேந்திரசோழச் சம்புவராயன் மற்றும் இவனது தம்பி ஒதுவாந் என்கிற இராசகம்ப்ர சம்புவராயன் ஆகிய இருவரும் இணைந்து சீயன் பல்லவதரையன் எனும் சம்புவராயனுடன் ஓர் அரசியல் உடன்படிக்கைச் செய்துகொண்டனர். அத்தியாண்டான் என்கிற விக்கிரமசோழ சம்புவராயன் என்பவனுடன் ஒருபொழுதும் உறவு கொள்ளமாட்டோம் என்றும், அத்தியாண்டானை எதிர்க்கும் பொழுது தங்கள் பகையாகக் கருதி எதிர்ப்போம் என்றும் திருவோத தூர் கோயிலில் உறுதியளித்து உடன்படிக்கை எழுதிக்கொடுத் துள்ளனர். பிரம்மதேசம்
செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள பிரமதேசம் என்கிற ஊரில் சந்திரமெளலீஸ்வரர் கோயில், செல்லியம்மன் கோமில் மற்றும் இவ்வூரின் புறப்பகுதி ஊரான புதூரில் ருத்ரகோடீஸ்வரர் கோயில் ஆகியவை உள்ளன. இக்கோயில்களில் மிகப்பழமையான து சந்திரமெளலீஸ்வரர் கோயில் ஆகும். ஏனெனில் இக்கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவரில் பல்லவ மன்னன் கம்பவர்மனின் 20-ஆவது ஆட்சியாண்டுக் (கி.பி. 866) கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. எனவே, பல்லவர் காலந்தொட்டு இங்கு கோமில் அமைந்துள்ளது எனலாம். பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர் பிரமதேயம் என்றழைக்கப்படும். எனவே, இவ்வூர் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பது முடிவாகிறது. பல்லவ மன்னன் கம்பவர்மனின் கல்வெட்டு, இவ்வூரை ராஜமல்லச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கிறது. சதுர்வேதி மங்கலம் என்பது
ப்!
நான்கு வேதங்களுங் கற்றறிந்த பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்ட ஊராகும். பொதுவாக, பிராமணர்களுக்குத் தானம் வழங்கப்பட்ட ஊர்களானது பிரம்மதேசம், சதுர்வேதி மங்கலம், அகரம், மங்கலம் என்னும் பின்னொட்டுச் சொற்களுடன் காணப்படும். இவ்வூரும் சதுர்வேதிமங்கலம் என்ற பின்னொட்டோடு உள்ளதால், பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர் என்று கூறலாம். மேலைக்கங்க மன்னன் இரண்டாம் பிரிதிவிபதியினை அடுத்து ஆட்சி செய்த இராஜமல்லன் என்பவன் பெயரால் இவ்வூர் “ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம்” என்று பெயர் சூட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
சோழமன்னன் இராசகேசரிவர்மன் முதலாம் ஆதித்தனின் கல்வெட்டில் இவ்வூர் திருவேகம்பபுறத்து ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. புரம் என்பது வணிகருக்குரிய ஊரைக் குறிக்கும் சொல்லாகும். முதலாம் இராசராசன் ஆட்சிக்காலம் வரை இவ்வூர் வணிக நகரத்துக்குள் ஒரு பிரிவாக சதுர்வேதிமங்கலம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலாம் இராசராசனின் 18-ஆம் ஆட்சியாண்டு வரை (கி.பி. 1003) தாமர் கோட்டத்துத் திருவேகம்பபுறத்து ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் தாமர் நாட்டுக் கரைக்கோட்டு பிரமதேயம் பராக்கிரமசோழச் சதுர்வேதிமங்கலம் என்று மாற்றம் பெற்றுள்ளது. முதலாம் இராசராசனுக்கு “கீர்த்தி பராக்கிரமன்' என்ற சிறப்பு பெயர் உண்டு. எனவே, முதலாம் இராசராசனின் 27-ஆம் ஆட்சியாண்டு முதல் இவ்வூர் மன்னனின் சிறப்பு பெயரால் பராக்கிரமசோழச் சதுர்வேதிமங்கலம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று கொள்ளலாம். மேலும், முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் தினசிந்தாமணிச் சதுர்வேதிமங்கலம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறு பெயர் மாற்றம் பெற்றாலும் தொடர்ந்து பிராமணர்களுக்குரிய ஊராகவே இருந்துள்ளது.
போந்தை நாதரை வனநாயகர் என்றும், தானாக தோன்றியவர் என்னும் கருத்தில் “அஜ?” என்றழைக்கப்படுகிறார். போந்தை நாதர் திரேதாயுகத்தில் தேவர்களாலும், துவாரபார யுகத்தில் ரேவாஸ என்னும் முனியாலும் வழிபடப்பட்டவர் என்றும், கலியுகத்தில் இங்கு சந்தன குழம்பால் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்த கல்வெட்டு ஒன்றுக் கூறுகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, இதனின் காலம் கி.பி. 10-11 ஆம் ஆண்டு என்று கூறலாம்.
முதலாம் இராசராசனின் தமக்கையான குந்தவை பிராட்டியரின் கணவர் வல்லவரையன் வந்தியதேவன் ஆவான். பிரமதேசம் பகுதியை ஆட்சி செய்த குறுநிலத்
ன்
தலைவன். இவன் சோழர்க்கு சிறந்த படைத்தளபதி தலைவனாகவும் இருந்துள்ளான். வல்லவரையரின் மனைவியராக இந்தள தேவியார், உமாதேவியார் மற்றும் குந்தவை தேவியார் என மூன்று மனைவியரின் பெயர்கள் இவ்ஷர்க் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன (பக். 204, 280, 215).
தாமற் கோட்டத்து, தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சருப்பேதி மங்கலத்து பெருங்குறி சபையார் தீத்தக் குளத்தின் வடகரையில் இருந்த புளியமரத்தின் கீழ் கூடி, முதலாம் இராசேந்திர சோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறின மன்னரின் தேவியார் வீரமகாதேவியார் இறப்பிற்காக, தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர் பந்தல் அமைக்க இவரது உடன்பிறந்த சகோதரர் மதுராந்தகன் என்னும் பரகேசரி வேளான் என்பவனுக்கு நிலம் விற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலத்திற்கான தொகை மற்றும் வரிகளுக்கானத் தொகையினை பெற்றுக்கொண்டு வரிகளை தாங்களே செலுத்துவதாக மகாசபை பெருங்குறி பெருமக்கள் சம்மதித்துள்ளனர். முதலாம் இராசேந்திரன் தனது இறுதிக்காலத்தில் இவ்வூரில் தங்கி இறந்துள்ளான். இவனது மனைவி வீரமகாதேவியார் உடன்கட்டை ஏறியுள்ளாள். சந்திரமெளலீஸ்வரர் கோமில் முதலாம் இராசேந்திரனின் உடலின் மீது கட்டப்பட்ட “பள்ளிப்படைக் கோயில்” என்கின்றனர் சிலர். அவ்வாறு இல்லை, ஏனெனில் இக்கோமிலில் பல்லவ மன்னன் கம்பவர்மனின் கல்வெட்டும், முதலாம் ஆதித்தன், சக ஆண்டு 8380-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் காலத்தியக் கல்வெட்டுகள் இக்கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. முதலாம் இராசேந்திரனின் பள்ளிப்படைக் கோமில் இதுவரை கண்டறியப்படவில்லை.
தாமர் கோட்டத்து திருவேகம்பபுரத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஐஞ்ஜஷ்டசத்தும் என்னும் மகாசபையினர் 86% கழஞ்சுப் பொன்னினை வரிகளுக்கு முதலீடாகப் பெற்றுக்கொண்டு கோயிலுக்கு உரிய நிலங்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளனர். மேலும், வருங்காலங்களில் கோயிலுக்கு வழங்கப்படும் நிலங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர். ஐஞ்சஷ்டசதத்து சபை என்பது “நாலாமிரவர்” சபை என்பதை குறிப்பதாகும். ஐந்து, அஷ்டம், சதம் (எட்டு) என்பதின் பெருக்குத் தொகை நாலாயிரம் ஆகும். சிவக்குறி காமடிபெருமான் மற்றும் இவனது இளைய சகோதரன் பெருமாள் ஆகிய இருவரும் கம்மாளர் சபையிடமிருந்த வாங்கிய நிலத்திற்கு இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து சபையினர் வரிவிலக்களித்து. ஸ்ரீபோந்தை மகாதேவர் வழிபாட்டிற்கு தினசரி 2 நாழி அரிசி வழங்கிட தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஆளுங்கணத்து உறுப்பினர்கள் ஒருவனான கூடலூரைச் சார்ந்த மணிசிவபட்ட சர்வகிறுதுக்கள் என்பவனின் மகன் மகாதேவ பட்டன் என்பவன் ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நந்தாவிளக்கு எரிக்க 141 கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். மற்றொரு கல்வெட்டில் மணிசிவ பட்ட சறுவகிறத்துக்கள் என்பானின் மகன் மகாதேவ பட்டன் பற்றி கூறப்பட்டுள்ளது. இவனின் இரு மகன்களும் ஆளுங்கணத்து குழுவில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 37-ஆம் ஆட்சியாண்டில் கல்வெட்டு அதாவது கி.பி. 9448-ஆம் ஆண்டைச் சார்ந்தது. முன் கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 88-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கி.பி. 9460-ஆம் ஆண்டைச் சார்ந்தது.
வெற்றியூரைச் சார்ந்த வாட்கை காரிகுடி கரிகுடையான் என்பவன் இவ்வூரின் மேற்கேயுள்ள சுப்பிரமண்யதேவர் இறைவனுக்கு திருஅமுது மற்றும் வழிபாட்டிற்காக பராக்கிரமசோழ சதுர்வேதிமங்கலத்து மகாசபையாரிடமிருந்து 1225 குழி நிலம் வாங்கி இத்தேவற்கு தானமளித்துள்ளான். இந்த சுப்பிரமண்யதேவர் கோயில் “சோழகேரளந் கோயில்” என்று மன்னனின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வூரின் மேற்கில் அமைந்துள்ள திருவாய்பாடி தேவர் (கிருஷ்ணன்) கோயிலில் கூடி இவ்வூர் ஸீ போந்தை உடையார் கோயிலில் உள்ள ஆடவல்லான் பராக்கிரமசோழ விடங்கர் (நடராஜர்) திருமேனிக்கு உச்சி வேளையின் போது அமுதுபடி வழிபாட்டுச் செலவினங்களுக்காக வேண்டி இவ்ஷூரின் பொது நிலத்தில் (ஊர் மஞ்சிக்கம்) 2000 குழி நிலத்தினை மாதவசர பட்டன், இளைய நம்பித்தக் கிரமவித்தன், இளைய சந்தான கிரமவித்தன் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளனர். பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அயோத்தி ஆழ்வார் கோயில் முன்பு கூடி, போந்தை உடையார் கோயிலில் உள்ள திருச்சிற்றம்பல முடையார் (நடராசர்) திருமேனி வழிபாட்டிற்கு அமுதுபடி வழங்கிட 2000 குழிகளை விற்று விலையாவணம் செய்து கொடுத்துள்ளனர். போந்தை ஆழ்வார் கோயிலில் சபையினர் கூடிமிருந்தபோது குண்டூர் மாதவ கிரமவித்தன், கோமங்கலத் து ஆதித்த கிரமவித்தன், எயில் திருவேகம்ப கிரமவித்தன் ஆகிய இம்மூவரும் இவ்வூர் சப்தமாதர் (ஏழு கன்னிகையர்) இறைவிகளுக்கு திருநந்தா விளக்கு எரிக்க வழிவகை செய்துள்ளனர். கல்வெட்டு முழுமைபெறாமல் உள்ளது.
இராஜமல்லச் ச.துர்வேதிமங்கலத்து சங்கரப்பாடியில் (எண்ணெய் வணிகர் வசிக்கும் பகுதி)வசிக்கும் பேராய்ய நல்லூழான் ஊரடி என்பானின் மகன் அட்டமூர்த்தி என்பவன்
ற்;
இக்கோமிலில் உள்ள தட்சணாமூர்த்தி இறைவனுக்கு அமுதுபடி மற்றும் வழிபாட்டுச் செலவுகளுக்காக 325 குழி நிலம் தானமாக வழங்கியுள்ளான். தாமர் கோட்டத்து திருவேகம்பபுரம் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோமிலில் உள்ள ரிசபவாகன தேவர் திருமேனி வழிபாட்டிற்காகவும் நந்தாவிளக்கு எரிப்பதற்காகவும் சிங்கபெருமாள் என்பவன் 121 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளான்.
இச்செய்திகளின் வாயிலாக இவ்வூரின் மேற்குப் பகுதியில் சுப்பிரமணியர் கோயில், கிருஷ்ணன் கோயில் ஆகியவை அமைந்திருந்தன என்பதை அறிகிறோம். மேலும் இவ்வூரில் அயோத்தி ஆழ்வர் என்றழைக்கப்பட்ட ராமர் கோயிலும், சப்தமாதர் கோயிலும் இருந்துள்ளதை காண்கிறோம். சந்திரமெளலீஸ்வரர் கோயிலில் நடராசர் திருமேனி, ரிசப வாகனதேவர் திருமேனிகளுக்கு வழிபாட்டுகள் நடைப்பெற்றுள்ளதையும் காண்கிறோம்.
ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் தினமும் நண்பகலின் போது ஒரு பிராமணனுக்கு உணவளிக்க வேண்டி இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து யாளும் கணத்து உறுப்பினர் மணற்பாக்கத்தைச் சார்ந்த குமாரடி பட்ட வாஜபேஜியார் மகன் திருப்போந்தைச் சோமாசியார் என்பவன் திகைத்திறல் ஏரிமின் கீழிருந்த நிலம் ஒன்றினை வழங்கியுள்ளான். வள்ளிவயம் என்னும் ஊரைச் சேர்ந்த நல்லுழான் பெருமான் என்பவன் அமாவசைத் தினங்களில் இரண்டு பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டி இரண்டு கழஞ்சுப் பொன் கொடையாக அளித்துள்ளான். வேதம் நன்கறிந்த இரண்டு பிராமணர்களுக்கு நண்பகலில் உணவளிப்பதற்காக தாமர் கோட்டத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து என்னும் நிர்வாக சபையினர் 440 குழி நிலம் அளித்துள்ளனர். திருமலைக்குச் சென்று தீர்த்தமாடக் கூட்டமாகச் செல்லும் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவ்வூர் ஜனநாதன் மண்டபத்தில் வந்து தங்கும் போது 100 வைணவர்களுக்கு உணவளிக்கவும், தீர்த்தமாடி விட்டு திரும்பும் போதும் 100 ஸ்ரீவைணவர்களுக்கு உணவு அளிக்கவும், புரட்டாசி மாதம் திருவோணத்து நாளன்று தீர்த்தமாட வரும் 100 ஸ்ரீவைணவர்கள், ஐப்பசி மாதம் திருவிழாவின் போது . வழிபடவரும் ஸ்ரீவைணவர்களுக்கு உணவளிக்கத் தேவையானப் பொருட்கள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபோந்தையுடைய. மகாதேவர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களின் போது வழிபடவருபவர்கள் தெண்ணாமிரவன் மடத்தில் உணவு, உண்பதற்காக வேண்டி 46 குழி நிலத்தினை வரிநீக்கி மடப்புறமாக ஒன்பது கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு ஓமாநண்டத்தூர் ஊரார் விற்றுக் கொடுத்துள்ளனர். ஸ்ரீபோந்தையாண்டார் கோயில் வளாகத்தில் இருக்கும் பவித்திரமாணிக்க மடத்தினை
x
நிர்வகிப்பதற்காக மடப்புற இறையிலியாக 3549 குழி நிலத்தின் மீதான அனைத்து வரிகளும் நீக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலங்களின் விளைச்சல்களுக்கும் வரிவிதிப்பதில்லை என்றும் மகாசபை பெருங்குறி பெருமக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனை மூன்று சந்தியும் அர்த்த சாமம் போதும் அபிஷேகம் செய்யும் பிராமணனுக்கு நெல் மற்றும் கூறை (துணி) ஆகியவை வழங்குவதற்கும் 80 கழஞ்சுப். பொன் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இப்பொன் தன்மக்கட்டளைக் கல்லால் நிறுத்து, தரத்தினை இராஜமல்ல சதுர்வேதி மங்கலத்து திரைராஜ்ய கடிகாவைச் சார்ந்த மத்தியஸ்தன் பொற்கோயில் மூவாமிரவன் எனும் சதுரன் என்பவன் சரிபார்த்துள்ளான்.
தாமர் நாட்டு பிரமதேசம் பராக்கிரமசோழ சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை உடைய மகாதேவர் கோமிலில் ஸ்ரீபலி வழிபாட்டின் போது எழுந்தருளும் ஸ்ரீபாசுவத மூர்த்திகளுக்கு சிறுகாலைச் சந்தி வழிபாட்டின் போது திருவமுதுக்காக வேண்டி .ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புழற்கோட்டத்து நியமம் ஊரைச் சார்ந்த மாதேவன் திருவந்தான் என்பனிடமிருந்து 12 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் சிவபிராமணர்கள் பெற்றுக்கொண்டு திருவமுது அளிப்பதாக உடன்பட்டுள்ளனர். தாமர் கோட்டத்து இராஜமல்ல சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை மகாதேவ பட்டாரகர் இறைவனுக்கு சூரிய கிரகணத்தின் போது திருநந்தா விளக்கு ஒன்று இரவு பகலும் ளிக்க சோழநாட்டு கிழார் கூற்றத்து கிளிநல்லூர் ஊர்த் தலைவன் செம்பியன் கிழார் நாட்டுக்கோன். என்பவனிடமிருந்து 15 கழஞ்சுப் பொன்னினை வதியூர் ஊர் சபையார் பெற்றுக்கொண்டு தினம் உழக்கு எண்ணெய் கோயிலுக்கே வந்து அளப்பதாக உறுதியளித்துள்ளனர். வெளியன் நுளம்பர் விசுத்தமதி பண்டிதர் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த யாமமும் வேதத்தில் வல்லவனாய் உள்ளவன் அபிஷேகம் செய்வதற்காக 525 குழி நிலத்தினை வரிநீக்கிப் பெற்றுத் தானமாக அளித்துள்ளான்.
படுவூர் கோட்டத்து காவதிப்பாக்கத்து ஆளுங்கணத்து உறுப்பினர்களில் ஒருவன் ஸ்ரீபோந்தைபெருமானடிகள் கோமிலுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு 11 கழஞ்சுப் பொன் கொடையளித்துள்ளான். சோழமண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு பிரமதேயமான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த நாரக்கன் என்பவன் தாமர் நாட்டு கரைக்கோட்டு பிரம்மதேயம் எனும் பராக்கிரமசோழ சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தையுடையார் கோயிலுக்குத் தானமாக வழங்கிய நெல்லினை மூலதனமாகக் கொண்டு, தினமும் நான்கு வேளையும் இறைவனுக்கு அபிஷேகம்
xi
செய்வதற்கு ஸ்ரீவைகுந்தம் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்கு வழிவகை செய்துள்ளான். மேலும், திருநந்தவனம் அமைப்பதற்கு 350 குழி நிலம் கொடையாகவும் தரப்பட்டுள்ளது.
ஏரி வாரியத்தின் கணக்குகளை எழுதும் கணக்கனுக்கு (மத்யஸ்தன்) அஞ்ச்ஷ்ட்டசத்து சபையினர் மதிப்பூதியம் வழங்க நிர்ணமித்துள்ளனர். அவனுக்கு தினமும் 4 நாழி நெல்லும், வருடத்திற்கு 7 கழஞ்சும் பொன்னும், ஒரு சோடி (ஓர் இணை) ஆடையும் வழங்கிடவும் தீர்மானித்துள்ளனர். மேலும் கணக்குகளைச் சமர்ப்பிக்கும்போது தன்னுடைய நேர்மையினை நிரூபிப்பதற்குப் பழுத்தக் காய்ச்சிய இரும்பு கம்பிமினை (மழு) பிடித்திட முன்வரவேண்டும். அவ்வாறு பிடிக்கும் போது கைகளில் காயங்கள் ஏற்படவில்லை எனில் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி கூடுதலாக ஊக்கத்தொகை (பாதசேஷா) வழங்கப்படும். அவ்வாறு இன்றி காயம் ஏற்பட்டால் தவறு செய்ததாகக் கருதப்பட்டு, அதற்காக 10 கழஞ்சுப் பொன் தண்டமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடல் ரீதியான தண்டனை... (சரீர தண்டம்) வழங்கப்படாது என்றும் முடிவெடுத்துள்ளனர்.
திரைராஜ்ய கடிகாவின் மத்யஸ்தன் (கணக்கர்) சதுரன் மூவாமிரவன் என்பவன் ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்குகள் வைப்பதற்கு 30 கழஞ்சு துளைநிறைப் பொன் தானமளித்துள்ளான். கணப்பெருமக்கள் நந்தாவிளக்கு ளரிப்பதைக் கண்காணிக்கவும் ளிக்கவில்லை எனில் தெண்டம் வசூலிக்கவும் சிரதாமந்தர் எனும் நிர்வாகப்பிரிவினர் உரிமை பெற்றிருந்தனர். இராஜமல்லச் ச.துர்வேதிமங்கலத்து திருவேகம்பச்சேரியைச் சார்ந்த வியாபாரி மங்கலபிரியன் கலிவிலங்கி என்பவனின் மகன் அலங்கார செட்டி என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோயிலில் நந்தா விளக்கு எரிக்க 15 கழஞ்சுப் பொன்னினை கணப்பெருமக்கள் வசம் அளித்துள்ளான். தும்பூர் ஊரைச் சார்ந்த கம்பன் மலையன் மற்றும் நக்கன் பவித்ரம் எனும் இராஜராஜ தலைக்கோலி லக்ஷணத்தாள் ஆகிய இருவரும் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நந்தாவிளக்கு வைப்பதற்காக 12 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளனர். நடனத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படும் உயரிய பட்டம் தலைக்கோலி ஆகும்.
இவ்விரண்டு ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் இது போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகளை தன்னகத்தே கொண்டுள்ளன.
இரா. சிவானந்தம் உதவி கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 1/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. (871-907)
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 103/190
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/118 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ் I
அரசு 3: சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : முதலாம் ஆதித்த சோழன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்கு ஜகதி.
குறிப்புரை : சங்கர நாரணனார் என்பவர் நினைவாக அவனது தம்பி ஆதித்த குட்டியார் என்பார் இக்கோயிலில் எடுத்துள்ள “சங்கர நாரண ஈஸ்வர கிருகம்” என்னும் கோயில் இறைவனுக்கு, இவ்வூர் வடக்கில் தென்னை மரங்கள் உள்ள நந்தவனம் ஒன்றினைத் திருவோத்தூர் சபையார் கொடுத்துள்ளனர். : கல்வெட்டு : 1. ஷஹுஹிஸ்ரீ [॥*] சங்கர நாரணனார்க்காக அவர் தம்பியார் ஆதித்த குட்டியா ரெடுப்பித்த 2. சங்கரநாரண-ஈ௩௩ஊற மத்து 2ஊஹாஜேவர்கே யுரித்தாக வடக்கில் தெங்கிட்ட
நஷவான-
3. ம் நீரோடு அட்டிக்குடுத்தோம் திருவோத்தூர் ஸடெலெயோம்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 2/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 28
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 966
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 101/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/11
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு இராட்டிரகூடர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
அரசன் கன்னரதேவன் (மூன்றாம் கிருஷ்ணன்)
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்குச் சுவர்.
குறிப்புரை : கத்தக் கோட்டத்து தரையூர் நாட்டு மாம்பாக்கம் ஊரைச் சார்ந்த கோதண்ட மன்றாடி என்பவன் திருவோத்தூர் மகாதேவர் கோயிலில் பகல் விளக்கு ஒன்று வைப்பதற்கு 50 ஆடுகள் தானமளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஹஷிய்ீ [॥*] கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீக[ன்]*னர சேவர்க்கு
யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து]
2. த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க*]த்து கோதண்ட மன்றாடி திருவோத்தூர்
2ஹாஜேவர்க்கு பகல் விள[க்குக்கு] வைத்த சாவா[மூ]-
3. வா பேர்[ஆடு அ]ஞ்பது
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 3/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 984
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 102/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/2 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8
அரசன் .- உத்தம சோழன் இடம் 3 வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்குச் ஜகதி. குறிப்புரை : திருவோத்தூர் மகாதேவர்க்கு வைத்த திருநந்தா விளக்கிற்கு 100 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வூர் வெள்ளாளன் பாம்புணைப் பாட்டில் என்பவன் நெய் அளக்காமல் இருந்ததால் பல ஆண்டுகள் விளக்கு ளிக்க முடியாமல் போனது. தற்போது இவன் மகன் விடங்கன் தொடர்ந்து விளக்கு எரிக்க இவ்வூர்த் திருவுண்ணாழிகையுடைய இளங்கிடாசான் திருமேற்றளி பள்ளிகட்டில் பிடாரன் வழிவகைச் செய்துள்ளான். இந்த விளக்கிற்கு இளங்கிடாசான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வூர் இரண்டு தலை பொற்கோயில் கைக்கோளப் பெரும்படையர்குடி இவ்விளக்கு ளிப்பதைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளனர். கல்வெட்டு : 1. ஹஹிஸ்ரீ [॥*] கோப்பரகேசரிபநற்கி யாண்டு ௰௪-ஆவது திருவோத்தூர் ஹ[ா]*தேவர்க்-
2. கொரு திரு[க*]ஷாவிளக்கின் நூறாட்டுக்கும் மி[வ்*]வூர் வெள்ளாளன் பாம்புணைப் பாட்டிற்-
3. கடவனா நெயட்டாமையில் விளக்கு முட்டிப் பலவாண்டு செல்ல மிவன் மகன் விட-
4. நகனை துடர்வ யிவ்விளக்கு வைப்பி[தீ*]தான் மயிவ்வூர்த திருவுண்ணாழிகையுடைய மிள-
5. ங்கிடாசானை திருமேற்றளி பள்ளிகட்டில்ப் பிடாரன் மிவ்விளக்கின்பேர் மிள
6. ங்கிடாசானை மித்[௰$,](ம்)மிரண்டுதலை பொற்கோயில் கைக்கோளப் பெ[ரும்] படையார்க்குடி
சீல் கவனக் சம் அளந்து குடுப்போமா[னோமி[ப்*] பாட்டி[ல்] மன்றாடிக(ள்)ளோம் மிவிளக்கேற்ற விண்ண-
8. [ப்ப]ஞ்செய்து மிவ்விளக். . . . . . .... மிளங்கிடாசானை திருமேற்றளி பள்ளிகட்டில் பிடாரன் [॥*]
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 4/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14
வட்டம் $ செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 984
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 104/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/114 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 4
அரசன் : உத்தமச்சோழன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்குச் ஜகதி.
குறிப்புரை : உத்தமசோழ மாராயன் திருவோத்தூர் மகாதேவர் கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க ஆடுகள் வழங்கியுள்ளான். சூளை நோமினால் இறந்த பின்னர், அரசியார் செம்பியன் மகாதேவியாரிடம் இவ்விளக்கு ளிக்க வழிவகை செய்ய வேண்டுமென முறையிட்டனர். மீண்டும் 200 ஆடுகள் வழங்கி கோயிலில் இரண்டு திருநந்தாவிளக்குகள் எரிக்க மாதம் ஒன்றுக்கு 16 நாழி, ஓர் உரி மற்றும் ஓர் ஆழாக்கு நெய் கோயிலிலே கொண்டு சென்று கொடுத்திட வழிவகைச். செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு : 1. ஹஹிய்ீ [॥*] கோப்பரகேஸரிபந்2[ர* ]க்கு யாண்டு மசலாவது திருவோத்தூர் 8ஹாசேவர்க்கு திருநஷாவிளக் கெரிப்ப- 2. தற்க்கு வைத்த ஆடு உத்தமசோழமாராயந் சூறையிற் போக உடையார் செம்பியன் மாஹாசேவியார்க்கு விண்ண- 3. ப்பஞ்செய்ய அருளுச்செய்ய மீண்ட ஆடு இருனூறும் உடையார் வைத்த திரு ௩ஷா விளக்கினுக்கு சாவாமூ- 4. வாப் பேராடு ஸ[ஞூ,]நாகிதவரை இரண்டு திருகஷாவிளக் கெரிப்பதற்க்கு பஞ்சவாரக் காலோடொக்கு நாழியால் திங்கள் 5. பதிந[ா]று நாழி உரி ஆழாக்கு நெய்[யு]ம் கோயிலுக்கே கொண்டு சென்று திருவுண்ணாழிகையுடையார்களு' 1. கல்வெட்டு முற்றுப்பெறொமல் உள்ளது.
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 5/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 15
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி 985 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 118/1939-40 மொழி : தமிழ் முன் பதிப்பு 20 ,4
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் : பரகேசரிவர்மன் (உத்தமசோழன்)
இடம் : வேதபுரீஸ்வரர் கோயிலில் உள்ள சிதம்பரேஸ்வரர் சன்னதி மேற்கு ஜகதி.
குறிப்புரை : சோழ மன்னன் உத்தமசோழனின் பட்டத்து அரசியார் ஆருரன் அம்பலத்தடிகள் என்பவள் திருவோத்தூர்க் கோயிலில் விளக்கெரிக்க 25 கழஞ்சுப் பொன்னினைத் தானமளித்துள்ளாள். கல்வெட்டு : 1. ஹஷிஸ்ரீ கோப்பரகேஸரி வறரற்க்கு - யாண்டு . . . 2. த்தம சோழர் 2ஹாஜேவியார் ஆருரன் அம்பலத்தடிகள் . . .
3. த்தகோன் மல கட்டளையால் நின்ற இருபத்தைங் கழஞ்சு . . . தைங் கழஞ்சும் . . .
4. லியூர் கோட்டத்து காயரம்பேடு நாட்டு சிவன்புதுப்பாக்கத்து . . . க்கும் தேவர் . . .
5. யொடொக்கும் உழக்கினால் ஸ்ரீகோயிலுக்கு கொண்டு செலுத்த திருடண்ணாழிகை உடையார்கள் வசம்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 6/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
2. ..
னங்க ஆட்சி ஆண்டு : 2 ய வரலாற்று ஆண்டு : கியி. 1006 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 100/1900 தமிழ் I முன் பதிப்பு : 7/110
இ (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 6
முதலாம் இராசராசன்
வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி வடக்குச் சுவர்.
தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருக்காடி ஊர்த் தலைவன் கண்டன் பரகேசரி என்பவன் திருவோத்தூர் யாளுங்கணத்து உறுப்பினர் நெடுமாங்கிழான் பரமடி கிரமவித்தன் என்பவனிடமிருந்து 5 மா நிலம் வாங்கி திருவோத்தூர் கோயிலுக்கு அர்ச்சனா போகமாக (பூசை செய்பவர்களுக்கு) வழங்கியுள்ளான். இவ்வூர்ச்
சபையார் கண்டன் பரகேசரியிடமிருந்து இந்த நிலத்தின் மீதான வரிமினை நீக்குவதற்குப் பணம் (திறை திரவியம்) பெற்றுக் கொண்டனர்.
இதக் க்க சேத்து மைபூ[ண்]*டமை மன[க்*]கொளக் காந்தளுர்சாலை
கலமறு[த்]*தருளி வேங்கெநாடுங் கங்கபாடி[யு*]ம் னுள[ம்ப]*பாடியு[ம்*] தடிகை[பா]டியுங் குடமலைநாடுங் கொல்[ல*]முங் கலிங்க(லிங்க)மு[ம்*] எண்[டி*]சை புகழ்தர ஈழமண்டலமுந் த-
மசத கல்லில் ழியூழியுள் எல்லா யாண்டுந் தொழு[த*]கை விளங்கு[ம்*] யாண்டே செழிஞரைத் தேசுகொள் ஸ்ரீகோவிராஜமாஜகே(£)ஸரிபந[ற்கு*] யாண்டு ௨௰கவது காலியூர்க் கோட்ட[த்]*து தன்கூற்று
ட்டு ஸ்கல் தீதென்கரை தஞ்சாவூர் கூ[ற்]*றத்துக் குருக்காடிக்
குரு(க்)க்காடிகிழான் கண்டன் பரகேசரி திருவோத்தூர் யாளுங்கணத்தாருள் நெடுமாங்கிழான் [பர]மடி ௯2வித்தன் பக்கல் யான் விலை
ம்
ல்க கவ்வ ௬வுநாலோமத்து[க்]*கு கமுகந்தோட்டத்துக்கு மேற்கும் தென்பாற்கெ[ல்*][லை] இவன் தன் நில[த்*]து[க்]கு வடக்கும் மேல்பாற்கெ[ல்*]லை அத்தாணிநங்கை செறுவுக்கு பாரய்]*ந்த நீரோடு வா(ய்*]காலு[க்*]கு
நக்கு கஓாலோமத்து[க*]கு தெற்கு னாற்* போ[ற்*] கெ[ல்*]லையு[ரூ] மக[ப்*]பட்ட நிலம் உ[ண்ணி]லமொழிவி[ன்]*றி மச சாண் கோலா[ல்]* ஊ[ர்]*க்குண்டில் நாலுமாவும் கமுகந்தோட்ட[த்]*தில் வடக்கடைய ஒரு மாவும் த-
இல் தக க ன் பரமடி'கிர2வி[த்*]தன் ப[க்*]கல் நான் விலைகொண்ட பூமிக்கு இ[வ்*]வூர் ஸலெயோமும் இவன் பக்கல் இறைஉஹ் கொண்டு எற்பேர்[ப்ப*]ட்ட இறையுமிழி[ச*]சி கு[டு]த்தோ[ம்*] ஸமஸெ-
ரீக ந்தி மிறைசும் வேலியிட்டு பூ பறித்[து*]மர[ம்*] நட்டும் இதற்கு வேண்டு உழப்ப உழந்துண்ண குடுத்தேன் கண்டன் வீரகேசரியேன் [n*]
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 7/2017
மாவட்டம் : திருவண்ணாமலை .. ஆட்சி ஆண்டு 3 -
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 12-18 நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு உ
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் 3 -
இடம் : வேதபுரீஸ்வரர் கோமில் கருவறை தெற்கு குமுதம் (தட்சிணாமூர்த்தி மண்டபம் அருகில்),
குறிப்புரை : அறம் உரைத்த நாயனார் (தட்சிணாமூர்த்தி) உருவத்தினையும் முன்மண்டபத்தையும் மத்திபல்லவன் எடுப்பித்துள்ளச் செய்தி. கல்வெட்டு 1. ஹஹிஸ்ரீ அறமுரைத்த நாயனார் 2. மத்திபல்லவந் திருப்பணி ௨
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 8/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி
எழுத்து
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1128 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 84/1939-40 தமிழ் முன் பதிப்பு ட
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8 விக்கிரம சோழன் வ
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
சோழ மண்டலத்துப் பாண்டிகுலாசநி வளநாட்டுக் கிளியூர் நாட்டு குறிச்சி என்னும் ஊரினன் குறிச்சியுடையான் திருச்சிற்றம்பலமுடையான் எனும் அபிமாநப் பல்லவரையன் என்னும் அதிகாரி ஆராவமுதன் என்பவனிடம் பொருள் கொடுத்து நிலம் ஒன்றினை வாங்கித் திருவோத்தூருடையார் கோயிலில் அமாவாசைத் தினத்தன்று வழிபடவரும் பக்தர்களுக்கு (அபூர்வி ஆண்டார்கள்) உணவளிக்க வேண்டி இந்நிலத்தினைத் தானம் அளித்துள்ளான்.
கல்வெட்டு :
மாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்பத் தன்னிருபது மலர மன்னவர்சூட மன்னியவுரிமையால் மணிமுடிசூடி
... சென்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந்தழைப்பக்
கலிங்கஇரியக் கடாமலை நடாத்தி வலங்கொளாழி வரை
இருசுடரளவும்மொருகுடை கிழற்றி வீரஷிஃ2ஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பரராந அிலவநச்-
. ஸ்ரீவிகூமசோழ ஜேவற்கு யாண்டு அஞ்சாவது சோழமண்டலத்துப் பாண்டி குலாசநி வளநாட்டுக் கிளியூர் நாட்டுக் குறிச்சிக் குறிச்சிடடை- உச் சிற்றம்பலமுடையாநாந அபிமாந மேருப் பல்லவரையன் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காமிரம்பேடு னா-
10
10. த
11,
௨ பாற்கெல்லை குசவன் புதுப்பாக்கத்தேரிக்குக் கிழக்கு நோக்கி நீர் புகுகிற வாய்க்காலுக்குத் தெற்கும் கீழ்பாற்கெல்லை கொதுகன் ம(ட்)டத்துக்கு
, பாற்கெல்லை சாத்தனார் கோயிலில் மேட்டுக்குக் கிழக்கும் தென்பாற்கெல்லை பிரப்பமொட்டைக்கு வடக்கும் நான்கெல்லைக்குட்பட்ட பதிநாற் சாண் பே
- ண்டாமிரமும் திருவோத்தூராளுடையார் கோயிலில் அபூர்வியாண்டார்கள்
அமாவாஹியமுது செய்கைக்குச் செய்த அடைந்தவாரலையன் மடத்து .. அனாகுல விளாகமென்று இவ்வூர் காணிஉடைய வேசாலிபாடி
நாட்டுத் தலைக்குளத்துத் தலைக்குளமுடையாந் அரயன் சோலை
ன் மண்டை நம்பியும் அரயன் ஆராவமுதந் பக்கல் வஷ4் குடுத்து
சஞூாசித்தவற் இறையிழிச்சினான் இக்-
உ ஹே க்ஷ நன்றாக ॥ உ
11
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 9/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6041
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1125
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 87/1900
தமிழ் முன் பதிப்பு : 7/96 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 9 விக்கிரமசோழன்
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று தெற்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டுக் குடநகர் என்னும் ஊரில் விக்கிரம சோழனின் ஆறாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1124) ஏற்பட்டப் பெருவெள்ளத்தின் காரணமாக ஊரும் விளைநிலமும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் இவ்வூருக்கான வரி கொடுக்க வேண்டி, இவ்வூரிலிருந்த 2000 குழி நிலத்தினை இவ்வூரார் பொது ஏலத்தில் விட்டனர். இந்நிலத்தினை இங்க நாட்டு நட்டுவாய்க் குடையான் ஆதித்தன் உய்யவந்தான் என்பவனுக்கு 25 காசுகளுக்கு இவ்வூரார் விற்றுக்கொடுத்துள்ளனர். இவன் இந்த நிலத்தினை, மடத்தினை நிர்வகிப்பதற்காக மடப்புறமாக தபஸ்வி விடையின்மேல் வருவான் என்பவனுக்கு அளித்துள்ளான். இந்நிலத்துக்கு புணற்கால், பள்ளக்கால் போன்றவற்றால் நீர்பாயவும், ஆற்றில் ஏத்தம் இட்டு இறைக்கவும், கொல்லையில் கால்வாய் வெட்டிக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலத்தின் மீதான எச்சோறு, கூற்றுநெல், வெட்டி முட்டையாள், சென்லீரமஞ்சி போன்ற வரிகளையும் நீக்கி அளித்துள்ளனர்.
1. ஹஸிஸ்ீ பூமாது புணரப் புவிமாது வளர நாம[£]து விளங்க ஜயமாது
விரும்பத் தன்னிருமதுமலர் மன்னவர் சூட மன்னிய வுரிமையா[ல்] மணிமுடி சூடிச் செங்கோல் .சென்று திசைதொறு நட-
2. ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக் கலிங்க இரியக் கடமலை நடாத்தி
வலங்கொளாழி வரையாழி நடாத்தி இருசுடாளவும் ஒருகுடை. நிழற்ற வீரஷிஃஹாஸநத்து முக்கோக்கி[ழ]-
12
10.
௨ ரீநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபற்மராந கி, வநவசூவத்திகள்
ஸ்ரீவிகூ.மசோழமேவற்கு யாண்டு ஆறாவது எதிராமாண்டு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க்-
. கோட்டத்துக் காழியூர் நாட்டுக் குடநகர் ஊரோம் ஊர்க்குச் சமைந்து
இவ்வூர்ப் பெருந்துறை உடையான் இரவி எழுவநேனும் எழுவன் உலகுடையாநேனும் எழுவன் இரவிஎனும் எழுவன் பிள்ளை நம்பிஎ-
னும் பெருந்துறை உடையான் உலகுடையான் வாழவந்தாநேனும் உள்ளிட்ட
ஊரோம் இவ்வூர் யாண்டு ஆறாவது பெருவெள்ளங்கொண்டு ஊரும் போகமுமழிந்து அநதபப்பட்டு இவ்வூரிறை இறுக்கைக் குட-
. விலாமையில் இவ்வூர் நீர்நிலம் கொடுபாட்டுத் தென்கழநிமில் கீழ்பாற்கெல்லை
ஈகைச் செறுக்களுக்குக் கிழக்கு நட்ட கல்லுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை திருவோத்தூர் ஏரி செம்பியன்-
. மாதேவிப் பேரேரியில் நின்றும் திருவோத்தூர்க்கு நீர்பாயுங் கேசவ வாய்க்காலுக்கு
வடக்கும் மேல்பாற்கெல்லை புளியஞ்செறுவுக்கும் ஆலஞ்செறுவுக்கும் கிழக்கு நட்ட கல்லுக்[கு]*
. கிழக்கும் வடபாற்கெல்லை கோவன்செறுவும் கருணாகரன் செறுவுக்கும்
தெற்கு நட்ட கல்லுக்கு தெற்கும் இந்நாற்பேர் எல்லைக்கும் உட்பட்ட நீர்நிலமும் வரம்பும் காடும் களரும் மேடும்
. மேநோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறும் திருவுலகளந்த ஸ்ரீபா[த ]க்கோலால்
குழி இரண்டாமிரமும் பெறுவிலைக்காணங் கிழி[ஸ]*கச்செலத் தந்து விற்றுத்தரக் கொள்வீருள்ீரோ வென்று கூற இம்-
மொழி கெட்டு எதிர்மொழி குடுத்தோன் இங்கநாட்டு நட்டுவாய்க்குடி நட்டுவாய்க்குடையான் ஆதித்தன் உய்யவந்தாந் ஆளுடையார் திருவோத்தூருடையாரைக் கும்பிட்டு பமிவஜிமாவு[ந]-
ம் பண்ணிமிருக்கும் கவஷி விடையின் மேல்வருவானுக்கும் இவந் வமமத்தார்க்கு[ம்]* மடப்புறமாக இப்பூமி பெறுவிலைக்காணங் கிழிகைச் செலவத்தந்து கொள்வேநேன் முற்கூறிய பெருந்துறை உடையார்களுக்குப் பெறுவிலை-
13
12. க்காணக் கிழிகைச் செலக் குடுத்த அன்றாடு நற்கா[சு] இருபத்தஞ்சு மாவணக்களியேறக் கொண்டு இவ்வொரு வேலி நிலமும் இறையிலியாக நட்டுவாய்க்குடையான் ஆதித்தன் உய்யவந்தாந விடையின் மேல்வருவானுக்கு மடப்புற-
13. மாக விட விற்றுக் குடுத்தோம் கு[ட [நகர் ஊர்க்குச் சமைந்து பெருந்துறை உடையார்களோம் இந்நிலத்துக்கு[ப் பு]ணற்காலாலும் ப[ள்]*ளக்காலாலும் நீர்பா[ய]ப் பெறுவதாகவும் ஆற்றேத்தமிட்டிறைக்க கொல்லை[மி]ற் க[£]ல்பெறுவதாக-
14. வும் இந்நிலத்துக்கு எச்சோற்றுக் கூற்றுநெல் வெட்டி முட்டையாள்ச் சென்னீ ரமஞ்[சி] யுள்ளிட்ட எப்பே(ர)ற்பட்ட திருக்கொற்றவாய்தலாற் போந்த குடிமை சொல்லப் பெறாதோமாகவும் இத்தன்மத்துக்கு இடையூறு வாறாமற் காக்-
15. க[க்]*கடவோமாகவும் இடையூறுவரிற் ம23ாஸநத்திலே நித்த மஞ்சாடி பொன் மன்றப்பெறுவதாகவும் மன்றுபாடு இறுத்தும் இத்தந்மம் சந்திராதித்தவரை நிலை நிரு[த்]*தக்கடவோமாக ஒரு காலாவது மிருகாலாவ-
16. து முக்காலாவதும் விற்றுக்குடுத்தோம் குடநகர் ஊர்க்குச் சமைந்து பெருந்துறை உடையார்களோம் இத்தந்மம் ஸ்ரீபதாஹேறாற றகக்ஷ ॥
14
த.தா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 10/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு :. கியி. 1126
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 88/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/97 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு 3 சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 10
அரசன் 3 விக்கிரம சோழன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : சோழ மண்டலத்து கேயமாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு வைய்ப்பூர் ஊரைச் சார்ந்த தபசி வைப்பூரூடையான் தேவன் விடையின்மேல் வருவான் என்பவனுக்கு, அரியாவூர் ஊரார் 4250 குழி நிலத்தினை பொது ஏலத்தில் விட்டு விற்றுக் கொடுத்துள்ளனர். திருவோத்தூருடையார்க்குத் தீருவீதிப் பணிசெய்யும் திருவீதி ஆண்டார்களுக்கு உணவளிக்க த்ருதி மடப்புறமாக இந்நிலம் அளிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தரப் பாமாலை மலிந்த பன்மணித் திரள்புயத் திருநிலமடந்தையோடு ஜயமக எிருப்பக் கனவரைமார்வந் தனதெனப் பெற்றுத் திரு-
2. மக ளொருதனி மிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்ந்த கற்பினளாகி விருப்பொடு நாவகத் திருப்ப அகிலபுவனமுங் கவிப்பதோர் புதுமதி போல வெண்குடை மீமி[ச] நிழற்றத் திசைதொறுந்-
3. திகிரியோடு செங்கொல் நடப்பக் கருங்கலி யெ]ாளித்துப் பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத் தெலுங்கவீமன் விலங்கல் மிசை ஏறவுங் கலிங்கர் பூமியைக் கனலெரி பருகவும் ஐய்ம்ப[ஸ]டப் பருவத்து வெ-
15
10.
, ம்படை தாங்கி வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து வடதிசை
வடிப்படுத்தருளித் தென்றிசைத் தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப வேதமும் மெய்மையுமாதியுகம் [பொலத் தலைத்தலை சிறப்ப வந்து சுடர்மணி
. மகுடம் முறை[ன)]*மமிற் சூடி மன்னுமிர்க்கெல்லா மின்னுயிர்த் தாய்போற்
றண்ண[ளி] பரப்பித் த[னி] வந்து த[ன்] கொற்றவாய் தலப்புறத்து மணிநா வொடுங்க முரசம் முழங்க விசயமும் புகழும் மென்மே லோங்கச் (சன
. சழியர் வெஞ்சுரம் புகச் சேர[ல]ர் கடல்புக அழிதரு சிங்கணர் அஞ்சி
நெஞ்]ச[ல]மாக் கங்கர் திறையிடக்கன்னடர் வெ[ன்னி]டக் கொங்க ரொதுங்கக் கொங்கணர் சா[ய] மற்றெத்திசை[மன்ன]௬ு[ந்] தந் தந்[த]மக் கரணெ-
. எத் திருமலர்ச்சேவடி [உரி]மமி லிறைஞ்சத் தொ[ல்]லை ஏழுலகுந் தொழுதெழத்
தோன்றிய முல்லை வா[ள்] நகை முக்கோக்கிழாநடி உமையோடு சங்கரன் இமையச் சிமையத் திருந்தனநெனப் பொருந்தி உடநிருப்ப ஆ-
௨ங்கவன் மகிழுங் கங்கையொப்பாகிய தெரி[வ]யர் திலதந் தியாகபதாகை
புரிகுழல் மடப்பிடி புனிதகுணவனிதை திரிபுவனமுழுதுடையாளவன்
திருவு[ள்ள]த் தரு[ள்] முழுதுமுடையாளோடு உடறிருப்ப வீ மஹிஹாணஹனத்-
[து] முக்கோக்கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரிவ[ந]மா
தி_ல-வரச்சக்[கர]*வர்த்திக[ள்] ஸ்ரீவிக்கிரமசோழ ௨]வர்க்கு யாண்டு [எ]ட்டாவது ஜெயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்துக் காயிரம்பேடு நாட்டு அரியாவூர் ஊரோம் ஊர்க்குச்சமைய்ந்து ஆணிகிழவன் ஏறன் பிச்ச-
னும் ஏறன் நிமத்தனும் நிமத்தன் ராஜசிங்கதேவனும் தியம்பன் குராவனும் நிமத்தன் காக்குநாயகனும் இவ்வனைவோம் எங்களுர் பட்டிறைப் பட்ட[]*மயாலும் அடுத்தவாண்டைச் செலவு கோயிற்றமர் தவிராமயாலும் நாங்களெங்களுர் அம்பலத்திருந்து இவ்வூர்க்குக் காணிகொள்வார்க்கு விற்-
16
14.
றுக்குடுத்தும் இறையிலி செய்வார்க்கு விற்றுக்குடுத்தும் இறையிறுப்போமே யென்று ஆணிகிழவன் ஏறன் பிச்சனும் ஏறந் நிமத்தனும் நிமத்தன் ஈாஜசிங்கதேவனும் தியம்பன் குராவனும் நிமத்தன் காக்குநாயகனும் இவ்வனைவோம் ஸஃவசித்து இருந்து இறையிலி நிலைவிலையாவணக் கையெழுத்து இவ்வூர்ப் பி-
.டாகை தண்டலத்துக் [கீ]ழ்கழனிக்குக் கிழக்கு நட்ட கல்லுக்குக் கிழக்கும்
வடபாற்கெல்லை தண்டலத்திநின்றும் வே[ல்]மேற்ப் போன வழிக்குத் தெற்கு நட்ட கல்லுக்குத் தெற்கும் கீழ்பாற்கெல்லை கார்மான் காலுக்கு மேற்க்கு நட்டகல்லுக்கு மேற்குத் தென்பாற்கெல்லை மழவராயப் பெரிஅரயன் கொல்லையில் செ
தற்கில் ஒழுங்[]*கயில் நட்ட கல்லுக்கும் இந்நாற்பேர் எல்லைக்கு நடுவுப்பட்ட
கொல்லைத்தறை காடுவெட்டி(ய்)க் கட்டைபறித்து மேடும் பள்ளமும் திருத்தி நீர்நிலமாகப் பதிநாறுசாண்கோலால் குழி நாலாயிரம் இந்நிலத்திற்குத் தென்கிழக்குக் குடிஇருப்பு இக்கோலாற் குழி இருநூற்றைய்ம்பதுமாகக் குழி நா-
லாயிரத்திரு நூற்றைய்ம்பதும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு இருபது இக்காசு இருபதும் ஆவணக்களியே கிழிகைச்செலத் தந்து இறைஇலியாக நாங்கள் விற்றுத்தரக் கொள்வீருளிரொவென்று கூற இம்மொழி கேட்டு எதிர்மொழி குடுத்தோன் திருவோத்தூருடையாரைக் கும்பிட்டிரு-
- [க்]*கும் தவஸி சே ர்டலத்[து]*க் கேயமாணிக்க வளநாட்டு கல் மண மரு
நாட்டு வைப்பூர் வைப்பூரூடையான் தேவந் விடையின்மேல்வருவானேன் யானிறொ உங்கள் கொல்லை நிலத்துக்கு வடபாற்கெல்லை தண்டலத் [தி]நிந்றும் வேல்மேற்போன பெருவழிக்கு தெற்கும் கீழ்பார்[க]*கெல்லை கர்மாந்காலு-
க்கு மேற்கு தெந்பாற்கெல்லை மழவராயப் பெரியரையந் கொல்லையில் தெற்கில் ஒழுங்கைக்கு வடக்கு மேல்பாற்கெல்லை தண்டலத்துக் கீழ்கழநிக்கு கிழக்கும் இந்நார்பாற்கெல்லை நடுவுபட்ட நிலம் பதிநாற்சாண்கோலால் நீர்நிலமாகக் குழி நாலாமிரமும் இந்நிலத்துக்கு குடியிருப்பாக நத்தங் கு-
17
17.
18.
19.
20.
் 21.
22.
ழி இருநூற்[ன)*றம்பதும் ஆக குழி நாலாயிரத்திரு நூற்[ன/]*றம்பதும் காலியூற்கோட்டத்துக் காழியூர் நாட்டு திருவோத்தூர் ஆளுடையார் திருவோத்தூர் 2ஹாதேவர்க்கு திருவீதி பணிசெய்யுந் திருவீதி ஆண்டார்களுக்கு அமுதுசெய்கைக்கு திருவீதிமடப்புறமாக ஆகி லாஸமமணேயும விலையாக எம்மிலிசைந்த விலைப்-
பொருள் அந்றாடு நற்காசு இருபதும் யானிடக் கொண்டு இறையிலியாக நீங்கள் விற்றுத் தரக்கொள்வேநெந்று பிற்கூற முற்கூறிய காலியூற் கோட்டத்து காயிரம்பேடு நாட்டு. அரியாவூர் ஆணிகிழவந் ஏறந் பிச்சநும் ஏற[ந்]* நிமத்தநும் நிமத்தீந் இராசசிங்கதேவநு[ம்]*நிமத்தந் குராவநும் நிமத்தந் காக்கு
நாயகநும் இவ்வனைவோம் ஊற்கு சமைந்து எங்கள் காணியாந தண்டலத்துக் கடைக்கழநிக்கு கிழக்கு வடபாற்கெல்லை தண்டலத்திநிந்றும் வேல்மேற்போந பெருவழிக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை கர்மாந்காலுக்கு மேற்குந் தெந்பாற்கெல்லை மழவராயப் பெரியரையந் கொ-
ல்லையில் தெந்ஒழுங்கைக்கு வடக்கும் இந்நாற்பாற்கெல்லையுள் நடுவுப[ட்]*ட
. நிலம் பதிநாற்சாண்கோலாற் குழி நாலாயிரமும் இந்நிலத்துக்கு தெந்கிழக்கு சாரநத்தங் குழி இருநூற்[ன)]*றம்பதும் ஆக குழி நாலாயிரத் திருநூற்[]*றம்பதும் உள்நிலம் ஒழிவிந்றிப் பிற்[கூ]றி[ய] சோழ மண்டலத் -
துக் கேயமாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு வைப்பூரு வைப்[பூ]ருடையாந் தேவந் விடையிந்மேல்வருவாநுக்கு ஆளுடையார் திருவோத்தூருடையாற்கு திருவீதி பணி செய்யுந் திருவீதி ஆண்டார்களுக்கு அமுதுசெய்கை[க் ]*கு திருவீதிமடப்புறமாக ஆதிசாஸஹமணேறா-
ஈ விலையாக எம்மில் லிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு இருபதும் ஆவணக்களியே கிழிகைச்செல்ல கைக்கொண்டு இறையிலியாக வி[ற்]*று விலையாவண[ஞ்] செய்து குடுத்தோம் இந்நிலத்துக்கு நீர்பாயக் கார்மாந் காலே எரியாக குலை உசர்த்தி கொ-
18
23.
24.
25.
26.
27.
_ள்ளப்பெறுவதாகவும் பைங்கிணற்றில் ஏரிநீர் பாயப் பெறுவதாகவும் [நீர்]விலை
உப்புக்காசு உள்ளிட்ட வெட்[டி]முட்டையாள் சில்லிறை சோறுமாட்டுச் செந்நீர[ம]ஞ்சி மற்[று]ம் எப்பேற்பட்ட திரு[க்]கொற்றவாய்தல் ஏறி போந்த குடிமை சொல்லபெறாததாகவும் ॥ணே-
றற விலையாக தேவந் விடையிந்மேல்வருவாநுக்கும் இவந் வங்மாத்தார்க்குமே திருவீதிமடப்புறமாக இறையிலி யாவணஞ்செய்து குடுத்தோம் இ[ருகா]லா[வ]தும் [முக்கா](ல்)லாவதும் எம்மிலிசை[ந்]த விலைப்பொருள் முற்றும் அ[ற]*க்கொண்டு ஓலை-
க்குற்றஞ் சொற்பழுது எழுத்துப்பிழை யென்று சொல்லப்பெறாததா[க ]*வும் இத[ற்]*கிதுவே பொரு[ள்]*மாவறுதிப் பொருள் செலவோலையாவதாகவும் இதுவல்லது [பொருள் ]மாவறுதிப் பொரு[எள்]*செலவோலை காட்டப்பெறாததாகவும் இப்படி இசைந்து இறை-
யிலி யாவணஞ்செய்து குடுத்தோம் “இத்தந்மஞ் சந்திராதித்தவரை செல்லக்கடவதாக செய்து குடுத்தோம் இவ்வ[னை]வோம் இவர்கள் வேண்ட எழுதிநேன் அரியாவூ[ர் சி]வப்பிராமணந் ௯மஷூந் திருமாகாளலட்டந் எழுத்து இப்படிக்கு இவை ஆணிகிழவந் ஏறந் பிச்சந் எழுத்து
இப்படிக்கு இவை ஆணிகிழவந் ஏற[ந்]* நிமத்தந் எழுத்து இப்படிக்கு இவை ஆணிகிழவந் அவநிவீமந் எழுத்து, இப்படிக்கு இவை தியம்பந் குராவந் எழுத்து இப்படிக்கு இவை ஆணிகி[ழ]வந் நிமத்தந் காக்குநாயகந் எழுத்து இப்படிக்கு இவை சோழந் ஏறந் எழுத்து இப்படிக்கு இவை நிமத்தந் இராசசிங்கதேவந் எழுத்து. ॥-
19
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 11/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1189 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 91/1939-40 மொழி : தமிழ் முன் பதிப்பு உ ல எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 11 அரசன் : இரண்டாம் குலோத்துங்கன்
இடம் 3: வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்பெறொமல் உள்ளது. இக்கோயிலில் திருநந்தா விளக்கு ஒன்று வைப்பதற்கு பசு தானம் வழங்கப்பட்டுள்ளது.
1. ஹஷிஸ்ீ பூமேவு வளர் செம்பொந்மார்பு புணர நாமேவு கலைமகள் நலம் பெரிது சிறப்ப விசைய மாமகள் வெ .. .
2. றைஞ்ச நீணிலம் மடந்தையைத் திருமணம் புணர்வ சீர்வளர் தரும் அணிமுடி கவித்தெ மணிமுடிசூடி மல்லை ஞா . ..
ட]
. வெண்குடை நிழற் செங்கோலோச்சி வாழி பல்லூழி நடப்ப செம்பொந் வீரஹிநாஸகத்துப் புவந முழுதுடை ...
, 4. கீகரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ௬ ஆறாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலி . . .
5. த் திருநஷாவிளக்கு ஒந்றுக்கு விட்ட பசு
20
த.நா.அ: தொல்லியல் துறை தொடர் எண் :- 12/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1139
ஊர் : திருவோத்தூர் ர இ.க. ஆண்டறிக்கை: 77/1900
மொழி : தமிழ் ட முன் பதிப்பு : 7/85 (தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 12
அரசன் : இரண்டாம் குலோத்துங்கன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : சூற்றி என்பவனின் மகன் கொங்கன் செல்வமுத்தரையன் என்பான் மிருகவேட்டைக்குச் சென்ற போது, மிருகத்தின் மீது எறிந்த அம்பு தவறுதலாக புலியன் என்பவன் மீது பாய்ந்து இறந்துவிட்டான். பன்னாட்டார் என்னும் நிர்வாக அமைப்பினர் கூடி இரு குடும்பத்தாரிடம் பகை ஏற்படவேண்டாம் என்று செல்வமுத்தரையனை இக்குற்றத்திலிருந்து விடுவித்தனர். இக்குற்றத்திற்காகத் திருவோத்தூர் இறைவனுக்கு ஒரு விளக்கு வைக்க பதினாறு பசுக்களைக் கொடுக்கத் தீர்ப்பளித் துள்ளனர். கல்வெட்டு : 1. ஹவஷிஸ்ரீ பூமேவி வளர்த் திருப்பொன் மார்பு புணர் நாமேவு 2. கலைமகள் நலம் பெரிது. சிறப்ப விசையமாமகள் வெல்புயத் திருப்ப இ- 3. சையின் செல்வி எண்டிசை விளங்க நிருபர் வன்தி[]*றஞ்ச நீணிலமடலை 4. யைத் திருமணம் புணர[ர்]*ன்து சீர்வளர் தரும[ம்]* அணிமுடி கவி
மணிமுடி சூடி
5. மல்லைஞாலத்து மன்ந-யிற்க்கெல்லாம் எல்லையில் இன்பம் இசைவிநி லெய்தி வெ-
6. ண்குடைநிழற் செங்கோலோச்சி வாழி பல்லூழி ஆழி நடப்ப செம்பொன் வீரஹிஃ
21
7. ஹாஸநத்து புவநமுழுதும் உ[]*டயாளோடும் வீற்றிருன்தருளிய கோராஜகேச-
8. ரிபந்மராந திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு யாண்டு ஆ ் ன்
9. றாவது விருகவேட்டை போநயிடத்தில் சூற்றி மகன் கொ[ங்]கந் செல்வமுத்தரையன் எசடத்தில்
10. விருகத்தை தப்பி புலியனை[பட புலி]யன் பட்டவாறே பன்னாட்டார் திரண்டு திருவோத்தூ-
11. ர் உ[ன]*டயார்க்கு செல்வமுத்[தரைய]னை இடுவிச்சு பகைஅற விடுவிச்ச பசு(ப்) பதிநாறு
22
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 13/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 443
வட்டம் : . செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1144
னர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 79/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 787 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 13
அரசன் : இரண்டாம் குலோத்துங்கன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : செய்யூர் ஊரைச் சார்ந்த முரிவன் பல்லவராயன் என்பவன் இருங்கலை அரைசூருடையான் என்பானிடமிருந்து விலைக்கு வாங்கின நீர்நிலம் மற்றும் தோட்ட நிலம் 1000 குழி நிலத்தினைத் திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் _திருநுந்தா விளக்கு ஒன்று வைப்பதற்காக வழங்கியுள்ளான். கல்வெட்டு : 1. ஹஸிஸ்ரீ கி,ல-நச்சக_வத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோ- 2. ழஜேவற்கு யாண்டு யக ஆவது ஆளுடையார் திருவோத்தூரு- 3. டைய. நாயநாற்க்[கு] செய்யூர் முரிவந் பல்லவராயந் வைத்த
4. திரிநுந்தாவி[ள]*க்கு ஒந்று[க்]*கு பர[£]சூர் நாட்டு இருங்கலை அரைசூ[ர௬ு ]டை-
5. யாந் பக்கல் கொண்டு விட்ட நீர்நிலம் கருப்புச்செறுவு[ம்] திருவே- 6. கம்பமுடையாநும் தோட்டச்செறுவு[ம்]* தடி ௩ நால் குழி ஆமிரமு- 7. ம் வஞாதித்தவரை செல்[வ]தாக கொண்டு விட்டமைக்கு இ-
8. வை அரைகூருடையாந் எழுத்து இது பந்ம[£]*வேயற ஈக
23
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 14/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 19
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1165 ஊர் : திருவோத்தூர் சு இ.க. ஆண்டறிக்கை: 85/1939-40 மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 14
அரசன் : இரண்டாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : கிளிய பல்லவரையன் அம்மையப்பன் என்கிற அதியமான் என்பவன் திருவோத்தூர் ஆளுடையார் கோமிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்க அளித்த 80 பசுக்களைக் கீரந்தை ஊரைச் சார்ந்த திருவெண்காட்டுக்கோன் என்பான் பெற்றுக்கொண்டுத் தினமும் ஓர் உழக்கு நெய் அளிக்க உடன்பட்டுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷுஹிஸ்ரீ தில-வந வ௯,வத்திகள் ஸ்ரீமாஜமாஜ சேவற்க்கு யாண்டு ௰௯ தாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு திருவோத்தூர் ஆளுடையா்க்கு
2. கிளிய பல்லவரையந் அம்மையப்பநாந அதியமாந் வைத்த திரு நுகாவிளக்கு ஒந்றுக்கு செல்வி ராசகேசரியால் நித்தப்படி உழக்கு நெய் கோயிலிலே அளக்க கடவேநாகப் புலியார் பெரு-
9. ம்பாடி . . க்கும்பந் இடி கீரஷை திருவாய்க்குலம் திருவெண்காட்டுக் கோநேந் கைக்கொண்ட பசு ௩௰ முப்பதும் கைக்கொண்டு சஷிராதித்தவரை செலுத்த கடவேநாநேந் திருவெண்-
4. காட்டு கோநேந் இவை எந்எழுத்து இது பந்ீதாஹேஸ்ாற ஈகக்ஷ ॥-
24
த.நா.அ. . தொல்லியல் துறை தொடர் எண் :- 15/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : க்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1167
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 76/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/84 (தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
அரசன் : இரண்டாம் இராசாதிராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : செங்கேணி வீராண்டன் என்பானின் மகன் அத்தியாண்டான் என்பவன்
ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்துக் காலியூர் நாட்டு திருவோத்தூர் ஊரிலுள்ள ஆளுடையர் திருவோத்தூருடையார் இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கு எரிக்க 32 பசுக்கள் தானமளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஸிஸ்ரீ தி_லஏவ*]நஏ௯,வத்திகள் ஸ்ரீமாஜாயிறாஜசேவற்கு யாண்டு நாலாவது
2. ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் காலியூற் கோட்டத்துக் காழியூர் நாட்டு ஆ-
3. ளுடையார் திருவோத்தூருடையாற்க்குச் செங்கேணி வீராண்டான் மகன் அத்தியா-
4. ண்டான் வெெத்த திருககாவிளக்கு ஒன்றும் வ௲.தித்தவரை செல்வதாக விட்ட பசு முப்-
5. பத்திரண்டும் கைக்கொண்டு செல்விமாஜகேசரியால் நித்தம் உழக்கு நெய் கோயி-
6. லிலேய் கொடுவவ அளக்கக்கடவேனாக ஸம்மதித்து இப்பசு முப்பத்திரண்டு-
25
7. ம் கைக்கொண்டேன் புலியார் பெரும்பாக்கத்தில் இருக்கும் இடையன் முன்நிலை-
8. க்கோன் மகன் சீராமநேன் இப்படிக் கிவை என் எழுத்து இது பன்மாஹே ugh க்ஷ
26
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 16/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1167
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 95/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/105 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் g ஊர்க் கல்வெட்டு எண்: 16
அரசன் : இரண்டாம் இராள்திராசன்
இடம் 3 வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்திலுள்ள பெரிய வயலூர் ஊரைச் சார்ந்த வேட்டைக்காரர்கள் சோழ முத்தரையன் மகன் சீயமுத்தரயன் மற்றும் சேந்தமுத்தரயன் மகன் பந்தல் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்ற போது, சீயமுத்தரயன் விட்ட அம்பு தவறுதலாக பந்தல் என்பவன் மீது பாய்ந்து இறந்து விட்டான். இக்குற்றம் நீங்க ஆளுடையார் திருவோத்தூர் கோயிலுக்கு சீயமுத்தரையன் தானம் வழங்கியச் செய்தி.
கல்வெட்டு :
1. ஹஸிய்ீ கி,ல-வசசக,வத்திகள் ஸ்ரீ மாஜாயிறாஜ மேவர்க்கு இயாண்டு நாலாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் பெரிய வயலூர் இருக்கும் வேட்டைக்காறன்
2. சோழ முத்தரயன் மகன் சீயமுத்தரயனும் இவ்வூர் இருக்கும் வேட்டைக்காறன் சேந்தமுத்தரயன் மகன் பந்த[லு]ம் வேட்டை போந[வி]*டத்து இந்த சீயமுத்தரயன் கைய்யிலம்பாலே இந்தப்
3. பந்தல் பட்டமைமில் இந்தக் குற்ற நீங்க ஆளுடையார் திருவோ'
1. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை
27
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 17/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1171
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 81/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/89 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 17
அரசன் : இரண்டாம் இராசாதிராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : களத்தூர்க் கோட்டத்து தனியூர் மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்தின் புறனரான மதுவூரைச் சார்ந்த குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதேவன் எனும் பள்ளிக்கட்டு மும்மலராயன் என்பவன் திருவோத்தூர் கோயிலில் ஒரு நந்தாவிளக்கு எரிக்க 32 பசுக்கள் தானமளித்துள்ளான். கீரந்தை திருவெண்காட்டுக்கோன் என்பவன் இப்பசுக்களைப் பெற்றுக்கொண்டுத் தினமும் ஓர் உழக்கு நெய் இக்கோயிலின் செல்வி ராசகேசரி என்னும் அளவையால் அளக்கப் பொறுப்பேற்றுக் கொண்டான். கல்வெட்டு : 1. ஹஸிஸ்ரீ தி_ல-வநவக,வத்திகள் றாஜாயிறாஜ&வற்க்கு யாண்டு எட்டாவது உடையார் திருவோத்தூருடையாற்க்கு 2. களத்தூற் கோட்டத்து தநியூர் ஸ்ரீமதுராககச்சதுவே”திமங்கலத் துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி 3. சாமஷன் மும்மலராயன் மகன் அருமொழிதேவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன் திருநகாவிளக்கு ஒன்றுக்- 4. கு விட்ட பசு முப்பத்திரண்டும் கைக்கொண்டு செல்வி ராசகேசரியால் நித்தம் உழக்கு நெய் வராதித்தவரை கோ-
28
5. யிலிலே கொடுவவ அளக்க[க்]* கடவேனாக ஸம்மதித்து இப்பசு முப்பத்திரண்டும் கைக்கொண்டேன் புலியார் பெரும்பாக்-
6. கத்தில் இருக்கும் இடையன் கீரஸெ திருவெண்காட்டுக்கோ[நேன்] இப்படிக்கு இவை எந் எழுத்து இது பன்சாஹே[]*ஈ [ஈக ॥]*
29
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 18/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ; 11 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1174 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 100/1989-40 தமிழ் முன் பதிப்பு ல
கிரந்தங் கலந்த தமிழ் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 18 இரண்டாம் இராசாதிராசன்
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
செங்கேணி அத்திமல்ல நாயன் என்கிற இராசேந்திரசோழச் சம்புவராயன் மற்றும் இவனது தம்பி ஓதுவாந் என்கிற இராசகம்பீர சம்புவராயன் ஆகிய இருவரும் இணைந்து சீயன் பல்லவதரையன் எனும் சம்புவராயனுடன் ஓர் அரசியல் உடன்படிக்கைச் செய்துகொண்டனர். அத்தியாண்டான் என்கிற விக்கிரமசோழ சம்புவராயன் என்பவனுடன் ஒருபொழுதும் உறவு கொள்ளமாட்டோம் என்றும், அத்தியாண்டானை எதிர்க்கும் பொழுது தங்கள் பகையாகக் கருதி எதிர்ப்போம் என்றும் திருவோத்தூர் கோயிலில் சத்தியம் செய்து உடன்படிக்கை எழுதிக்கொடுத்துள்ளனர்.
1. ஷஹுஹிஷஸ்ரீ தில-வன வ௯,_வத்திகள் ஸ்ரீமாஜாமிமாஜ மேவற்கு யாண்டு
பதிநொந்றாவது செங்கேணி அத்திமல்ல நாயநாந றா-
2, ஜேஷ, சோழச் சம்புவராயநும் எந்தம்பி ஓதுவாநாந மாஜமம்ஷீற சம்புவராயநும்
இவ்விருவோம் செங்கேணி மிண்டந் சீயந் பல்ல-
9. வதரெரெயநாந சம்புவராயற்கு உடையார் திருவோத்தூருடையார் கோயிலில்
கல்வெட்டிநபடியாவது பத்தாவது ஆநி மாஸத்து
4. நாங்களும் இவரும் உடையார் திருவகம்பமுடையார் ஆடி அருளிந
வழிநோக்கி ஸத்கம் பண்ணி இட்ட தீட்டிந்படி
5. நாங்கள் உள்ளதனையும் இவற்கு தப்பக் கடவோமல்லாதோமாகவும் இவர்
எங்களுக்கு ஊத்தும் பண்ணி இட்ட தீட்டிந்-
30
10.
11.
12.
18.
14.
15.
படியால் உள்ள நாடு மாஜறாஜந் பெருவழிக்கு மேற்க்கும் கிளியாற்றுக்கு
தெற்கும் குந்றுக்கும் நாகுணிக்கும் தெற்கும் மல்-
, லது ஏற்றமாக இவரைப்பெலப் பண்ணிக்கொள்ளக் கடவோமல்லாதோமாகவும்
ஒதுவாநாந ஈாஜமம்லீற சம்புவராயனை இந்-
நாளில் இவநுக்கு தக பெருங்கோட மேலூரும் விண்ணமங்கலமும்
பதிநொந்றாவது கல்வெட்டுகிற போது குடு-
தீத மதுவூரும் எநக்குத் தக வாதவூரும் உலக்கையூரிந் திறத்தும் படக் கடவரல்லாராகவும் நாங்களும் இப்பற்றுக்கு மேல் ஏற்றமாக பெல-
ம் பண்ணி ஒற்றும் கொள்ளக்கடவோம் அல்லாதோமாகவும் இவரைத் தவிர அத்தியாண்டாநாந விக்கிரமசோழச் சம்புவராயநுடந் ஒருகால-
மும் உறவு பண்ணக்கடவோமல்லாதோமாகவும் மற்றுமிவற்கு இந்நாதாருடந் கூடி நிந்று இவரை வினை செய்யக்கடவோமல்லாதோ-
மாகவும் அத்தியாண்டானை இவர் எய்யுமிடத்து வேண்டும் படையுங் குதிரையுங் கொண்டு பிள்ளைகளும் செந்று எங்கள் விநையாக கொ-
ண்டு கூடி நிந்று செய்து குடுப்போமாகவும் இப்படி ஸம்மதித்து உடையார் திருவோத்தூருடையார் கோமிலிலே கல்வெட்டிக் குடுத்-
தோம் அத்திமல்லநாயநாந இராசேஷ, சோழச் சம்புவராயநும் ஓதுவாநாந ஈாஜமம்வீரச் சம்புவராயநும் இவ்விருவோம் இக்க-
ல்வெட்டிநபடி தப்பிநோமாகில் எங்கள் பகைவநாந . . . மலராயந் கடை காப்பாநுக்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாநோம்
31
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 19/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1176 ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 104/1989-40 மொழி தமிழ் முன் பதிப்பு _ ௮ எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
அரசன் இரண்டாம் இராசாதிராசன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருமுனைப்பாடி நாட்டைச் சார்ந்த திருவீரட்டானமுடையான் என்பவனிடமிருந்து
122 கழஞ்சுப் பொன்னினைத் திருவுண்ணாழிகைச் சபையார் பெற்றுக்கொண்டு திருவோத்தூருடையார் கோயிலில் ஒரு திருநந்தா விளக்கு வைப்பதற்குச் சம்மதித் துள்ளனர்.
கல்வெட்டு :
1.
2.
ஹஹிஸஹ்ீ திருவாய்க் கேழ்வி முன்னாக .தில-வனச் ம தவா மாஜாயிறாஜ சேவற்க்கு யாண்டு பதின்மூ-
ன்றாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூற் கோட்டத்துக் காழியூர் னாட்டு ஆளுடையார் திருவோத்தூ-
.. ருடையா[ர்]க்கு திருமுனைப்பாடி னாட்டில் பயறி ஈழத்தரெரயன் அழிசு
காடுகாவல் அரசமகன் திருவீரட்டானமுடெயான் வெ-
௨ ச்ச திருனந்தாவிளக்கு ஒன்றுக்கு ஒக்கும் பொன் பன்னிரு வ்ஞ்கவியுக்
ககெக்கொண்டு சஷ ஷூ. £சித்தவரெெ இத்திருனந்தா விளக்-
குச் செலுத்தக் கடவோமாக ஸம்மதித்தோம் இக்கோயிலில் திருவுணாழிகச் ஸலெயோம் இப்படிக்கு இவெ தில்லைனாயக ஹஃ-
ட்டன் எழுத்த. இவெ தில்லைக்கூத்த மட்டன் எழுத்த இவெ
சண்டேமுர லட்டன் எழுத்த இவெ ஹூாமறிவ லட்டன் எழுத்த இது பன்மாஹே-
உ யூர் ரக்ஷ ॥ உ
32
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 20/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1180
திருவோத்தூர் -இ.க. ஆண்டறிக்கை: 80/1900.
தமிழ் முன் பதிப்பு : 7/88 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
திரிபுவன ஸ்ரீவீரராசேந்திரசோழதேவர் (மூன்றாம் குலோத்துங்கன்)
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று வடக்குச் சுவர்.
செங்கேணி அத்திமல்லன் அம்மையப்பன், அத்தி எனும் கேரளாந்தக நல்லூர் பரிக்கிரகத்து நிலையுடைய பெண்டுகளில் வம்புபழுத்தாள் மகள் நாச்சி மற்றும் வெள்ளாளன் களத்தூர் கிழவன் ஆகிய இம்மூவரும் தலா முப்பது பசுக்கள் வீதம் மொத்தம் 90 பசுக்களைத் திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் மூன்று நந்தாவிளக்குகள் எரிக்கத் தானமாகக் கொடுத்துள்ளனர்.
1. ஹுஷிஸ்ரீ தி,௮-வக௯,வகிகள் ஸ்ரீவீரமாஜே, சோழமேவற்கு யாண்டு ௨
ஆவ-
2. து ஜயங்கொண்டசோழ மண்[ட]*லத்துக் காலியூர்க்கோட்டத்து காழியூர்
நா-
9. ட்டு திருவோத்தூர் ஆளுடையர் திருவோத்தூருடையரற்குத் திருநகாவிளக்கு
ஒந்று-
4. க்குச் செங்கேணி அத்திமல்லந் அம்மைஅப்பந் விட்ட பசு முப்பதும்
அத்தியாந கேரளாகக நல்-
5. லூர்ப் பரிக்கிரகத்து நிலையுடைய பெண்டுகளில் வம்புபழுத்தாள் மகள் நா
33
6. ச்சி வைத்த திருநஷாவிளக்கு ஒந்றுக்கு விட்ட பசு முப்பதும் அனுக்காவூரில் இருக்கும்
7. வெள்ளாளந் களத்தூர் கிழவநுடையாந் வைத்த திருநஷாவிளக்கு ஒற்றுக்கு விட்ட பசு முப்பதும் ஆக பசு-
8. (த்)தொண்ணூறுங் கைக்கொண்டு திருநுகாவிளக்கு மூன்றுக்குச் செல்விராசகேசரியால் நாளொன்'
1. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை
34
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 21/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 82/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/90 (தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : தெலுங்குச் சோழர் ஊர்க் கல்வெட்டு எண் : 21
அரசன் : மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன் மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து நாட்டுப் பிரிவுத் தலைவர்களுக்கு நேரடி ஆணை ஒன்று பிறப்பித்துள்ளான். தேவதானம், திருவிடையாட்டம், அகரப்பற்று, திறப்பு, வன்னியப்பற்று ஆகிய நிலங்களில் இருந்து வேலி ஒன்றுக்கு ஆறு கலம் நெல் வசூல் செய்ய நாட்டவர்களுக்கு ஆணையிட்டுள்ளான். திறப்பு என்பது நேரடியாக அரசுக்கு இறை செலுத்தும் வெள்ளான் வகை நிலம் ஆகும். கல்வெட்டு : 1. ஹஸிஹ்ீ மதுராந்தகப் பொத்தப்பிச்சோழன் ஓலை ஜயங்- 2. கொண்டசோழ மண்டலத்து நா[ட்]*டவர் கண்டு இரண்டாவது ஐ- 3. ற்பசி மாதமுதல் தேவதானம் திருவிடையாட்டம் அகரப்பற்றும் 4. திறப்பும் வன்னியப்பற்றும் உட்பட நாட்டுக்குத் தன் வரிசையிலே வே- 5. லி அறுகலநெல்லு விட்டோம் இன்னாள் முதல் இப்படியால் உள்ள நெல்-
1
6. லு
1... கல்வெட்டு முற்றுப்பெறவில்லை அது
த
35
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 22/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1211
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 94/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/103 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 22
அரசன் 3: திரிபுவன வீரதேவர் (மூன்றாம் குலோத்துங்கன்)
இடம் 3 வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்துச் செங்குன்ற நாட்டு - கலவை எனும் ராசநாராயணச் சதுர்வேதிமங்கலத்துத் தென்பிடாகை தட்டைச்சேரி தேவதானமாக செங்கேணி அம்மையப்பன் அழகியசோழன் எனும் எதிரிலிசோழ சம்புவராயன் என்பவன் அளித்துள்ளான். மேலும், திருவோத்தூர், வயலூர், கன்றியம் போன்ற ஊர்களிலிருந்து வசூலிக்கப்படும் வெட்டி, தனியாள், சிறுபாடி காவல், எடுத்துக்கொட்டி, அரிமுக்கை, கொல்லைப்புஞ்சை, எிமீன்பாட்டம், ஆசுவிகள் பேர்க்கடமை, தறியிறை, சாலிகர்-வாணிகர் பேராற்கடமை, செக்கு கடமை, குற்றத்தெண்டம், பட்டித்தெண்டம், கோயில் அந்தராயம் ஆகிய வரிகளின் வருவாயையும் கோமிலுக்கு அளித்துள்ளான். கல்வெட்டு : 1. ஷஹஷிஸ்ரீ[॥*] திருவாய்க்கேழ்விமுன்னாக தி,ல-வகவுக, வதிகள் மதுரையு மீழமுங்- 2. கருவூரும் பாண்டியந் முடித்தலையுங் கொண்டு வீறாலிஷேகமும் விஜயாஷிஷேகமு- 3. ம் பண்ணியருளிய தி_லநவீறஜேவற்க்கு யாண்டு முப்பத்துமூன்றாவது
ஜயங்கொண்டசோழ மண்டல[த்]-
36
10.
11.
12.
1.
14,
15.
16.
துப் பல்குன்றக் கோட்டத்துச் செங்குன்ற நாட்டுக் கலவையாந மாசநாறாயண
வுதுவெதி2ம[௨]த்-
. துத் தென்பிடாகை திட்டைச்சேரியாந அழகியசோழநல்லூர் நஞ்செய் புஞ்செய்
விளைநிலத்து
. ரென]ல்லை முற்றுமுடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு ஜேவலாநமாக
விட்டேன் செங்கேணி அம்-
. மையப்பன் அழகிய சோழனான சம்புவராயனே[ன்] இன்னாயனார்
ஜேவலாநங்க[ள]ான திருவோத்தூ-
ரும் வயலூரும் கன்றியமும் ஸ்ரீகாழினாடான். விளாகமும் சீராளுபட்டும்
அண்டிலியும் உள்ளிட்ட ஊர்-
களில் வெட்டி த[னி]யா[ள் சி]றுபாடிகாவல் எடுத்துக்கொட்டி அரிமுக்கை
உள்ளிட்ட நெல்லாயமும் காசாயமுங் கொ-
ல்லைப் புஞ்சை ஏரிமீன்பாட்டம் ஆசுவிகள்பேர்க்கடமை தறியிறை சாலிகர் வாணிகர் பேர[£]*ற்கடமை செக்கு
கடமை குற்றத்தெண்டம் பட்டித்தெண்டம் கோமிலன்தராயம் உள்ளிட்டன எப்பே(ர்)ற் பட்டனவும் திருவோத்-
தூருடெய னாயனார்க்கு பாட்டன் பாட்டன் விட்டபடியே திட்டைச்சேரியான அழகிய சோழ-
னல்லூரிலு மிப்படியால் வந்தன எப்பே(ர்)ற்பட்டனவும் திருவோத்தூர் உடையனாயனார்க்கு
விட்டேன் செங்கேணி அம்மையப்பன் அழகியசோழ[னா]ன எதிரிலி சோழச் சம்புவராயனே[ன்]*
இதுக்கு இலங்கனம் பண்ணுவார் கெங்கையிடைக் குமரிமிடைச் செய்தார் செய்த பாவங்
கொள்வார் [॥]*
37
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 23/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3 -
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 19-நூற்.
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 1048/1900
தமிழ் முன் பதிப்பு : 7/116 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 224
வேதபுரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி கருவறை மேற்குச் சுவர். திருவோத்தூர் கோயில் தேவரடியார்களுக்கு சீவிதம் ஆக வயலூர், கன்றியம் ஆகிய இரண்டு ஊர்களும் ஊர்ச்சபையாரால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இவர்களிடம் 90 பணம் பெற்றுக்கொண்டு இவ்விரண்டு ஊர்களையும் காணியாட்சியாக விற்றுக் கொடுத்துள்ளனர். இவ்வூரில் தாங்கள் வேண்டும் குடிகளை ஏற்றிக்கொள்ளவும், வான்பயிர்களை பமிரிடவும் அனுமதி வழங்கியுள்ளனர்.
1. ஹஹிஸ்ரீ [॥*] திருவாய்கேழ்வி முன்னாக [வுரஷ] வருஷ ஆனி மாதம்
முதல் தியதி திருவோத்தூர்த் தேவரடியார்க்கு தங்கள் சீவிதம் ஆன வயலூர் கன்றியம் நஞ்சை புஞ்சை தோட்டப்பற்று நத்தம் நான்கு எல்லையும் சீவிதம் ஆக குடுத்து
2. நடந்து பொதுகிற இவ்வூர் இரண்டும் இவர்களுக்கு காணி ஆட்சிஆக
சண்டேசுரவிலைஆக விற்று பற்றின ப-௯௰ இப்பணம் தொண்ணுற்றுக்கும் இவ்வூர் இரண்டும் காணி ஆட்சி ஆக விற்று பிறமாணம் பண்ணிக்குடுத்தோம் ்
3. இவ்வூர் இரண்டும் இவர்களுக்கு விற்று ஒற்றிப் பரிக்கிறைய தாய
தானங்களுக்கும் உரித்தாவதாகவும் இவ்வூர் தாங்கள் வேண்டும் குடியும்
38
ஏற்றி வேண்டும் [வ]ான்பமிரும் செய்து கொள்ளவும் இப்படிக்கு சந்திராதித்தவரை-
4. யும் செல்லக் குடுத்தோ[ஏ] இது ௨[க்]சாஹேனா[ஈ*] ஈக்ஷ இது வர, ஜெலி லடட்ஹு மெவாயிறாஜஸ இது மமிவக்கொழுந்[து] பட்டன் எழுத்து ௯2) [கணே] வட்ட எழுத்து
39
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 24/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 39
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1217
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 93/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/02 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 23
அரசன் : திரிபுவனவீரதேவர் (மூன்றாம் குலோத்துங்கன்)
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : பொன்னூர் கண்ணுடையான் காராணை விழுப்பரையன் என்பவன்
திருவோத்தூருடையார் இறைவனுக்கு நூற்றுக் கழஞ்சு அளவு பொன்னிலான இரண்டு பட்டங்கள் கொடையளித்துள்ளான். கல்வெட்டு 1. ஹஸஹிஸ்ரீ [॥*] தி,ல வகவுக_வதிகள் தி,ல-வகவீஈமேவற்கு யாண்டு ௩௯-வது உடையார் திருவோத்தூரு- 2. டையாற்கு பொன்னூர்க் கண்ணுடையான் காராணை விழுப்பரைய னிட்ட பட்டம் க னால் 9. பொன் ரும்மம் பட்டம் க னால் பொன் ருமம் ம் ஆக பட்டம் ௨ னால் ஏழேகால் மாறிப் 4. பொன் ஈமு பொன் நூற்றுக் கழஞ்சு ॥॥-
40
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 25/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1230 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 105/1999-40 மொழி : தமிழ் முன் பதிப்பு : எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 24 அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டபத் தெற்குச்சுவர்.
குறிப்புரை : செங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலிசோழச் சம்புவராயன் என்னும் சிற்றரசன் திருவோத்தூர் உடைய நாயனார் கோமிலுக்கு, ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூரக் கோட்டத்து காசிரம்பேடு நாட்டு மாவண்டூர் ஏரிவாய்ப்பற்று சிற்றியாற்றூர் என்னும் ஊரிலுள்ள நன்செய், புன்செய் நிலத்தின் மீது வசூலிக்கப்படும் வரிகளைத் தானமாக வழங்கியுள்ளான். இக்கோயிலுக்கு தேவதானங்களான திருவோத்தூர், வயலூர், கன்றியம், சிராயம்பட்டு, அண்டிலி, அனுக்காவூர், தவசிபெரும்பாக்கம் ஆகிய ஊர்களில் வசூலிக்கப்பட்ட வரிகளை மேற்படி சிற்றரசனின் பாட்டன் பாட்டன் தானமாக வழங்கினர் அவற்றினை மீண்டும் உறுதி செய்து திருவோத்தூர் இறைவனின் பூசை மற்றும் இதர வழிபாட்டிற்காகவும் வழங்கியுள்ளான். கல்வெட்டு : 1. ஹி ஸ்ரீ2௯ கதி முன்னாக தி, ௮௯, வதிகள் ஸ்ரீமாஜமாஜ ஜேவற்கு வற்கு யாண்டு பதினாலாவது 2. ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து காசிரம்பேடு நாட்டு மாவண்டுரேரிவாய்ப் 3. பற்றில் சிற்றியாற்றூர் நஞ்செய் புஞ்செய் விளைநிலத்தின் னெல்லை மற்றுமுடையார் திருவோத்தூருடை- 4. ய நாயனார்க்கு ஜேவலாநமாக அனைத்தாயமுமுள்பட விட்டேன் செங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன்
41
10.
12.
18.
14.
. எதிரிலிசோழச் சம்புவராயனேன் இன்னாயனார் ஜேவலாநங்களான திருவோத்தூரும்
வயலூருங் கன்றியமும்
. ஸ்ரீகாழிநாடன் விளாகமுஞ் சிராயம்பட்டும் அண்டிலியும் திருநந்தா
விளக்குப்பட்டி திருநாமத்துக்காணியான
. அனுக்காவூர் நிலமொரு வேலியுமிருங்கலை நிலமுமொரு வேலியுந்
தவசிபெரும்பாக்கத்து நிலமரையே
. நாலுமாவு முள்ளிட்ட துணி நிலமுட்பட்ட ஜேவலாநங்களில் வெட்டி தனியாட்
கண்காணியெடுத்துக் கொட்டியரிமுக்கை
௨யுள்ளிட்ட நெல்லாயங்களுங் காசாயங்களும் வேலிப்பற்று தரப்படியரிசி
காசந்தராயம் நெல்லந்தராய முள்ளிட்டன கொல்லைப் புஞ்சை யேரிமீன் பாட்டமும் மாவடையு மாசுவிகள் பேர்க்கடமையுமாக கணக்கவரி யுவச்சன்பேர்க்கட-
மையும் அச்சுத்தறியுஞ் சாலியர் மனைத் தறியும் வாணிகர் பேர்கடமையுஞ் செக்குக் கடமையு மிலைவாணிகர் பேர்க்கடமையு
மினவரியுங் கோலியத்தறிக் கடமையுள்ளிட்டன வெப்பேர்ப்பட்டனவு முடையார் திருவோத்தூருடைய நாயனார் வஜெெக்கும்
திருப்பணிக்குமுடலாக பாட்டன் பாட்டன் விட்ட ஹாமநப்படியே “ ஸிலாலேகெ பண்ணிக்குடுத்தேன் செங்கேணி
வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலிச்சோழச் சம்புவராயனேன் உ இது பன்மாஹேறாற ஈகக்ஷெ॥ ௨
42
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 26/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 15 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1291 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 83/1939-40 தமிழ் முன் பதிப்பு 3 ௬
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 25
மூன்றாம் இராசராசன்
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர். கல்வெட்டின் முன்பகுதி கட்டடத்தூண்களில் மறைந்துள்ளது. வெண்குன்றக் கோட்டத்து பெருநகர் நாட்டு அத்தி எனும் கேரளாந்தக நல்லூர் ஊரைச் சார்ந்த வேலைக்காரப் பெண்களில் (பரிக்கிரகத்து நிலை உடைய பெண்டுகள்) வம்புபழுத்தாள் மகள் நாச்சி என்பவள் திருவோத்தூர் கோயிலில் திருநந்தாவிளக்கு எரிக்க 30 பசுக்களைத் தானமாக வழங்கியுள்ளாள்.
கல்வெட்டு :
௨ வந வ௯,வத்திகள் ஸ்ரீமாஜமாஜ சேவற்க்கு யாண்டு ௰ரு ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு ஆளுடையார் திருவோத்தூ . . . ண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டு அத்தியாந கேரளாந்தக நல்லூற்ப் பரிக்கிரகத்து நிலை உடைய பெண்டுகளில் வம்புபழுத்தாள் மகள் நாச்சி வைத்த திருநு . . .
. க்கு செல்வி ராசகேசரியாலே நித்தப்படி உழக்கு நெய் கோயிலிலே அளக்கக் கடவேநாக இவ்வூரில் இருக்கும் இடையன் கீரந்தை திருவாய்க்குலம் மணவாளக்கோ . . .
௨ பசு. ௩௰ முப்பதும் கைக்கொண்டு சந்திராதித்தவரை செலுத்தக் கடவேன் மணவாளக்கோநேன் இவை எந்எழுத்து இத்ய22 பன்ாஹேனறாற ஈக இத்திரு . . .
கைக்கு இட்ட பித்தளை நிலை விளக்கு ஒன்று ॥ உ
43
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 27/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1292 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 112/1999-40 மொழி : தமிழ் முன் பதிப்பு *, :* எழுத்து : தமிழ்
அரசு : சோழர் த் ஊர்க் கல்வெட்டு எண்: 26
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : இக்கல்வெட்டின் இறுதி வரிகள் கட்டடப்பகுதிக்குள் மறைந்துள்ளன. திருவோத்தூருடைய நாயனார் திருமேனிக்கு மேற்பூச்சு பூச நாள் ஒன்றுக்குத் தேவையான சந்தனம், ஆராதனைக்கு கற்பூரம் ஆகியவற்றினை வழங்கவேண்டி செங்கேணி அத்திமல்லன் சம்புவராய நாயன் எனும் எதிரிலிசோழச் சம்புவராயன் என்பவன் 12000 காசுகள் அளித்துள்ளான். இக்காசுகளை மூலதனமாகக் கொண்டு, இதனின் வட்டியிலிருந்து மேற்படி சந்தனம், கற்பூரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹி ஸ்ரீ2௯ கீத்தி முன்னாக திரில-வந அ௯,வத்திகள் ஸ்ரீமாஜ-
மாஜஜேவற்கு யாண்டு பதினாறாவது திருவோத்தூ கடையாயது-
க்கு ஆட்டைக்கு இறுக்கும் காசு 0௨ இக்காசு பன்னிராமிரத்துக்-
௨ கும் மாஸந்தோறும் . . . ங் காசுக்கு சந்[த]நமுங் கற்பூரமுங்
கொண்டு உடையார்] திருவோத்தூருடைய நாயனாற்கு திருமேற்-
6. பூச்சுங் கற்பூரமுஞ் சார்த்தி அருள இவ்வாண்டை மார்கழி மாஸ முதல் விட்ட-
கூ வே 03
7. மைக்கு சிலாலேகை பண்ணிக் குடுத்தேன் செங்கேணி அத்திம-
8. ல்லன் சம்புவராய நாயனான எதிரிலிசோழச் சம்புவராயநேன்
44
. இது பன்மாஹேனாற ஈகக்ஷ . இக்கல்வெட்டுப்படியே . . . . காசு கைக்கொண்டு ய. . . ் தனெண்றுக்கு புக்க
. இடுவதாக பொலியூட்டாக இ . ... . தோம் இப்படிக்கு இவை . . .
45
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 28/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1292
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 89/1900
தமிழ் முன் பதிப்பு : 7/98 (தெ.க.தொ.)
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 27
மூன்றாம் இராசராசன் வேதபுரீஸ்வரர் கோமில் முன்மண்டபம் கிழக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் இறைவனுக்கு ஆவணித் திருநாளன்று நடைபெறும் பூசைக்கும், அமுதுக்கும், திருவிளக்கெண்ணைக்கும் மற்றும் இதர தேவைகளுக்காக வெண்குன்றக் கோட்டத்து வாதவூர் நாட்டு மங்கலம் என்னும் ஊரில் உள்ள நன்செய், புன்செய் நிலங்களின் மீதான விதிக்கப்பட்டிருந்த விகள் அனைத்தும் இக்கோயிலுக்குத் தேவதானமாகச் செங்கேணி அத்திமல்லவன் சம்புவராயன் எனும் எதிரிலிச் சோழ சம்புவராயன் அளித் துள்ளான்.
1. ஷுிஸ்ரீ ஸ்ரீ2௯க்கி முன்னாக [கி] வலக, வதிகள் ஸ்ரீமாஜமாஜசேவற்கு
2. யாண்டு பதினாறாவது உடையார் திருவோத்தூருடைய நாய-
9. னார் பூசந்தீதமாக திருஆவணித் [தி]ருநாளெழுந்தருளியருள
4, பூசைக்குமமுதுபடிக்குந் திருவிளக்கெண்ணைக்கும் ம-
5. ற்றும் வேண்டுவனத்துக்குமாக வெண்குன்றக் கோ-
6. [ட்]டத்து வாதவூர் நாட்டு மங்கலந் தன்னெல்லை முற்றும்
7. நஞ்செய் புன்செய்க் கடமைகளு மிவ்வூர் வெட்டி தனியாட்
8. சிறுபாடிகாவல் கண்காணி அரிமுக்கை யெடுத்துக்-
46
கொட்டி யுள்ளிட்ட நெல்லாயமுங் காசாயமுஞ் செக்குக்கட- . மை வாணிகர் பேராற்கடமை சாலிகர் அச்சுத்தறி கோலியத்தறி
இனவரி உள்ளிட்ட கடமைகளும் ஏரிமீன்பாட்டமும் மாவடை
, யுள்ளிட்ட கடமைகளுங் குற்றத்தெண்டம் பட்டித்தெண்- . ட முள்ளிட்டனவு முட்பட ஜேவலாநமாக விட்டு மிலாலேகெ . பண்ணிக்குடுத்தேன் செங்கேணி அத்[தி]மல்லன் சம்புவ-
. ராய நாயனான எதிரிலிசோழச் சம்புவராயனேன்
47
த.நா.அ. தொல்லியல் துறை
தொடர் எண் :- 29/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததி 1 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1288 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 106/1989-40 மொழி : தமிழ் முன் பதிப்பு. ந எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 28 அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் சன்னதி தெற்க்குச்சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நாயனார் கோயிலுக்கு எதிரிலிச்சோழ சம்புவராயர் காலியூர்க் கோட்டத்துப் பெரும்புலியூர் நாட்டு ஏரிவாய்ப்பற்று சிற்றியாற்றூர் ஊரினைத் தேவதானமாக வழங்கியதை, விக்கிரமசோழச் சம்புவராயன் பொறுப்பு ஏற்ற பின்னர் சோமங்கலம் ஊரைச் சார்ந்த தாமோதரன் பெருமானடி நாயக்கன் நாயன் என்கிற கண்டகோபாலர் சிற்றரசனிடம் முறையிட்டு, சிற்றியாற்றூர் ஊரில் பாதிமினைத் தேவதானமாகவும், மீதிப் பாதியை புட்பகிரிசீயர் மடத்தில் வெளியூர்களிலிருந்து வரும் சிவனடியார்கள் உணவருந்த மடப்புறமாகவும் வழங்கிட ஆணை பெற்றுள்ளான். மேலும், வீரப்பெருமாள் எனும் எதிரிலிசோழ சம்புவராயரும் இதற்கு அனுமதியளித்துக் இக்கோயிலில் கல்வெட்டு
வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ உடையார் திருவோத்தூருடைய நாயனாற்குத் தேவதானமாக எதிரிலிசோழச் சம்புவரா-
2. யர் குடுத்த காலியூர்க் கோட்டத்துப் பெரும்புலியூர் நாட்டு ஏரிவாய்ப் பற்றுச்
சிற்றியாற்றூரை
8. [வி]க்கிரமசோழச் சம்புவராயர் மாறுகையில் சோமங்கலமுடையான் தாமோதரன்
பெருமானடி
4. நாயக்கன் நாயநான கண்டகோபாலர் விண்ணப்பன் செய்து தேவதானம்
பாதியும் புட்பகிரிச் சீயர் மடத்திலே
5. தேசாந்திக்கள் மாஸேயுறற்கு அன்னமிட மடப்புறம் பாதியுமாகத் திருமுகம் வாங்கித் தந்தபடியே வீ-
48
6. ரப்பெருமாளான எதிரிலிசோழச் சம்புவராயருமிப்படி திருமலையிலே கல்வெட்டுவிப்பதென
7. திருமுகந் தருகையாலே ஸ்ரீஇராசராச தேவற்குப் பதினேழாவது தை மாஸ முதல் சந்தராதித்த- 8. வரை செல்வதாக ஸ்ரிலாறோவெ பண்ணித்து ஐது வராஹேறாற றக
49
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 30/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை . :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 19
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1285
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 84A/1900
தமிழ் முன் பதிப்பு ' : 7/98 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 29
மூன்றாம் இராசராசன் வேதபுரீஸ்வரர் கோமில் முன்மண்டபம் தெற்க்குச் சுவர்.
விளத்தூர் ஊர்த்தலைவன் செந்தாமரைக் கண்ணன் தொண்டைமானா் என்பவன் வெண்குன்றக் கோட்டத்து கோவலூர் நாட்டு செங்காடு ஊரில் 2015 குழி நிலத்தின் மூலம் வரிகளாக வசூலிக்கப்படும் நெல் மற்றும் காசுகள் ஆகிய வருவாமினைக் கொண்டு திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலில் இவர் குடுத்த இரண்டு குத்துவிளக்குகள் திருநுந்தா விளக்காக ளரிப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளான். இவ்வரிவருவாமினை மூலதனமாகக் கொண்டு திருநந்தா விளக்கு தொடர்ந்து எரிப்பதாக திருவுண்ணாழிகைச் சபையார் சம்மதித்துள்ளனர்.
1. ஹஸி ஸ்ரீ2கிதி முன்னாக தி,லவநவுசூவதிகள் மாஜமாஜேவற்கு
யாண்டு ௰[௯]வது உடையார்
2. திருவோத்தூருடைய நாயனார்க்கு விளத்தூர் கிழவன் செந்தாமரைக்கண்ணன்
தொண்டைமானார் [வ]£-
9. ர்ப்பித்துக் குடுத்த திருக்குத்துவிளக்கு இரண்டி லெரியுந் திரு நுந்தாவிளக்கு
இரண்டுக்கு நிலக்கடமை
4. கொண்டு உலய மெ[ரி]*க்க இவரிடுவித்த வெண்குன்றக் கோட்டத்துக்
கோவலூர் நாட்டுச் செங்காடுச் சிற்றேரி-
8. தீதூம்பு நீர்வதியில் விழுந்த காலுக்கு கிழக்கு முடொங்கு குழி உ௱ரு௰
இதன் வடக்கு வானிகுண்டில் குழி ஈசுமரு இதன் வட[க்]*கு குமி-
50
6. ழ்பட்டி தடி இரண்டினாற் குழி சுா௪மஎ இதன் மேற்கு பல்லிகுண்டில் குழி உ௱௩௰ இதன் வடக்கு கேசவவிளாகங் குழி ௪௱௪௰ இதன் வடக்கு
7. பொன்னன்குண்டில் குழி ஈச௰௩ இதன் வடக்கு ஆளுடையான்குண்டில் குழி ஈ[௪]௰ ஆக குழி ௨௲யரு இன்னிலத்தால் வந்த கடமை-
8. யும் வெட்டியுள்ளிட்ட நெல்லாயமுங் காசாயமுமுட்படத் தந்த [தி]ருமுகப்படியே இந்த வுடல் கைக்கொண்டு வ,ாசிதுவரை செ-
9. ல்வதாக மிலாலேணனெ பண்ணிக்குடுத்தோம் திருவுண்ணாழிகை ஸலெயோம் இது பன்மாஹேறாற றக்க ॥
51
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 31/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1996
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 90/1900
மொழி தமிழ் முன் பதிப்பு : 7/99 (தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 30
அரசன் மூன்றாம் இராசராசன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : குளமுக்கில் கண்டன் ஏறநம்பி செட்டி என்பவனிடமிருந்து பொன் பெற்றுக்
கொண்டு 1050 குழி நிலத்தினை வாங்கி முதலீடாகக் கொண்டு இந்நிலத்தின் கடமை, நெல் ஆயம், காசு ஆயம் போன்ற வரிகளைக் கொண்டு திருவோத்தூர் இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கு தொடர்ந்து எரித்திட இக்கோயில் தானத்தார் உறுதியளித் துள்ளனர்.
கல்வெட்டு :
1
2. 3. 4,
ஹவிஸ்ீ தி_லவமவக,(ர)வத்திகள் ஸ்ரீமாஜமாஜகேவர்[க்]*கு யாண்டு ௨௰-வது
உடையார் திருவோத்தூருடையாற்கு குளமுக்கிற் கண்டன் ஏறநம்பி செட்டி வைத்த திருநுந்தாவிளக்கு ௧-க்கு திருமுகங்கொண்டு பொன்னிட்டுக் கொ-
ண்டு விட்ட வாட்குடையில் வடகழனியில் வதிமேலைச்செறு குழி உருமி இதன்
- தெற்கு மேற்படி திருவோத்தூருடையான் குழி ஊரும் இதன் மேற்கு
ஆரணதியா-
கி குழி ௪௱ இதன் தெற்கு காமக்கோடி குழி ஈரும் ஆக குழி ரும-துக்குமுள்ள ௧-
, டமையும் நெல்லாயமுங் காசாயமுங் கைக்கொண்டு சந்திராதித்தவரை
- செலுத்தக்கடவோம் இக்கோயிற் தேவகந்மிகளோம்
வில்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 32/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1296
வார் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 91/1900
மொழி தமிழ் முன் பதிப்பு : 7/100 (தெ.க.தொ.)
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 31
அரசன் மூன்றாம் இராசராசன்
இடம்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : குளமுக்கில் கண்டன் ஏறநம்பி செட்டி என்பவன் திருவோத்தூர் இறைவனுக்கு
“தப்பாமொழி” என்னும் பெயரில் நந்தவனம் ஒன்று அமைக்க 520 குழி நிலம் தானமளித்துள்ளான். இந்நிலத்தின் மீதான இறுக்கப்படும் வரிமினைக் கொண்டு இந்நந்தவனத்தில் பூமரங்கள் வைத்து நாளொன்றுக்கு ஒரு குறுணி அளவு பூக்கள் அளக்க அழகியசீயன் சம்மதித்துள்ளான்.
கல்வெட்டு :
1 2. 3. 4.
ஸ்ரீ இராசராச தேவற்கு யாண்டு ௨௰(து) ஆவது குளமுக்கில் கண்ட[ன்] ஏறநம்பிசெட்டி உடையார் திருவோத்தூருடைய நாயநாற்குத் தி- ருநந்தவனஞ் செய்ய வாட்குடையில் வடகழனியில் வதிக்கு கிழக்கு
பொன்னிட்டுக் கொண்டு விட்ட வீரப்புலியந் தடி [மி]ரண்டினாற் குழி ருஈ௨௰
. இ[ந்]*நிலத்தால் வந்த கடமையுமனைத்தாயமுங் கைக்கொண்டு தப்-
பாமொழி நந்தவனத்து பூமரம் வைத்து நாளொன்றுக்கு குறுணித் திரு-
. ப்பள்ளித்தாமமளக்க[க்]*கடவேன் அழகியசீயனேன்
33
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 33/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 21
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1287
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 84/1900
தமிழ் முன் பதிப்பு : 7/92 (தெ.க.தொ.)
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 32
மூன்றாம் இராசராசன் வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவர்.
உத்தரன்மேலூர் ஊரில் அருமொழித்தேவப் பெருந்தெருவில் வசிக்கும் வியாபாரி கருமவூர் வழக்கன் திருவேகம்பமுடையான் திருப்புலிவனம் உடையார் என்பவன் திருவோத்தூருடைய நாயனார் கோயிலுக்குக் கொடுத்த 150 பலம் எடை கொண்ட மூன்றுநிலையுடைய குத்துவிளக்கு திருநந்தாவிளக்காக எரிய, சோற்றுப்பாக்கம் ஊரில் உள்ள 1000 குழி நிலத்தினை அறக்கட்டளையாக ஏற்படுத்தி, இந்நிலத்தின் மீது பெறப்படும் வரிகள் மூலம் எரிக்க வழிவகைச் செய்துள்ளான்.
1. ஷுஷி ஸ்ரீ 2௯கிதி முன்னாக தி,ல-வவுகூவதிகள் ராஜறாஜசேவற்கு
யாண்டு ௨௰[க]வது உடையார் திருவோத்தூருடைய நா-
2. யனார்க்கு உத்தரன்மேலூர் அருமொழிதேவப் பெருந்தெருவில் வியாபாரி
கருமவூர் வழக்கன் திருவேகம்பமுடையான் திருப்புலிவன-
3. முடையானேன் குடுத்த மூன்றுநிலைக் குத்துவிளக்கு பாதமுட்பட இடை
ஈரும-ல இதிலெரியுந் திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு
4. பொன்னிட்டு கொண்டு வி[ட்]*ட நிலக்கடமை கொண்டு உலயமெரிக்க
வெண்குன்றக்கோட்டத்துச் சோற்றுப்பாக்கத்து தலைவரிசைப் பற்றிற் தி-
5. றுமார்பனும் தினைச்செறுவும் புதுச்செறுவும் பனஞ்செறுகுண்டிலுட்படத்
6. வந்த!
தடி நாலினாற் குழி ஐ இக்குழி ஆயிரத்தால்
1. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
54
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 34/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 9
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1259
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 117/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு : (தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : தெலுங்குச்சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 33
அரசன் : விசைய கண்ட கோபால்ன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : கூடலாளப் பிறந்தார் காடவராயரின் தேவியாரும், உடையாழ்வார் என்பாரின் மகளுமான மீட்டாண்ட நாச்சியார் என்பவள் செயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு காழியூர் ஊரவரிடம் 6000 குழி நிலத்தினை “விலைக்கு வாங்கி, திருவோத்தூர் கோமிலில் உள்ள எம்பெருமக்கள் மூவர் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்) வழிபாட்டிற்குத் தேவையான அமுதுபடி, பூசை, சாத்துப்படி, பூச்சுப்படி, திருவிளக்கு ஆகியவற்றிற்கு மூலதனமாக பயன்படுத்திக் கொள்ள இந்நிலத்தினை திருநாமத் துக்காணியாக தானமளித்துள்ளாள். கல்வெட்டு : 1. ஷுஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவிசையகண்ட கோபா- 2. ல மேவற்க்கு யாண்டு ௯ ஆவது கூடலாளப் பிறந்தார் காடவராயார் நம்பிராட்டி-
யார் உடையாழ்வார் மகள் மீட்டாண்ட நாச்சியாரேன் செயங்கொண்ட-
Hm ந] .
. சோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டு காழியூர் ஊரவர் எனக்-
ச. கு விற்ற பிரமாணப்படி எழுபதின் கலவரிசை பற்றில் அரைமனைப் பெருஞ்செறுக் குழி ௯-
6. சுக ம் கீழை வாழை தோட்டங் குழி சஈஎ௰ ம் புங்கன் குழி எ௱ஈக ம் ஏரிகீழ் ஏரிப்பட்டி குழி ஐ-
னி
7.
10.
12.
18.
15.
௪ மங்கலச் செறுக் குழி ௪௱ருமகவ ம் அறுபதின் கலவரிசைப் பற்றில் வரிச்சாமை குழி ௪௱௰௮ ம்
. குசவன் செறு குழி ௩ாஅய௮ ம் பிராங் குண்டில் குழி ஈ௩யசு ம் கல்லன்
குழி ஈ௯ ம் உழுதஞ்செறு
. குழி சாரு ம் மேற்படி குண்டில் குழி உ௱ரும ம் மடுவன் குழி ஈ௰௯
ம் கல்லன் குழி ௯௰௩ இகுண்டில் குழி ௱௩௰௨ ம் குண்டில் குழி ௫௰எ இதன் மேற்படி குண்டில் குழி ருமரு ம் தூம்படி குண்டில் குழி ௩
. மே ஆக குழி ஆறாமிரமும் உடையார் திருவோத்தூருடைய நாயநார்
கோமில் எம்பெரு-
மக்கள் மூவற்க்கும் அமுதுபடிக்கும் பூசைக்கும் சாத்துப்படி பூச்சுபடி திருவிளக்குக்கும் உட-
லாக திருநாமத்துக்காணி ஆக கொண்டு விட்டேன் கூடல் ஆளப்பிறந்தார் நம்பிராட்டி-
யார் மகள் மீட்டாண்ட நாச்சியாரேன் இது பன்மாஹேறற ஈக ௨
திருவீரட்டான முடையா . . ௬ுடையான் பெரியநாயன் சிவதனப் பெருமாளும் இவ்வ
னை ச
56
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 35/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 80
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1268
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 83/1900
தமிழ் முன் பதிப்பு : 7/91 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
பிற்காலப் பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 34
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவர்.
சாந்தாநிக சைவாசார்ய காஞ்சிக்குறி திருவேகம்பமுடையார் என்கிற ஏகாம்பிரபட்டர் என்பவரிடமிருந்து திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் திருநந்தா விளக்கு ஒன்று எரிக்க திருவுண்ணாழிகைச் சபையார் 24 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க உடன்பட்டுள்ளனர்.
1. ஹஸிஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவற்க்கு யாண்டு ௨௰ தாவது ஸாஸஷாநிக
சைவாவாயஷ. காஞ்சிக்குறி திருவேகம்பமுடையாரான
. ஏகாம்பிர பட்டர் உடையார் திருவோத்தூருடைய நாயநா[ர்]*க்கு வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு பசு முப்பத்து இரண்டுக்கு இ-
. கீகோயில் திருவு[ண் ]*ணாழிகை ஸலெயோம் இவர் பக்கல் கை(ய்)[க்]*கொண்ட பொன் இருபத்து நாற்கழஞ்சு இப்பொன் இருபத்துநாற்-
. கழஞ்சும் கையற கைய்[க்]*கொண்டு இத்திருனுந்தாவிளக்கு ஒன்றும் வ ாதிதைவரை செலுத்தக்கடவோம் திருவுண்ணாழிகை ஸ்லெயோம் இவை தில்லைநாயகபட்டன் எழுத்து இவை சாதஸ்றிவபட்டன் எழுத்து இவை திருவிக்கரமபட்டன் எழுத்து இவை ஜேவமிவாஊணி
. பட்டன் எழுத்து இது ஸ்ரீகாஹேசுற மலை!
57
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 36/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 22
வட்டம் : செய்யாறு . வரலாற்று ஆண்டு : கியி. 126
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 95/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/04 (தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : பிற்காலப் பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 35
அரசன் : கோப்பெருஞ்சிங்கன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : மூன்றாம் குலோத்துங்கனின் 17-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1195) அனுப்பத்தூர் அகம்படிப் பெண்களில் களப்பாள நாச்சி என்பவள் திருவோத்தூர் நாயனார் கோயிலில் இரண்டு திருநந்தாவிளக்கு எரிக்க அளிக்கப்பட்ட 2000 குழி நிலத்தினை, வெண்குன்றக்கோட்டத்து அனுக்காவூர் நாட்டு அனுக்காவூர் எனும் இராஜராஜ நல்லூர் ஊர் நிர்வாகத்தினர் களப்பாள நாச்சியின் மகள் வீரப்பெருமாள் நாச்சி என்பவளிடமிருந்து இரண்டாயிரம் காசுகள் பெற்றுக்கொண்டு திருவோத்தூர் கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாக விற்றுக் கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ கோப்பெருஞ்சிங்கதேவற்கு யாண்டு ௨௨-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து அனுக்காவூர் நாட்டு அனுக்காவூரான
2. ஈாஜாாஜநல்லூர்க் காணி[உ]*டைய கீ[ழ்]ப்பாக்கிழான் பெரியாந திருவோத்தூருடையானுள்ளிட்டாரும் எநந்தை உடையாந் செங்க னுள்ளிட்டாரும் அனுக்காவூர் கிழவன் மலையன் சடைய-
3. னள்ளிட்டாரும் கீரந்தை ம[லை]யந் தேவனுள்ளிட்டாரு மிவ்வனைவோம் ஊர்க்குச் சமைத்து நிலவிலையாவணக் கையெழுத்து முன்னாளில் ஸ்ரீகுலோத்துங்கசோழ ேவற்கு யா-
58
4. ண்டு பதினேழாவது நாளில் உடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு வைத்த திருநுந்தாவிளக்கு இரண்டுக்கும் அனுப்பத்தூரகம்படிப் பெ[ண்]டுகளிற் களப்பாளநாச்சி திருமுகங் கொ-
5. ண்டு எங்களூரிற் [த]டி உள்வரிப்படி விடுவித்த நிலம் திருவானைக்கா குழி ௲உ௱௫௰ரு-ம் இதன் மேற்குமுடொங் குழி ௨௱௨௰க-ம் [இ]தன் தெற்கு அரசசெறு குழி ருர௨௰௯-ம் ஆக தடி மூன்றினா-
6. ற் குழி இரண்டாயிரமுந் திருநாமத்துக்காணியாக சூதிராஸஹவணேணாறற்கு விற்றுக்குடுக்க இவள் மகள் வீரப்பெருமாள்நாச்சி பக்கல் நாங்கள் கை[க்]கொ-
7. ண்ட கா[சு] ௨] இக்காசு இரண்டாமிரமுங் கைக்கொண்டு இத்தடி மூன்றினாற் குழி இரண்டாமிரமுந் திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்று கல் வெட்டிக் குடுத்தோம்
8. அனுக்காவூர் ஊரோம் இவள் வேண்ட எழுதிநேன் ஊற்கணக்கன் பட்டன் எழுத்து இவை கீழ்ப்பாக்கிழான் எழுத்து இவை எனன்தை எழுத்து இவை அனுக்காவூர் கிழவன் எழுத்து
9. இவை கீரன்தை எழுத்து இது பந்மாஹேற ஈகி [॥]*
59
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 37/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27 செய்யாறு வரலாற்று ஆண்டு : கிவி. 1277 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 93/1939-40 தமிழ் முன் பதிப்பு :
தமிழ்
தெலுங்குச் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 36
விசையகண்ட கோபாலன் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலைச் சார்ந்த தேவரடியார் உண்ணாமுலையார் என்பாளின் மகள் சம்பா என்பவள் இவ்வூரில் அவள் எடுப்பித்த கானகர் செல்வி அம்மை (கொற்றவை) வழிபாட்டுக்கு நிலம் வேண்டி, செங்கேணி வீராகரன் ஆளப்பிறந்தார் என்கிற இராசராச சம்புவராயரிடம் முறையிட்டாள் புலியாடு பெரும்பாக்கத்தில் 2000 குழி நிலத்தினைப் பிடாரி படம் (பிடாரி பட்டி) தானமாக இராசராச சம்புவராயர் வழங்கியுள்ளார்.
1. ஹஹிஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவிசைய கண்டகோபால தேவற்க்கு
யாண்டு இருபத்தேழாவது உடையார் தி-
2. ௬வோத்தூ(£) ருடைய நாயனார் கோயிற் தேவரடியாள் உண்ணாமுலையார்
மகள் சம்பா இவ்வூர்க்கு எழுன்தருளுவித்த
8. கானகரை செல்வி அம்மைக்கு இருபத்தேழாவது மாசி மாதம் நாயனார்
ஆளப்பிறன்தார் ஆன இரா[ச]ரா[ச]ச் சம்புவராயர்க்கு வி-
4. ண்ணப்பஞ் செய்து திருமுகம் வாங்கிக் குடுத்த புலியாடு பெரும்பாக்கத்தில்
பெரிய ஏரிப்பற்றில் அறுபதின் கலவரிசைப் ப-
5. ற்றில் பிடாரி படம் ஆக வாங்கிவிட்ட அரசன்செறுக் குழி முன்னூற்று
அறுபத்தெட்டும் கதம்புலி முன்னூற்று
60
6. முப்பத்தாறும் திரைப்பட்டிக் குழி நூற்று நாற்பத்தேழும் மேற்படி செறுக்குழி நூற்று நாற்பத்தேழும் குண்டில் குழி
7. நாற்பத்து நாலும் புளியஞ் செறு குழி முன்னூற்று ஒருபத்திரண்டும் குணமன் குண்டில் குழி நூற்று ஐம்பத்து மூன்றும் இ-
8. தன் வடக்கு குண்டில் குழி ஐம்பத்திரண்டும் மானப்புலி குழி நூற்று [அ]ருபத்தெட்டும் செப்புச்செறு குழி நூற்றிருபத்தெட்டும்
9. அத்தி வட்டம் குழி நூற்று நாற்பத்தைஞ்சும் ஆக குழி ௨௯ இக்குழி இரண்டாமிரமும் இருபத்தேழாவது மாசி மாதம் பொன்வரி-
10. யும் ஆயமும் நீக்கி காசு கடமை உள்பட்ட காசாயமும் வெட்டி தனிஆள் எடுத்து கொட்டி அரிமுக்கை உள்ளிட்ட நெல்லாய-
11. ங்களும் உள்பட்ட பிடாரி படம் ஆக விட்டேன் செங்கேணி வீராகரள் ஆளப்பிறந்தாராந இரா[ச]ரா[ச] சம்புவராயந்னேன் இ-
61
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 38/2017
மாவட்டம் வட்டம் ஊர் - மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1277 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 108/1939-40 தமிழ் முன் பதிப்பு $2
தமிழ்
தெலுங்குச் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 37
விசைய கண்ட கோபாலன் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
செங்கேனி வீரப்பெருமாள் கண்டகோபாலன் எனும் குலோத்துங்கசோழச் சம்புவராயன் என்பவன் திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் இரண்டு திருநுந்தா விளக்கு எரிப்பதற்கு வெண்குன்றக் கோட்டத்தில் வெண்குன்றம் ஊர் நிலத்தில் 2087 குழி நிலத்தினைத் திருநுந்தா விளக்குப்பட்டியாக வழங்கியுள்ளான். அந்நிலத்தின் வரிவருவாயைக் கொண்டு விளக்கெரிக்க வழிவகைச் செய்துள்ளான்.
1. ஹஹிஸ்ரீ தில-வன ௮சூவத்திகள் ஸ்ரீவிஜயகண்டகோபால தேவற்கு யாண்டு
இருபதே-
. ழாவது கன்னி நாயற்று ஷஷியும் திங்கள் கிழமையும் பெற்ற காத்திகை நாள் உடை-
யார் திருவோத்துருடைய நாயனார்க்குச் செங்கேணி வீரப்பெருமாள் கண்டகோபால--
. நான குலோத்துங்கசோழச் சம்புவராயநேன் வைத்த திரு நுநீதாவிளக்கு இரண்டுக்கு வெண்-
.. குன்றக்கோட்டத்து வெணச்குன்றத்தில்(க்) குடிநீங்காத திருநுந்தாவிளக்குப் பட்டியாக விட்ட
... எண்பதின் கலவரிசைப் பற்றில் ஏரிப்பட்டி கிணறுட்படக் குழி அறுநூற்று முப்பத்தொன்றும் பெரி- 62
7. ய நெச்செறுக் கிணறுட்படக் குழி அறுநூற்றறுபத்தாறும் செட்டேறன் பள்ளம் குழி எழுநூற்-
8. று நாற்பதும் ஆகக் குழி ௨ஐ௩௰எ இக்குழி இரண்டாயிரத்து முப்பத்தேழாலுள்ள கடமையு-
9. ம் வெட்டி தனிஆள் பாடிகாவல் கண்காணி எடுத்துக்கொட்டி அரிமுக்கை உள்ளிட்ட ஆயமும் பொ-
10. ன்வரி காசுகடமை முள்ளடி இரட்டைக்காசு உள்ளிட்ட காசாயமும் நெல்லாயமு[ம்] உடையார் திருவோத்-
11. தூருடைய நாயனார்க்குக் குடுத்தேன் செங்கேணி வீரப்பெருமாள் கண்ட கோபாலனான குலோத்துங்க சோ-
12. ழச் சம்புவராயநேன் இது பன்மாஹேஸ்ரற றகக்ஷ உ
63
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு : 1. ஹஹிஸ்ீ திருவாய்க்கேழ்வி முன்னாக திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீவிசைய கண்ட கோபால தேவற்கு யாண்டு
2. இருபத்தெட்டாவது உடையார் திருவோத்தூருடைய நாயனார் கோயிலிற் தேவர்அடியாள் அடைஞ்சாடை
3. க காத்தாள் மகள் செய்யாண்டை ஆன சம்புவராய நாச்சி திருவோத்தூருடைய நாயனார் கோமிலுக்கு எழு-
4. நீதருளுவித்த சுப்பிரமண்ணியப் பிள்ளையார்க்கும் நாச்சிமார்க்கும் நாயனார் ஆளப்பிறந்தார் ஆன இரா[ச]ராசச் சம்புவரா-
5. யர்க்கு விண்ணப்பஞ் செய்து இருபத்தெட்டாவது ஆடிமாதம் திருமுகம் வாங்கிக் குடுத்த அனுக்காவூர் எண்பதின் கலவரி-
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு செய்யாறு வரலாற்று ஆண்டு திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: தமிழ் முன் பதிப்பு
தமிழ்
தெலுங்குச் சோழர் ர்க் கல்வெட்டு எண்:
விசையகண்ட கோபாலன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் பணிபுரியும் தேவர் அடியாள் அடைஞ்சாகை காத்தாள் மகள் செய்யாண்டை எனும் சம்புவராய நாச்சி என்பவள் இக்கோயிலில் எழுந்தருளுவித்த சுப்பிரமணியர் மற்றும் தேவியர்கள் வழிபாட்டிற்குத் தேவதானமாக நிலம் வழங்கிட இராசராச சம்புவராயரிடம் முறையிட்டாள். இதற்காக அனுக்காவூரில் உள்ள இரண்டாயிரம் குழி நிலத்தின் மீதான பொன்வரி மற்றும் கடமை அல்லாத பிற வரிகள் : அனைத்தும்
தொடர் எண் :- 39/2017
28 கிபி, 1278
95/1939-40
வழிபாட்டிற்கு இராசராச சம்புவராயர் தேவதானமாக வழங்கியுள்ளார்.
64
6. சைப் பற்றில் குடிநீங்காத தேவதானமாக விட்ட எதிரி(த)[க] னாயன் குழி ஆயிரத்து நானூற்று நாற்ப்பதும் திரியமுடையா-
7. னில் கிழக்கடைய குழி ஐஞ்னுற்று அறுபதும் ஆகக்குழி இரண்டாயிரம் இக்குழி இரண்டாயிரத்துக்கும் பொன்வரியு-
8. ம் ஆயமும் ஒழிய அல்லாத அனைத்து ஆயங்களும் காசு கடமையும் உட்பட சம்புவரா[ய] நாச்சி எழுந்தருளுவித்த சுப்பிர-
9. மண்ணியப் பிள்ளையார்க்கும் நாச்சிமார்க்கும் தேவதானமாக குடுத்தேன் செங்கேணி வீராகன் ஆளப்பிறந்தான் ஆன இ-
10. ரா[ச ]ரா[ச ]ச் சம்புவராயன்நேன் இவை என் எழுத்து பன்மாஹேறாற
.ஐஈகக்ஷ உ
65
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை செய்யாறு திருவோத்தூர் தமிழ்
தமிழ்
தெலுங்குச் சோழர்
விசையகண்ட கோபாலன்
தொடர் எண் :- 40/2017
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு : கியி. 18 நூற். இ.க. ஆண்டறிக்கை: -
முன் பதிப்பு 3:
ஊர்க் கல்வெட்டு எண்: 384
தெலுங்குச் சோழர் கண்டகோபாலர் படைத்தலைவர்களில் ஒருவரான பட்டமுடையார் காங்கயர் என்பானின் பேரன் மாதேவிப் பெருமானடி நாயக்கர் என்பவன் இக்கோயிலில் திருவெடுத்து மற்றும் ஓடும் மேய்வித்துள்ளான்.
1. ஷஹுஹிஸ்ரீ நாயனார் கண்டகோபாலர் முதலிகளில்
2. ஹஹஷிய்ீ பட்டமுடையார் காங்கயர் பேரன் 9. மாதேவிப் பெருமானடி நாயக்கர் திருவெடு- 4. தீதுக்கட்டிக்கு ஓடு மேய்வித்தான்
66
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 41/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு :. . கியி 1801 i
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 78/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/86 (தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு 3: பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 89
அரசன் : சடையவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு திருவோத்தூருடைய நாயனார் வழிபாட்டிற்கு, இக்கோயில் பண்டரரத்திலிருந்து திருவோத்தூர் மன்றாடிகளில் வெறுங்கை வென்றான் அல்லாண்டை மகன் ஐஞ்சாதன் என்கிற குழையாகரக் கோனும் இவன் தம்பி பிரமன் என்கிற திருஞானசம்பந்தக் கோன் ஆகிய இருவரும் அறுபது பசுக்கள் மற்றும் இரண்டு காளைகளையும் பெற்றுக்கொண்டுத் தினமும் எட்டு நாழி பாலும், நெய் உரியளவும் கோயிலில் அளப்பதாகச் சம்மதித்துள்ளனர். கல்வெட்டு : 1. ஹவிஸ்ீ கோற்சடபன்மர் திரிபுவனச்ச௯, வதி ஸ்ரீவீரபாண்டியதேவர்க்கு யாண்டு ரு வது 8த-ந நாயற்- 2. று வ௫வபக்ஷத்[து] உ,தமையும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் ஜயங்கொண்ட சோழ 9. மண்டலத்துக் காலியூர் கோட்டத்துக் [கா]ழியூர் நாட்டு உடையார் . திருவோத்தூருடைய நாயனார்- 4. க்கு பாலமுது நெய்அமுதுக்கு திருவோத்தூரில் மன்றாடிகளில் வெறுங்கைவென்றான் அல்- 5. லாண்டை மகன் ஐஞ்சாதானான குழையா[க]ர(த)க்கோனும் என் தம்பி பிரமனான
67
. திருஞானசம்ப[ந்]தக்கோனும் ஸ்ரீபண்டாரத்தில் நாங்கள் கைக்கொண்ட
சாவாமூவா பசு சு௰௪ ம் இ-
, ஷபம் இரண்டும் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு ஆர[ணை ]தியாகியாலே
எட்டு நாழி பாலும்
. உரிய் நெய்யும் நாள்தோறும் என் மக்கள் மக்கள் வழியாக
வா(ஆ )தித்தவரையும் அளக்க[க்]*கட-
. வேன் ஐஞ்சாதான் குழையாகரக்கோனும் பிரமன் திருஞானசம்பந்த[க்]*
கோனு[ம்]* இவ்விருவரோம் இவை குழையா-
. [கரர[க]கோன் எழுத்து இவை திருஞானசம்பந்தக்கோன் எழுத்து இது
பன்மாஹேற க்ஷ
68
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 42/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு $
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 12-18 நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 86/1900
மொழி : சமஸ்கிருதம் முன் பதிப்பு : 7/95 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தம்
அரசு = ஊர்க் கல்வெட்டு எண்: 40
அரசன் 3
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : இக்கோயில் இறைவன் மீது போற்றி பாடப்பட்டுள்ள சமஸ்கிருத சுலோகம். கல்வெட்டு :
ர், ஹெஷாவா௱விகொகிகெ பம கிவீ ரீவாஸாய
2. கா22உஹெ வாயரா2ஸிலாலிறா2ஹஙஸெ ௬டெ
ஹஷெவிஹெ நூ: ஹர காறவசைகி,யாவறி-
[அ ்
2௦ யஷெராவகணெவஸஷழஹெ._ண?கொ-
ஸே D
ஹறெண வவஸஷா வ௫ஷரகி காஓ: வாடு ॥
69
ச.ச... தொல்லியல் துறை தொடர் எண் :- 43/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4 ட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1301 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 115/1929-40 மொழி : தமிழ் முன் பதிப்பு ந ஸு எழுத்து : கிரந்தம் கலந்த தமிழ்
அரசு ் பாண்டியன் ஊர்க் கல்வெட்டு எண்: 41
அரசன் : சூதன்றாம் சடையவள்மன் வீரபாண்டியன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குதிப்புரை : தனியூர் பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) மேலைச்சேரியில் உள்ள ஸ்ரீபதஞ்சலி மகாமுனிதேவன் திருமடம் என்கிற பிக்ஷா மடத்தில் பூசை செய்யப்படுகின்ற விஸ்வேஸ்வர நாயனார் இறைவனின் பூசைக்கும், அமுதுபடிக்கும் மற்றும் மடத்தில் இருக்கும் தபஸ்விகளின் உணவிற்காகவும் வேண்டி ஜயங்கொண்டசோழ மண்டலத்து அத்திப்பற்று அழிபடைத்தாங்கி பற்று நாட்டவர்கள் வெண்குன்றக்கோட்டத்துப் பாரசூர் நாட்டுப் பிரிவில் உள்ள மதுரை எனும் திருவம்பலப் பெருமாநல்லூர் என்னும் ஊரினைக் கொடையளித்துள்ளனர். கல்வெட்டு : 1. ஹற: ஹஹிஸ்ரீ திருவாய்க்கேழ்வி முன்னாக .தில-வன ௮௯ ௯, வத்திகள் ஸ்ரீவீரபாண்டிய சேவற்க்கு யா- 2. ண்டு ௪ வது மீன நாயற்று உ௫வ*வக்ஷத்து கவகியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற பூசத்து நாள் ஜயங்- 3. கொண்டசோழ மண்டலத்து அத்திப்பற்று அழிபடைத் தாங்கிப் பற்று நாட்டவரோம் தனியூர் பெரும்பற்றப் புலி- 4. யூர் மேலைச்சேரி ஸ்ரீ வகஷலி ஷஹோ2-ஸி மேவன் திருமடமான விக்ஷா மடத்துப் பூஜெ கொண்டருளுகிற விஷேறாற நா- 5. யனார்க்குப் பூஜெெக்கும் அமுதுபடிக்கும் மடத்தில் தவஸிகளுக்கும் அசனாவுனங்களுக்கும் உடலாக
70
18.
14,
. மடப்புறமாக நாங்கள் விட்ட இம்மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப்
பாராசூர் நாட்டு ம-
. துரை ஆன திருவம்பலப் பெருமாநல்லூர் இவ்வூர் நாற்பாற்கெல்லைக்கு
உள்பட்ட நஞ்சை பு-
ஞ்சை உள்ளிட்ட நிலமும் இவ்வூரில் ஏறும் புறக்கலனைக்குடி உள்ப்பட
இவ்வு. . டைப்
பங்குனி மாதம் முதல் ஸவ_2ரநமாக மடப்புறமாகக் குடுத்தோம் இவ்வூரால்
வந்த
. காசாயங்களும் நெல்லாயங்களும் கடமை காசுகடமை உள்ளிட்ட மற்றும்
“பேற்ப்பட்
. வரிகளும் நாங்களே இறுத்துக் குடுக்கக் கடவோமாகவும் பலதளி பூசைப்பேறு
பத்திலஞ்சு
. நீக்கி ஸவ.மாநமாகக் குடுத்தோம் இப்படிக்கு வாதிதுவரை குடிநீங்கா
மடப்புறமாக-
க் குடுத்தோம் அத்திப்பற்று அழிபடைதாங்கிப் பற்று நாட்டவரோம் பணியால் ஜயங்கொண்ட-
சோழ வேளான் எழுத்து அகம்படி வேளான் எழுத்து பள்ளிக்கட்டு வேளான் எழுத்து
71
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 44/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1810
: திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 89/1939-40 தமிழ் முன் பதிப்பு 3 5
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 42 மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் சன்னதி மேற்குச் சுவர்.
பாண்டிய மன்னன் வீரபாண்டியன் 18-ஆவது ஆட்சியாண்டில் ஆவணி மாதம் முதல் மார்கழி மாதம் வரை திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் அமுதுபடைக்கப் பணம் இல்லாத காரணத்தினால் சிவன்னம்மை என்பவரிடமிருந்து பெற்ற பணத்திற்கு வட்டியாக 400 கலம் நெல் வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, சிவனம்மை இக்கோயிலில் எழுந்தருளித்த சோமநாத தேவர்க்கு அமுதுபடி, திருவிளக்கு ஆகியவற்றிற்கு கோயில் பண்டாரத்திலிருந்து செலவிடுவது என்று ஸ்ரீருத்ர ஸ்ரீமாஹேஸ்வரர்கள் உடன்படிக்கைச் செய்துள்ளனர்.
1. ஷுஹிஷஸ்ரீ .தில-வன சக்கரவத்திகள் கோனேரி மேல்கொண்டான் வீரபாண்டிய
தேவற்கு யாண்டு
2. ௦௪ ஹிஹ நாயற்று ௨ர௫வ/*வக்ஷத்து அஷகசியும் திங்கட்கிழமையும்
பெற்ற அனிழத்தி னாள் ஜயங்கொண்டசோ-
8. ழ மண்டலத்து உடையார் திருவோத்தூருடைய நாயனார் கோயில்
பதிமூன்றாவது முதலில்லாதப்படியாலே சிவன்-
4. னம்மை பக்கல் ஆவணி மாதம் முதல் மார்கழி மாதவரையாக அமுதுபடிக்கு
எதிர்பை வாங்கின ௨௨% ௯ய௰௱க்குப் பலிசை
5. ஏற்றி முதலான ஈட ச௱மும் இவர்க்கு குடுக்க முதலில்லாதபடியாலே
இக்கோயிலில் சிவனம்மை எழுந்தருளிவித்த
72
6. நாயனார் சோமநாத தேவர்க்கு அமுதுபடிக்கும் திருவிளக்கும் நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசியும் இராக்காலம் திரு-
7. வொத்தசாமத்தளவும் ஒரு விளக்கும் இடக்கடவதாகவும் இந்நெல்லு நானூற்றுக்கலத்துக்கும் பலிசைக்கு
8. உடலாக ஸ்ரீபண்டார முதலிலே அமுதுபடிக்குப் பலகையிலே நாள் வழி இரு நாழி அரிசியும்
9. இத்திருவிளக்கும் வரராசித்தவரையும் இப்படி செல்லக் கடவதாகச் சம்மதித்தோம் ஸ்ரீ. ஸ்ரீவாஹே-
10. றறோடி இது பநாஹேயும க்ஷ
73
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 45/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1818 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை : 97/1989-40 தமிழ் முன் பதிப்பு 3 -
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண் : 48
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் முனையதரையர் என்கிற கண்டியதேவர் என்பவன் மன்னனின் பெயரால் ஏற்படுத்திய வீரபாண்டியன் சந்தி, ஆனித்திருநாள், அமுதுபடி, படிவெஞ்சனம் ஆகியவற்றிற்காக அத்திபற்று பாராசூர் நாட்டு தவசி பெரும்பாக்கம் ஊரில் வசூலிக்கப்படும் அனைத்து வரிகளையும் தேவதானமாக பாண்டிய மன்னன் வீரபாண்டியன் அளித்த நேரடி அரசாணையாகும்.
1. ஷஹிஸ்ரீ .தில-வனச் சக்கரவத்தி கோனேரிமேல் கொண்டான் வீரபாண்டிய
தேவற்க்கு
2. யாண்டு எ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து உடையார்
திருவோத்தூருடைய நாயனாற்கு
3. நம்பேரால் முனையதரையரான கண்டியதேவர் கண்ட வீரபாண்டியன் சந்திக்கும்
ஆனி
4. திருநாளுக்கும் அமுதுபடிக்கும் படிவெஞ்சனங்களுக்கும் இவ்வாண்டை
மார்கழி மாதம் அத்தி பற்று
5. பாராசூர் நாட்டு தவசிபெரும்பாக்கம் நான்கெல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய் . . .
6. லை மரம் உள்பட இந்நாள் முதல் தேவதான இறையிலியாக குடுத்தோம் இவ்வூரால் வரும் பொ-
74
10.
. ன்வரி ஆயம் மாவடை மரவடை உள்ளிட்ட பல கடமையும் செட்டிகள்
வாணிகர் கைக்கோளர்
, கோலியர் . . கள் பேரால் கொள்ளும் கடமை பொன்வரியும் குற்றத்தெண்டம் ௨ பட்டித்தெண்டம் மற்றும் இவ்வூரால் வரும் உபாதிகளும் தேவையும்
சந்திராதித்தவரை செல்லும்படிவிட்டோம் க
75
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 46/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 11 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1914 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 98/1939-40 தமிழ் முன் பதிப்பு i =
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 44
மூன்றாம் மாறவர்மன் திரிபுவன சுந்தரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு அத்தி என்னும் ஊரைச் சார்ந்த மன்றாடி மன்னன் என்பானின் மகன் கங்கன் என்கிற அழகிய சுந்தரக்கோன் என்பவன் திருவோத்தூர் நாயனார் கோயிலுக்குத் தினமும் 4 நாழி பாலும், ஓர்
உழக்கு நெய்யும் அளிப்பதாக உறுதியளித்து, கோயில் பண்டாரத்திலிருந்து 92 பசுக்களும் 1 காளையும் பெற்றுக் கொண்டுள்ளான்.
1. ஹஹிஸ்ரீ கோமாறபன்மர் திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு
யா-
2. ண்டு மக வது £ந நாயற்று ௬வ௱உக்ஷத்து வ_கமையும் நாயற்றுக்
கிழமையும் அத்த-
3. த்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்து காழியூர்
நா-
4. ட்டு உடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு இக்கோட்டத்து இன்
நாட்டு அத்தி . . .
8. மன்றாடிகளில் மன்னன் மகன் கங்கனான அழகிய சுந்தரக்கோனேன்
இவ்வாண்டை மு-
6. தல் பாலமுது நெய் அமுதும் அளக்க ஸ்ரீபண்டாரத்தில் நான் கைக்கொண்ட
சாவா மூ-
76
7. வா பசு ௩ல௨ம் இஷபம் க ம் இப்பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றும் கை-
8. க்கொண்டு நாள் ஒன்றுக்கு ஆரணதியாகியாலே நானாழி பாலும் உழக்கு நெ-
9. ய்யும் சந்திராதித்தவரையும் நானும் என் மக்கள் மக்கள் வழியாக அளக்கக் கட-
10. வேன் மன்னன் மகன் கங்கனான அழகிய சுந்தரக் கோனேன் இவை அழகிய சுந்தர-
11. க்கோன் எழுத்து இது பன்மாஹேறாற க்ஷ
77
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 47/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 12
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1815
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 97/1900
தமிழ் முன் பதிப்பு : 7/107 (தெ.க.தொ.)
கிரந்தங்கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 45
மாறவர்மன் திரிபுவனசுந்தரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் கோயில் இறைவன் முன் 28 திருநந்தாவிளக்கு ளிக்க 14 வேலி நிலமும், இக்கோயில் இறைவி இளமுலை நாச்சியார் கோயிலில் 8 திருநந்தா விளக்கு ளிக்க 4 வேலி நிலமும் ஏற்கனவே தானமளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவணிமாதம் முதல் 40 திருநந்தாவிளக்கு எரிக்க தச்சன் தாங்கல், சிராயம்பட்டு ஆகிய ஊர்களை திருவிளக்குப்புறமாக வீரசம்புநாயன் என்ற சம்புவராயன் வழங்கியுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹஹிஸ்ரீ கோமாறபன்மர் தி_ல-வனவுக,வதிகள் ஸ்ரீஸ-௩வாணசேவற்கு
யாண்டு
2. பன்னிரண்டாவது உடையார் திருவோத்தூருடைய நாயனார் திருமுன்பு
முன்னாள் இடுந் திருநந்தாவிளக்கு நன்-
9. திருநாமத்துக்காணியான அனுக்காவூர் நிலம் ஒரு வேலிக்கு விளக்கு
இரண்டும் விழா நல்லூர் நிலம் அரைவேலிக்-
4. கு விளக்கு ஒன்றும் செங்காடு நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும்
இருங்கலை நிலம் ஒரு வேலிக்கு விளக்கு இரண்டு-
5. ம் நாவல் நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் வாட்குடை நிலம்
அரைவேலிக்கு விளக்கு ஒன்றும் தவிசிபெரும்பாக்கம்
6. அரைவேலிக்கு விளக்கு ஒன்றும் தொழுப்பேடு நிலம் ஒன்றுக்கு விளக்கு
இரண்டும் வள்ளைநிலம் ஒன்றுக்கு
78
, விளக்கு இரண்டும் பெரும்பாலை நிலம் ஒ[ன்று]க்கு விளக்கு இரண்டும்
வெண்குன்றம் நிலம் ஒன்றுக்கு விளக்கு
.. இரண்டும் குடநகர் நிலம் அரைவேலிக்கு விளக்கு ஒன்றும் [பு]துப்பாக்கம்
நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் வெளி[ய]-
௨னூர் நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் காழியூர் நிலம் அரைவேலிக்கு
விளக்கு ஒன்றும் ஆளப்பிறந்தவி[ளாக]ம் நிலம்
. ஒருவேலிக்கு வி[ள]*க்கு இரண்டும் மட்டைநிலம் அரைவேலிக்கு விளக்கு
(விளக்கு) ஒன்றும் ஆக இவ்வூர்களால் நிலம் ப-
. தினாலும் இளமுலைநாச்சியார் திருமுன்பு இடும் விளக்கு எட்டுக்கு பாராசூர்
நங்கித்தச்சன் தாங்கலுடன் கூடின
. நிலம் நாலுவேலி[யு]ம் ஆக நிலம் ப[தி]ன்எட்டு வேலியினால் இடும்
திருநந்தாவிளக்கு முப்பத்துஆறும் நீங்கலாக இவ்-
.வாண்டை ஆவணி மாதம் முதல் நாற்பது திருநந்தாவிளக்கு
இடக்கடவதாகவும் இத்திருநந்தாவிளக்கு நாற்ப-
. துக்கும் திருவிளக்குப்புறமாக திருநாமத்து[க்*] காணியான தேவதானம்
தச்சன்தாங்கலான வே-
. தவினோதநல்லூருஞ் சிராயம்பட்டும் நாற்பாற்கெல்லைக்கு உட்பட்ட நன்செய்
புன்செய்
,. கடமை ஆயம் உள்ளிட்ட பல நெல்லாயங்களும் பொன்வரி காசுகடமை
உள்ளிட்ட கா-
். சாயங்களும் தறிஇறை தட்டார்பாட்டம் ஊர்க்கணக்கர் ஆசுபொதுமக்கள்
[பெர்க்கடமை செ-
, பட்டிகள் வாணிகர் பெ]ர்க்கடமை செக்கிறை மாவடை குளவடை நாட்டுவரி
நாட்டு வினி-
. யோகரம்]* மற்றும் இ[வ்]*வூர்களை நோக்கிவரும் எப்பேர்ப்பட்ட உபாதிகளும்
வரிகளும் உட்பட
. முதலடங்க இறையிலியாகக் குடுத்தேன் வீரசம்பு நாயனான சம்புவராயனேன் . இப்படி இத்தச்சன்தாங்கலும் சிராயம்பட்டும் தாங்களே உழவும் வேண்டுவார்க்கு . அடைத்து அனுபவித்துக்கொண்டு வாதித்தவரையும் இத்திருநந்தாவிளக்கு
நாற்பது-
ம் இடுவதே இது உரநாணேய கெட
79
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 48/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 12 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1815 ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 92/1999-40 மொழி தமிழ் முன் பதிப்பு உ ஃ எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 46 அரசன் சுந்தர பாண்டியன்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : பதிணென் விசையத்து எண்டிசை நிறைந்த வண்டுவராபதித் திருவாய்பாடி
நாட்டவர் திருவோத்தூர் அமுதவல்லவன் திருமண்டபத்தில் கூடித் தங்கள் சாதிக்கும் தங்கள் வம்சத்துக்கும் வேண்டிய நன்மைகளைத் திருவோத்தூருடைய நாயனார் செய்தருளியதால் தங்களின் திறத்திலிருந்து (80 ஆடுகள், 80 பசுக்கள் (ம) 80 எருமைகள்) ஒரு கிடாரி, ஓர் ஆடு, ஓர் எருமை கன்றும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
கல்வெட்டு :
1.
2.
ஸ்ரீகக மொவால வீரமெவாவதெ இதன் குருகோவிந்த பிதா- ய சீரனந்த புகுசெய் சாதனம் திருவளர்ப்புகழ் பெருகச் செயமோங்க-
ச்சீர்நிலவ அருள்பெருகக் கலிமேலிய அறந்தழையமறமோங்க நாற்கடல் சூழ-
லகனைத்தும் நாவலர்தங்கிளை வளரப் பாற்கடலில் திருவாவணையில்ப்-
. பள்ளிகொள்ளும் பாம்புருஷன் நந்தகோபந் திருமகனாய் நாராயண [ந்]நடுவா-
க அந்தரியகிலமெழுமாளுடையான் முன்னாக இமையோர் முன்னின்று வண-
ங்க வரும் ஸ்ரீகெருடக்கொடி எட்டுத் திக்கிலும் மிக்குயர் மன்னர் திருவடி நிலை-
80
10.
12.
18.
14.
15.
16.
17.
18.
19.
, ம மற்றவர் தஞ்செங்கோலும் சென்னிமிசைக் கொண்ட வாதம் திருவாவணையே
படைய--
, வும் கள்வரையும் புள்வரையும் கட்டரையும் துட்டரையும் தள்ளி மிந்தத்
தலமேழினும் தன்ம வ-
சிய நடப்பக் கோசனங்கள் முதலாக கூற நின்ற நிரை மூன்றும் பூதலத்தில் மிசை நிறைய
பொறை பூண்டு அறமளா முனிவின்றி இனி கொங்க முறைமையில் சமையமினிது நடாக
நிகழா நின்ற பதினெண் விசையத்து எண்டிசை நிறைந்த வண்டு வராபதித் திரு-
வாய்ப்பாடி நாடவரும் நாட்டு முதலிகளும் இராசகண்ட கோபாலரும் இராச
கண்-
ட கோபால முதலிகளும் மற்றும் நம்மக்கள் சிறப்பருள்ளாரும் னாயகத்து
வண்மை நிற-
கவும் கமல மங்கைபுயத் திருத்தவும் வையகத்துப் புகழ் நடாத்தவும் மாறானார் நிற்கவும் சென்ற வி-
டத்தில் செருவெற்றியும் தேவேந்திரால் அருள் பெறுதலும் புகழும் பொய்யா மொழியும் புத்திரலா-
பமும் சத்துரு நாசமும் மற்றும் எப்பேர்ப்பட்ட ஸவ* உஃயங்களுக்கும் உரித்தாவதாகவும் செயங்-
கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு திருவோத்தூருடைய நாய-
னார் எங்கள் சாதிக்கும் எங்கள் வஸத்துக்கும் வேண்டும் நன்மைகளைச்
செய்தருளினபடியாலே கோ-
81
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
மாறபன்மர் தில-வேன ௮௯_வத்திகள் ஸ்ரீசுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு ௰௨ காத்திகை மாதம் ஆறாந்-
தியதி நாயற்றுக் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவோத்தூர் அமுதவல்லவன் திருமண்ட[ப]த்து நிறைவற நிறைந்-
து குறைவறக்கூடி இருந்து இன்னாயனார்க்கு உலையம் வைத்துக் குடுத்தபடி திறத்துக்கு ஒரு கொறுக்கழிக்
கிடாரியும் ஆட்டுத் திறத்துக்கு ஒரு வேல் பிறிக்குபடியும் எருமை படைத்தவன் ஒரு முலை மறுத்த கன்றும்
இப்படிக்கு மண்கலம் தகத்தும் வெண்கலம் பறித்தும் கொள்ளக் கடவதாகவும் இப்படி வைத்துக் குடுத்-
தோம் எண்டிசை நிறைந்த வண்டுவராபதித் திருவாய்ப்பாடி நாடவரோம் இப்படிக்குச் சம்மதித்தோம்
தொண்டை மண்டலத்தில் திருவாய்ப்பாடி நாடவரோம் இப்படிக்கு சந்திராதித்தவரை நடக்கக்
கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக் கடவதாகச் சம்மதித்து வைத்துக் குடுத்தோம் எண்டிடை
ச நிறைந்த வண்டு வராபதித் திருவாய்ப்பாடி நாடவரோம் பணியால் இவை சமையக் கணக்கன்
எழுத்து இவை நம்பிக்கோன் விழுப்பாதராயன் எழுத்து இவை வன்னிய நாயக வேளான் எழுத்து இ-
வை பூபாலராயன் எழுத்து இவை விராகர் வேளான் எழுத்து இவை பொன்னம்பலவரையன் எழுத்து
இவை உலகளந்த வேளான் எழுத்து இவை படலக்கோன் எழுத்து இவை அமர்கோன் எழுத்து
இவை கொங்கராயன் எழுத்து இவை சேரகோன் எழுத்து இவை சமைய நாராயணக் கோன் எழுத்து
82
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 49/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 22
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1818
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 92/1900
தமிழ் முன் பதிப்பு : 7/0 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 47
வீரபாண்டிய தேவர்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்கு ஜகதி.
திருவோத்தூருடைய நாயனார் கோயில் இறைவன் முன் தினமும் ஐந்து நபர்கள் ஓதுவதற்கு, திங்கள் அகரம் என்ற ஊரில் உள்ள நஞ்சை புஞ்சை நிலத்தின் மீது பெறப்படும் வரிகளை நீக்கி குலசேகர சம்புவராயன்
தானமளித்துள்ளான். செய்யாறு வென்றான் சதுர்வேதி மங்கலத்து வாரியனும் கணக்கனும் பெற்றுக்கொண்டு நடைமுறைபடுத்திட ஆணையிட்டுள்ளான்.
1. ஷஹஸிஸ்ரீ குலசேகரச் சம்புவராயன் ஓலை அனுக்காவூர் பிறிந்த அகரம்
செய்யாற்று வென்றான் வதுவேபசி மங்கலத்து
2. வாரியனும் கரணத்தானும் கண்டுவிடை பெருமாள் வீரபாண்டியதேவற்கு
௨௰௨[வது]க்கு எதிராமாண்டு ஆடிமாதம் முதல் திங்கள் அக-
3. ரம் நான்கெல்லைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை நிலத்தில் கடமை ஆயம்
பொன்வரி உட்பட்ட எப்பேற்பட்ட வரிகளும் உட்ப-
4. ட உஃகவ௨௫வ.) ம2உந இறையிலியாக உடையார் திருவோத்தூருடைய
நாயனார் திருமுன்பே நாள் ஒன்றுக்கு ஐஞ்சுபேர் ௬ஐ-
5. யநம் பண்ணக்கடவர்களாகவும் இப்படி உடைய இன்னாயனார் கோயில்
திருமலையிலே கல்லு வெட்டுக்கொள்ள-
6. வும் சொல்லிவிட்டோம் இன்னாள் முதல் இப்படிச் செய்வதே
83
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 50/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 8748 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1885 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 87/1999-40 மொழி : தமிழ் முன் பதிப்பு 3 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 48 அரசன் : மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : அரசி உலகுமுழுதுமுடையார் தனது பெயரான கலியுகராமன் திருத்தோள் பிரியாத திருக்கானை என்ற பெயரில் 10/4 மாற்றுடைய 48 கழஞ்சு எடை கொண்ட பொன்னிலான திருப்பட்டம் ஒன்றினைத் திருவோத்தூருடைய நாயனாற்குக் கொடையளித்துள்ளாள்.
கல்வெட்டு : 1. ஷுஹிஸ்ரீ அலு-வன ௮-௯,வத்தி கோனேரின்மை கொண்டான் ஸ்ரீ-
2. வீரபாண்டிய தேவர்[க்]கு யாண்டு ௩௰எ வதுக்கு எதிர் ௮ வது ஷே நாயற்று
9. பூவ*பக்ஷத்து திதியையும் நாயற்றுக் கிழமையும் பெற்ற பரணி நாள் உடையார் திருவோ-
4. த்தூருடைய நாயனாற்க்கு கலியுகராமன் திருத்தோள் பிரியாத திருக்கானைப் பேரில்
5. தம்பிராட்டியார் உலகுமுழுதுமுடையார் சாத்தின பட்டமுங் கெங்கா தேவியாரும்
6. திருவிளம்பிறையாரும் ஆக ய மாற்று பொன் ௪௰௮ மு
84
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 51/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : $ செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1841 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: - தமிழ் முன் பதிப்பு ச
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 49 சடையவர்மன் திரிபுவன வீரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் தெற்குச் சுவர்.
அத்தி என்னும் ஊரில் இருக்கும் மன்றாடி (இடையர்) தென்னக்கோன் மகன் ஒதுவித்தான் எனும் ஆரணதியாகிகோன் என்பவன் தென்னகோன் என்பானிடமிருந்து பெற்ற 10 பசுக்கள் மற்றும் 50 ஆடுகளும், காங்கேயன் என்பவரிடமிருந்து பெற்ற 11 பசு ஆக மொத்தம் 21 பசுக்கள், 50 ஆடுகளைக் கொண்டு திருவோத்தூர் கோயிலில் தினமும் பால் மற்றும் நெய் அளக்க உறுதியளித்துள்ளான்.
1. ஷஷிஹீ கோற்சடபன்மர் .தில-வன ஏக்கரவத்திகள் ஸ்ரீவீரபா[ண்]டிய தேவ-
சே Hm னே 62 . .
ற்க்கு யாண்டு ர இஷப நாயற்று உ௫வ*வக்ஷத்து ஓரியும் திங்- கள் கிழமையும் பெற்ற உத்திரத்து நாள் ஜயங்கொண்டசோழ ம- ண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு உடையார் திருவோத்தூர் - உடைய நாயநாற்க்கு பால் அமுதும் நெய் அமுதுக்கு நாள் ஒன்றுக்கு முரிவினா-
6. ல் அளக்க அத்தியில் இருக்கும் மன்றாடிகளில் தென்னகோன் மகன் ஓது-
7. வித்தானான ஆரணதியாகி கோனேன் கைக்கொண்ட தென்னகோன் விட்-
8. ட பசு ௰ம் ஆடு ர௬ம ம் மங்கலம்கிழான் காங்கயன் விட்ட பசு மக ஆக
85
9. சு ௨லக ஆடு ரும் ம் கைக்கொண்டு உழக்கு நெய்யும் நாணாழி பாலும் ட ஆதி 10. சித்தவரையும் அளக்க கடவேன் ஆரணதியாகிகோனேன் இவை என்
எழுத்து
86
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 52/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி 1849 ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 81/1939-40 மொழி தமிழ் முன் பதிப்பு த எழுத்து ; தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 50 அரசன் நான்காம் சடையவர்மன் திரிபுவன ஸ்ரீவீரபாண்டியன்
இடம்
வேதபுரீசுவரர் கோயில் மகா மண்டபம் கிழக்குச்சுவர்,
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு
திருவோத்தூருடைய நாயனார்க்கு பால்அமுது, நெய்அமுது அளிக்க வேண்டி விண்ணபாடியில் இருக்கும் மன்றாடிகளில் (இடையர்) சித்திரமேழிக் கோன் என்பானின் மகன் ஓதுவித்தான் என்கிற நாற்பத்தொண்ணாயிரக் கோன் என்பவன் திருவோத்தூர் கோயில் பண்டாரத்திலிருந்து 30 பசுக்கள் பெற்றுக் கொண்டு தினமும் உழக்கு நெய்யும், நான்கு நாழி பாலும் அளக்கச் சம்மதித்துள்ளான்.
கல்வெட்டு :
1.
ஷஹிஸ்ரீ கோற்சடபன்மர் ,தில-வனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவற்க்கு யாண்டு ௰௩ வது கன்னி நா-
யற்று வாவ*வக்ஷத்து நவமியும் திங்கள்கிழமையும் பெற்ற திருவோணத்து
நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்-
: காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு உடையார் திருவோத்தூருடைய
நாயனார்க்குப் பால் அமுதுக்கும் நெய் அமுதுக்கு நாள் ஒன்றுக்குமுரிவினாலே அளக்க விண்ணபாடியில் இருக்கும் மன்றாடிகளில் சித்திரமேழிக் கோன் மகன் ஓதுவித்தான் ஆன
. நாற்பத்தென்னாமிரக் கோனேன் சிபண்டாரம் பதவாய் கைக்கொண்ட பசு
௩௰ இப்பசு முப்பதும் கைக்கொண்டு உழக்கு
நெய்யும் நானாழி பாலும் சஞஷ_ாதித்தவரை அளக்க கடவேன் நாற்பத்தெண்ணாயிரக் கோனேன் இவை என் எழுத்து இது பன்மாஷோ க்ஷ
87
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 53/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1954 ஊர் திருவோத்தூர் . இ.க. ஆண்டறிக்கை: 94/1939-40 மொழி தமிழ் முன் பதிப்பு தத எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 51 அரசன் முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : வெண்குன்றக் கோட்டத்து பாராசூர் நாட்டு வள்ளை என்னும் ஊரில் இருக்கும்
மன்றாடி பெரியநாட்டுக் கோன் என்பானின் மகன் மலையன் எனும் ஆலால சுந்தரக்கோன் என்பவன் 32 பசுக்களும் 1 காளையும் பெற்றுக் கொண்டு திருவோத்தூர் கோயில் பண்டாரத்தில் “ஆரணதியாகி” என்னும் அளவையால் தினமும் 4 நாழி பாலும் ஓர் உழக்கு நெய்யும் அளப்பதாக உறுதியளித்துள்ளான்.
கல்வெட்டு :
1.
2.
ஷஹிஸ்ரீ கோமாறபன்மர் திரிபுவனச் சக்கரவத்திகள் 8 வீரபாண்டிய தேவ[ற்]க்கு யா-
ண்டு ௨௰ வது 8 நாயற்று உவ வக்ஷத்து ஒஸுசியும் திங்கட்கிழமையும் பெற்ற அனுஷத்து நாள் ஜயங்டெ
காண்ட சோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டு உடையார் திருவோத்தூருடைய நாய-
. னார்க்கு வெண்குன்றக் கோட்டத்து பாராசூர் நாட்டு வள்ளையில் இருக்கும்
மன்றாடிகளில் பெருமாப்பிள்ளை-
. ஆன பெரியநாட்டுக்கோன் மகன் மலையன் ஆன ஆலால சுந்தரக் கோனேன்
இன்னாள் முதல் பால் அமுதும் நெய்அமுதும் அளக்க பண்டாரத்தில் நான் கைக்கொண்ட சாவா மூவாப் பசு ௩௰௨ இஷ-
88
7. பம் க ம் இப்பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றும் கைக்கொண்டு நா(ன்)[ள்] ஒன்றுக்கு ஆரணதியாகியா-
8. லே நானாழி பாலும் உழக்கு நெய்யும் சந்திராதித்தவரையும் நானும் என் மக்கள் மக்கள் வழியா-
9. க அளக்கக் கடவேன் பெரிய நாட்டுக் கோன் மக(ள்)[ன்] மலையன் ஆன ஆலால சுந்தரக்கோனேன் இவை
10. ஆலால சுந்தரக்கோன் எழுத்து இது பன்மாஹேயும றககஷ
89
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 54/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
செய்யாறு வரலாற்று ஆண்டு
திருவோத்தூர் . இ.க. ஆண்டறிக்கை: 99/1900
தமிழ் முன் பதிப்பு : 7/109 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 52
இராசநாராயணன்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
அத்திப்பற்று பிரிவில் உள்ள நாவற்பாக்கம் என்னும் திருஞானசம்பந்தர் நல்லூர் மற்றும் இவ்வூரின் பிரிவான குதிரைச்சேவகன் தாங்கல் ஆகிய இரு ஊரவருக்கும் இராசநாராயணன் கொடுத்த ஆணையும். இவ்விரு ஊர்களில் வசூலிக்கப்படும் வரிகளில் பாதியை பல கோயில்களுக்கு பூசைக்காக அளித்தது போக மீதியுள்ள
அனைத்து வரிகளையும், இக்கோயிலில் திருப்பாட்டு ஓதும் மாகேஸ்வரர்களுக்கு காணி மடப்புற இறையிலியாக அளிக்கப்பட்டுள்ளது.
ர, ஹஹிஸ்ரீ ஸகலலோக வு-
. சூ,வதி ஸ்ரீஇராசனாராயணன் அத்தி[ப்]-
, பற்று நாவற்பாக்கமான திருஞானசம்பந்[த ]-
ர் நல்லூர் ஊரவற்கும் இவ்வூரில் பிறிவான
. [க]ள் ஊர் பலதளி பூசைப்பா[தி]யும் நீக்கி நாலா-
, வது சித்திரை மாதமுதல் கடமை ஆயம் கே[£*]- ௨ மி[ல்*] முற்றுவப்பேறு உள்ளிட்ட பல நெல்லாயங்களு-
2 3 4 5. குதிரைச்சேவகன் தாங்கல் ஊரவற்கும் தங்- 6 7 8 9
ம் பொன்வரி காத்திகைக்காணிக்கை வாசல்விநியே]ர-
90
10.
11.
12. 18. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 29. 24. 25. 20. 27. 28. 29. 30. 31. 32. 33. 34, 39.
கம் நாட்டுவரி வழிநடைக்கு இடும் பணம் முன்னிடும் பண- ம் எடுத்தளவு விருந்துப்படி அரிசிகாணம் கைவிலைகா- ணம் நல்லெருது நற்கிடா தேவைக்கிடும் பணம் அதிகா- ரிக்கு குடுக்கும் முதல் மந்தைப்பணம் வாசற்பணம் வா-
சல் குழி ஊர்க்கணக்கர் ஆசுபொதுமக்கள் பேர்க்கட-
மை ஊர்க்கணக்கர் தட்டார்பேரால் ஊசிவாசி இநவரி மேற்சுட்டிவரி காத்திகைப்பச்சை புதுநெல்லு சூலவ-
ரி மாவடை மரவடை தறிக்கடமை ஆயம் நூலாயம் செட்- டிகள் வாணிகர் சேனையங்காடிகள் இவர்கள் பேற்கடமைம] கண்மட்டவரி கருவூலவரி புழுகுகடமை செக்குக்கடமை ஏ[ரி] மீன்காசு இடையர் பேற்கடமை பழவரி புதுவரி மற்றும் இப்பற்றி[ல்]* கொள்ளும் பலவரிகளும் பலஉபாதிகளும் உட்- பட திருப்பாட்டு ஓது[ம்]* மாஹேஸாறர்க்கு இவ்வூர் நஞ்சை புஞ்சை தோட்டப்பற்று நாற்பாற்கெல்லை ஊர்அட-
ங்கலும் உதக௨௫வ._ ய24ஓாகம் காணி மடப்புறம் ஸ- வ.32ாநீ்(னி)யழ இறையிலி ஆக -கையோலை குடுத்த ப[£]- கம் ௪௮ இதில் சேவபாகம் ௨ விஷ-யாகம் ௧ நீக்கி
பாகம் ௪மரு ஆகப் பாகம் நாற்பத்தெட்டும் இவர்களு-
க்கு காணி மடப்புற இறையிலி ஸவ_21(ந்)னியமாக குடுத்தோம் இவர்களுக்கு விற்றொற்றி பரிக்கிறையங்களு- க்கும் தாந[£]*மந2விக்கிறையங்களுக்கும் ஸகலவ,ாத்திக்கும் உரித்தாவதா- [க]வும் இப்படிக்கு கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்- டு சந்திரா[தி]த்தவரையும் செல்லக் குடுத்தோம் இன்னா-
ள் முதல் இப்படி செய்க இத்தந்மத்துக்கு ௯ஷிதம் பண்ணி- நாருண்டாகில் பஞ்சபாதகம் பண்ணிந பாவம் கொள்-
ளக்கடவர்கள் ஆகவும் இது பந்ீதாஹேயம ஈகக்்ஷ ௨
91
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 55/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1248 ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 111/1989-40 மொழி தமிழ் முன் பதிப்பு ததன் எழுத்து தமிழ்
அரசு சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 53 அரசன் இராசநாராயணன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூர் ஊரில் உள்ள கைக்கோளர்களிடம் தறி ஒன்றுக்கு
ஆண்டுடொன்றுக்கு ஆறேகால் பணமும், வீடு ஒன்றுக்கு வாசல் பணம், சூலவரி, குழிப்பணம் ஆகியவற்றுக்கு இரண்டு பணமும் ஆக ஆண்டு ஒன்றுக்கு எட்டேகால் பணம் வரி வசூல் செய்திட ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1
Ns ww
ஹஹிஸ்ரீ சகலலோகச் சக்கரவத்தி இராசநாராயண சம்புவராயற்-
க்கு யாண்டு ௬ மார்கழி மாதம் இருபதாந் தியதி திருவோத்தூர்க் கை-
கோளரில் க . . . கு இவ்வாண்-
டைக் காத்திகை மாத வரையும் கடமை கொண்டு இந்த மரியாதி
மார்கழி மாத முதலுக்கு தறிக்கடமை மாத இரட்ட சூலவரி வட்டம்
சப்படம் உட்படத் தறி ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆறே கால் பணம்.
வாசல் ஒன்றுக்கு வாசல் பணம் சூலவரி குழிப்பணம் உட்பட இரண்டு பணமும்
ஆக ஆண்டு ஒன்றுக்கு எட்டேகால் பணம் கொள்ளவும் இப்படிக்குச்
சந்திரா-
. தித்தவரையும் கொள்ளவும் இப்படி கொள்ளும் அளவுக்கு மார்கழி மாதம்
முது
92
10.
லுக்கு மேல் தறி உட்படத் தட்டிக் கண்ட தறிக்கும் மடிந்த தறி உட்பட முழுத்தறி அறு-
- பத்து ஆறுக்கு அடைப்பப்பேறு கழித்து நின்ற தறி அறுபதுக்கும் . கண்டு இத்தறியில் ஏறின தறிக்கும் அடைப்புபேறு கழித்து நின்ற தறிக்கும்
இம்மரியா-
தி கொள்ளவும் நிலையாந தறி அறுபத்து ஆறில் குறைந்த தறிக்கு
இருந்த குடியில் நிலை
. வரையும் கொள்ளவும் சொன்னோம் இப்படி செய்வதே
93
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 56/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி 1848 ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 118/1939-40 மொழி தமிழ் முன் பதிப்பு : எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 54 அரசன் இராசநாராயணன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : புவனேகபாகு தேவர் பேரனும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் ஐய்யன்
மகனுமாகிய புவனேகபாகு தேவர் என்பவருக்கு திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலில் பூசை செய்வதற்கான உரிமை அளித்துள்ளதை இக்கோமில் தானத்தாருக்குத் தெரிவிக்கும் மன்னன் வழங்கிய ஆணை.
கல்வெட்டு
1. 2. 3. 4,
ஷுஹிஸ்ரீ ஸகஓலோக ௮௯. வத்திகள் ஸ்ரீ ராஜநாராயணன்
உடையார் திருவோத்தூர் உடைய நாமினார் கோயில் தானத்தாற்கு தங்- கள் கோயில் பலமுதல் பூசைக் கண்காணி ஆறாவது ஆடி மாதமு- தலுக்கு ஷஈவநேக ஸாஹு தேவர் மகன் அழகிய திருச்சிற்றம்பலமுடை- யார் ஐய்யனுக்கு வாய்த்த புவனேகபாகு தேவர்க்கு வாதிகவெரையும் செல்லக் காணி ஆகக் குடுத்தோம் இன்னாள் முதல் இப்படி செய்வதே
94
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 57/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1343 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 114/1939-40 மொழி : தமிழ் முன் பதிப்பு fo
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 55 அரசன் : இராசநாராயணன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : புவனேகபாகுதேவர் பேரனும் அழகிய திருச்சிற்றம்பல முடையார் ஐய்யன் மகனுமாகிய புவனேகபாகுதேவர் என்பவருக்கு திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலில் பூசை செய்வதற்கான உரிமை அளித்து, இக்கோயில் ஸ்ரீருத்ர ஸ்ரீமாகேஸ்வரர்களுக்குத் தெரிவித்துள்ள மன்னன் வழங்கிய ஆணை.
1. ஹஷிஸ்ீ திருவாய்க்கேழ்வி முன்னாக சகலலோகச் சக்கரவத்தி ஸ்ரீமாஜ நாராயணச் சம்பு-
2. வராயற்கு யாண்டு ௬ வது ஸிஹை நாயற்று ௬வ௱ வக்ஷத்து வதியும் சனிக்கிழமையும் பெ-
3. ற்ற பூசத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூ-
4. ர் நாட்டு திருவோத்தூர் உடையார் திருவோத்தூர் உடைய நாயனார் கோயில் பல முதல் பூசைக்-
5. கண்காணி தேவர் புவனேகபாகு தேவர் மகனார் அழகிய திருச்சிற்றம்பல முடையார் ஆ-
6. ன ஐய்யனுக்கு வாய்த்த புவனேகபாகு தேவற்கு சந்திராதித்தவரையும் செல்லக் காணி ஆட்
95
7. சி ஆக குடுத்தோம் இக்கோயில் ஸ்ரீம ௨. ஸ்ரீமாஹேஸ்ரறறோடி இப்படிக்கு இவை
8. வஜ.களெலி லட்டஸ இப்படிக்கு இவை தில்லை நாயகப் பட்டன் எழுத்து இப்படிக்கு
9. இவை சண்டேறா௱ பட்டன் எழுத்து கச்சி ஏகம்ப பட்டன் எழுத்து இது பன்மாஹேயும க்ஷ
96
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 58/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 7
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1944
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 96/1900
தமிழ் முன் பதிப்பு : 7/106 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 56 இராசநாராயணன்
வேதபுரீஸ்வரர் கோமில் முன்மண்டப வடக்குச் சுவர்.
பல்குன்றக் கோட்டத்து அத்திப்பற்று நாட்டு நாவற்பாக்கம் மற்றும் குதிரைச் சேவகன் தாங்கல் ஆகிய இரண்டு ஊர்களையும் சேர்த்து திருஞானசம்பந்த நல்லூர் என்று பெயரிட்டு இராசநாராயண சம்புவராயன் 4-ஆவது ஆட்சியாண்டில் திருவோத்தூர் கோயிலில் திருப்பாட்டு ஓதும் மாகேசுவரர்க்கு (சிவனடியார்கள்) காணி மடப்புறமாக இறைநீக்கி அத்திப்பற்று நாட்டவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
1. ஹஹிஞஸ்ரீ[॥*] ஸகலலோக ஏ-
சூ,வகி ஸ்ரீஇராசநாராயணன்
. சம்புவராயற்கு யாண்டு ௭ வது மகரநாய-
ற்று கவறவக்ஷத்து துவாெ-
. மூலத்து நாள் ஜயங்- . கொண்டசோழ மண்டலத்து அத்[தி]*-
. ப்பற்று நாட்டவரோம் இப்பற்று
2 3 4 5. ஸமியும் திங்கள்கிழமையும் பெற்ற 6 7 8 9
, பல்குன்றக் கோட்டத்து நாவற்பாக்க-
97
10.
11.
12. 18. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 283. 24. 25. 20. 27. 28. 29. 90. 81. 92.
மும் இதில் பிறிவாந குதிரைச்சேவ-
க[ன்] தாங்கலும் முன்னாள் நாலாவது
நாளில் தம்பிரானார் திருப்பாட்டு ஓதும் மாஹேயரரர்க்கு காணி மடப்புற இறை-
மிலி ஆக திருஞானசம்பந்த நல்லூர்
யென்று உதகவ௫வு தன்மதாநமாக சை க(ய்)ஓலையும் திருமுகமும் குடுத்துஅருளி- நபடிக்கு கல்வெட்டுகையில் இப்படிக்கு- நாங்களும் இந்த கை(ய்)ஓலைப்படி பங்கு ௪௰௮ இ[தி]ல் சேவபாகம் ௨ விஷுய[£]கம் ௧ நீக்கி பாகம் ௪௰ரு ஆக பாகம் நாற்பத்து எட்டு- ம் இவ[ர்]*களுக்கு விற்றொற்றிப் பரிக்கிறையங்- களுக்கும் தாநமக£விக்கிறையங்களுக்-
கும் மற்றும் எப்பேற்பட்ட ஸகலப்பிறாத்- திகளுக்கு உரித்ததாவதாகவும் இப்படிக்கு- சந்(த்)திராதித்தவரையும் செல்ல நாவல் பா- க்கமும் குதிரைச்சேவகன் தாங்கலும் உ- ட்பட திருஞாநசம்பந்தநல்லூர் என்று சை க(ய்)ஓலை பெற்ற மாணேயூரர்க்கு கா-
ணி மடப்புற இறையிலி இராசகரம் உட்ப-
ட ஸவ_ாந்(னி)ய இறையிலி ஆக உடையு[ா]*ர் திருவோத்தூருடைய னாயினார் திருக்க- ட்டளையிலே கல் வெட்டுவித்து தந்தோம்
98
33. 94. 35. 36. 97. 98.
அத்திப்பற்று னாட்டவரோம் இப்படிக்கு[ச்] சந்திராதித்தவரை நடத்திக்கொள்ளும்ப[டி ] தந்தோம் இப்படிக்கு இவை னாட்டுக்கு சமை- ந்த னாட்டு கணக்கு தொண்டை மண்டல பிரமாராயன் எழுத்து இது பன்மாஹே-
up க்ஷ; ௨
99
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 59/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 7 செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1844 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 101/1999-40 தமிழ் முன் பதிப்பு உ வ
கிரந்தங் கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 57
இராசநாராயணன்
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
திருவோத்தூர் ஊரில் உள்ள மன்றாடிகளில் (இடையர்) துவாரபதி வேளான் என்பானின் மகன் வெண்ணைக் கூத்தன் என்கிற வேதவிநோதக் கோன் என்பானும் இவன் தம்பி திருவோத்தூர் உடையான் ஆகிய இவ்விருவரும் சேர்ந்து இக்கோயில் ஸ்ரீபண்டாரத்தில் 80 பசுக்களும் 2 காளைகளும் பெற்றுக் கொண்டு தினமும் உழக்கு நெய்யும், நான்கு நாழி பாலும் அளக்க சம்மதித்துள்ளச் செய்தி.
1. ஹஷிஸ்ரீ சகலலோகச் சக்கரவத்திகள் இராசநாராயணச் சம்புவராயர்க்கு யாண்டு
ஏழாவது கற்க-
2. டக நாயற்று உ௱௫வ*வக்ஷதீது வஷசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற
பூசத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்-
9. டலத்து காலியூர்க கோட்டத்து காழியூர் நாட்டு உடையார்
திருவோத்தூரு[-]டய நாயனாற்க்கு இக்கோட்டத்து இன்நா-
4. டீடு திருவோத்தூரில் மன்றாடிகளில் துவாரபதி வேளான் மகன் வெண்ணை
கூத்தனான வேதவிநோதக் கோனும்
5. என் தம்பி திருவோத்தூர் உடையானும் இவிருவரோம் உடையார்
திருவோத்தூர் உடைய னாயநார் கோயிலி-
100
6. ல் ஸ்ரீபண்டாரத்தில் நாங்கள் கைக்கொண்ட சா(த)[வ]£ மூவாப் பசு முப்பதும் 8ஷம$ இரண்டும் கைக்கொண்-
7. டு நா[ள்] ஒன்றுக்கு ஞ*! நெமியும் ௪ உ*? பாலும் சன்திராதித்தவரையும் அளக்க கடவோம் இவிருவரோம் இவை பன்மாஹே
8. பறற றக௦க்ஷ : ௨
டக உழக்குக்கான குறியீடு *ே நாழிக்கான குறியீடு
101
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 60/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1850 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 120/1999-40 மொழி : தமிழ் முன் பதிப்பு : வ எழுத்து : தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 58
அரசன் : இராசநாராயணன்
இடம் : ஏகாம்பரேஸ்வரர் சன்னதி வடக்கு ஜகதி.
குறிப்புரை : வீரகம்ப நாயினார் என்கிற வீரவல்லாள தேவர் திருவோத்தூர் உடைய நாயினார் கோயிலில் அமைந்துள்ள அண்ணாமலை நாயினார் இறைவனின் பூசைக்கும் வழிபாட்டிற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளதால் விவரம் அறியமுடியவில்லை.
கல்வெட்டு 1. ஹ[ஷிற்ீ] சகலலோக சக்கரவத்திகள் இராசநாராயணனர்க்கு யாண்டு ௰௩ திருவோத்தூர் 2. உடைய நாயினார் கோயிலில் வீர(ய)[க]ம்ப நாயினாரான வீர வல்லாள தே-
3. வர் எழுந்தருளிவித்த அண்ணாமலை நாயினார்க்கு பூசைக்கும் திரு
102
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 61/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு கி.பி. 1354
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண் : 59
அரசன் இராசநாராயணன்
இடம் 5
குறிப்புரை : இவ்வூர் கைக்கோளர்களில் ஒருவன் இக்கோயில் வழிபாட்டுக்கு 200 பணம் தானம் அளித்துள்ளச் செய்தி. துண்டுக் கல்வெட்டாக உள்ளதால் முழு விவரம் அறியமுடியவில்லை.
கல்வெட்டு :
1. ஹஹஷிஸ்ீ சகலலோகச் சக்கரவத்தி
சே (2-4 னே [ப] . ப் (
. ண்டு ௰எ வது உடையார் திருவோத்தூருடையார் இவ்வூர் கைக்கோள முதலிகளில் உதினார்வ
படி வெஞ்சனத்துக்கும் ஸ்ரீபண்டாரத்து-
க்கும் திரந்த மு ௨௱ இப்பணம் இருநூற்றுக்கு இ
103
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 62/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சித்ரபானு வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. (1856-77) ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 102/1939-40 மொழி தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 60
அரசன் புக்கண்ணன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : கைக்கோளர்கள் தங்களது பொருட்களை வெளியே எடுத்துச் சென்று விற்பனை
செய்வதற்கு செலுத்தும் வரி ஆண்டொன்றுக்கு 70 பணமும், கயிறு விற்பனை செய்யும் வாணியர் (கற்றைவட வாணியர்) மற்றும் சேனைக் கடையார் செக்குவரி ஆகியோர் மீதான வரி ஆண்டொன்றுக்கு 30 பணமும் ஆக மொத்தம் 100 பணம் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கூடுதலாக பணம் பெறக்கூடாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
L 2. 3.
ஷஹி ஸ்ரீஐ 8ஹா ஊணலீமுற ஸ்ரீஅரியஇராய விபாட பாஷைக்குத் தப்பு- வராயர் கண்ட மூவராயர் கண்ட ஸ்ரீஅரியராய குமார புக்கண்ண உடையார்-
க்குச் செல்லா நின்ற விகுலாக௫ [வரு]ஷ£ தை பூ ௰ ௫ திருவகத்தூர்
கைக்கோளர் கற்றை
வட வாணியர் சேனைக்கடையார் செக்கு உட்பட பட்[ட]டை நூல் ஆ-
யம் ஆட்டைச் சம்மாதம் பேராயச் சம்மாதம் கையேற்பு அதிகை மாத
மாத இரட்டி கண்ணாயக்கர் மகமை மற்றும் ஆயத்தை நோக்கிக் கொ- ள்ளும் பல உபாதிகளும் உட்பட மலையாங்கட்டுக் குத்தகை வளையில் சுற்று
104
8. அரசர் அருளி செய்மி பூறுவ மற்ற மரிஆதி ஆண்டு ஒன்றுக்கு கைக்கோளர் போக்கு
9. கொள்ளும் 4 ஏய கற்றை வட வாணியர் சேனைக்கடை செக்குப் பட்டடை உட்-
10. கொள்ளும் 0 ௩௰ ஆக பு ஈ இப்பணம் நூறுமே கொள்ளக் கடவது ஆகவும் இது
11. ஒழிந்து வேறு ஒன்றும் சொல்லக் கடவது அல்ல ஆகவும் இதுக்கு அழிவு
12. சொன்னார் உண்டுஆனால் கெங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றான் புக்க
18. நரகம் புக்க கடவன் ஆகவும் இப்படிக்கு இவை வில்லவராயந் எழுத்து இது பன்மாஸேயும மகக
105
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 63/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : (கியி. 1856-77)
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 104A/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/115 (தெ.க.தொ.)
எழுதீது : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 61
அரசன் : பொக்கணஉடையார்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி மேற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டு திருவோத்தூருடைய நாயனார் கோயிலுக்குத் தேவதானமான ஊர்களாக இருந்த திருவோத்தூர் மற்றும் வையலுர் ஆகிய ஊர்களுக்கு ஆற்றிலிருந்து சிருப்பாசூர் வாய்க்கால் என்ற வாய்க்கால் வெட்டப்பட்டது. இந்த ஆற்றுக்காலில் இருந்து வரும் நீர் சாதாரண காலத்திலும், வெள்ளக் காலத்திலும், வறண்ட காலத்தில் சரிபாதியாக இரண்டு ஊருக்கும் பாயவேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது. கல்வெட்டு
1. ஹஹிஷஸ்ரீ [॥*] மகாமண்டலீசுரன் மகாராயண் அ[ரி]கராயன் குமார[ர்*] பொககண உடையாரர்*]க்கு செல்லாநின்ற வ[ரு*]ஷத்து மிறுச்சிய நாயற்று அபரபக்ஷத்து சனிக்கிழமையு[ம்*] சத்தமியும் பெற்ற பூசத்து [நாள்] ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலி[ஊ]ர் கோ-
2. ட்டத்து [க]ரழியூர்நாட்டு திருவோத்தூருடைய நாயனார் தேவதானம் ஆன திருவோத்தூர்க்கும் வையலூர்க்கும் சிருப்பாசூர் காலாக வெட்டுகிற ஆற்று[க *]கால் திருவோத்தூருக்கும் வையலூர்க்கு இந்த ஆற்று[க் ]*காலுக்கு வீர் பெருநீர்
3. அறுநீர் இரண்டு ஊரர்]க்கும் பாதிஆகப் பாய[க்]கடவதாகவும் இப்படிக்கு இவை பன்மாகேசுர ஈககஷ [॥*]
106
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 64/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : - ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: - மொழி : தமிழ் முன் பதிப்பு 3 4 எழுத்து : தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 62 அரசன் : சதாசிவராயர்
இடம் : நுழைவு வாயில் முன்மண்டபம் வலதுபுறச் சுவர்.
குறிப்புரை : வேலூர் பொம்மு நாயக்கரின் முகவரான திருவேணாதபிள்ளை என்பவர் திருவோத்தூர் கோயில் இறைவனுக்கு பூசை மற்றும் வழிபாட்டிற்காக 22 பொன் தானம் அளித்துள்ளார்.
கல்வெட்டு 1. மாகாமண்டலேசுர சதாசிவ தே . . . ச்சியம் பண் 2. ஈ-௨உ நீ மேல் செல்லா நின்ற . . . ௨௮௨ ௫ வேலூர் எம்ம பொம்முநா-
3. யக்கர் அய்யநுக்கு புண்ணியமாக தேவபூசை ரட்டியப்பர் திருவேணாத பிள்ளை பராபத்தித்தில்
4. . . . ல ௮ மலைக்கு தினப்படிக்கு மிட்ட கட்டளை நாள் ஒன்றுக்கு வாழைப்பழம் ய ௫ சக்கரை பலம் ௫ 6
5. ண்ணை ஷ €' இந்தபடிக்கு திருக்கோமிலுக்கு உபையமாக குடுத்த ௨௰ ௨ பரு இந்த பொந் இருபத்து இரண்டு
6. . . . அஞ்சுக்கு திருவோ . . . கைக்கோள முதலிகள் கையில் குடுத்து ருக்கு
7. சேனைக்கடையர் . . . ய௫ மாதம் ஒன்று . . . குடுத்து வரும் ட கக்கு குடுத்துவர கடைவர
107
. கவும் இகாமு . . . கறடஃ௨பு௬6 வட்டிக்கு சிலவாக னாள் ஒன்றுக்கு
சக்கரை . ம் . . . னையும் குடுத்த . . . கவும் மீசுரபுரம் அடைப்புகள் வசம் குடுத்த ஒரு நாள் ஒன்று . . . ங்வர்க் கடைவர்களாகவும் இந்த படி தருமம் சந்தி
. றாதித்தவரையும் . . . டைவர்களாகவும் இந்த தருமத்துக்கு யாதொருத்தர்
அகிதம் பண்ணினவர்கள் கங்கை கரையிலே கோத்திற சித்திறவதை பண்ணி
. தோ(ழ)[ஷ]த்திலே போகக்கடவராக
108
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 65/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : - ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: - மொழி சமஸ்கிருதம் (ம) தமிழ் முன் பதிப்பு தல எழுத்து கிரந்தம் (ம) தமிழ்
அரசு விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 63 அரசன் கிருஷ்ணதேவராயர்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நுழைவு வாயில் வலதுபுறச் சுவர்.
குறிப்புரை : தாணையம் (சேனை), இடங்கை வலங்கை, இடைதுறை, வெட்டிவரி போன்ற
வரிகளை அரசுக்கு செலுத்த வேண்டாம், அவற்றினை அகரங்களில் உள்ள கோயில்களுக்கும், தேவதானங்களில் உள்ள அம்மன் வழிபாட்டிற்கும் சர்வமாண்யமாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. 2.
ஹெஹி பேபி ஹநஹ மணணிமணாலஃ சனதராந்
ஸகல வ வொஹண ஸஸக்ஷண விக்க்ஷ்ணறாதம்நா 2ம22மாஹெ எதமா பட ஸஸமண வ,வீண கந் விசயாபரிச மஜவகி தே
. ண பாமொலி ஸெநுஷவ . . ஸெவமாந ஸகல நறபத்திரிமகாம சதுரீக
பானி தார திருபுரமும் வ, ஷெறாக விஜய வஹாந . . . க்ஷண ௨.௨. ஸ்ரீமத மஹா மண௰லேஸண்ற றாஜாயிறாஜ மாஜபரமே-
மூ ஸ்ரீவீரவ,_கா மேவ மஹாராயர் உரயிவிறாஜம் பணி அருளா நின்ற
௨.௨.௨ மேல் செல்லா நின்ற காலயுகி வருஷம் தை பஸ i
வாபக்ஷம் ஈமஸவுமி புண$காலத்திலே ௧-ஈண்டிர மண்டலத்திலே படவீடு மாஜடத்தில் சந்குகிரி ராசியத்தில் ஸவாமாநெ ஸ்ரீஹரிம கேவ வராஷணரு-
ணாம ம வஷானங்களில் ேவதையளுக்கும் ஹஷூ ஸ்ரீமன் மஹாமண்டலேயா ஸ்ரீவீரவ, தாபராந வளிராமப்பய சேவ மஹாறாஜாவின்
குமா।
109
10.
11.
12.
18.
14.
15.
16.
17.
இம்மடி ஆஷய மேவ 8ஹாராஜா ஈடஸவஷூதி புணட காலத்திலே ஸஹிரணெரா
உகமாராபூவ*மாகப் பண்ணிந மதத்துக்கு எல்லா தேத்து
. க்குமாக திருவோத்தூர் வேதபுரீமுமன் குமுதப்படைமிலே சிலாஸாதநம்
முத்திரை மநுஷூன் நரசப்பனாந வரவிட்டு பண்ணிக் குடுத்தபடி நம்-
முடைய மணியகாற மனுஷ தாணைய மென்றும் மிடங்கை வலங்கை என்றும் மிடைத்துறை வெட்டிவரி பலதளி பலவிதமாக சிறிது பொன்
வாங்கினாலென்று திருமலையிலே எல்லோரும் வந்து முன்[இ](மி)டுகையில் வாங்கிந பொன்னும் திரும்பக் குடுப்பிச்சு முன்னுக்கும் சந்திராதித்யவரைக்குத் தாணய முதலாகப் பேர் சொல்லி வாங்கிந
திரவியமெல்லாம் அரமனைக்கு வேண்டா என்று சிலாமமாதனம்
பண்ணிக் குடுத்தோம் ஓநபாலநம் யா29ஹெடஜாநா ஸ்ரீமாநு வாட தாந சி ஹம வாஷெொதி வாரா வரத வஹா ஹஊகைவலமி நீலோகெஸவெஷாஜதெ வஹமுஜாடி ந லெஜூூந
கணா றா விவ._.2த்தாவ ஸமஜும மாஸாக பு
ப KT ஜூ 2ஹெக-ளு வாணாடி காலெகாலெ வாஷநீயொ வவசுஷி:1 ஹவஃநெகொற் ஹாவிந: வாக்ஷி வெரூராற ஹஷூயொஹுூ மொ பாவதே றா2வக- மிப்படியே ஸவ*மாக; அகரங்களில் தேவ ஸஹாஹணநுக்கும் ஹவஃமாந, ஜேவேஹாநங்களில் தேவ தைகளுக்கும் ஹவ*மாநஷமாக நடத்த ஸ்ரிலாசாதநம் பண்ணிக்குடுத்தோம் ட
110
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 66/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1454 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1582 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 78/1939-40 தமிழ் முன் பதிப்பு த
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 64
வேதபுரீசுவரர் கோயில் மகா மண்டபம் தெற்குச் சுவர்.
அய்யன் வெங்கபர் என்பவன் திருவோத்தூர் உடைய நாமினார் கோயிலில் வைத்த திருவிளக்கினை தூசி என்ற ஊரைச் சார்ந்த செல்லக்கோன் என்பானின் மகன் கோனேரி என்பவன் தொடர்ந்து எரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளான்.
1. சாகாத்தம் ச௪௱ருமி௪ல் மேல் செல்லாநின்ற பிலவ வருஷத்து மிதுன
2. நாயற்று பூ[று]வ பஷ்ஷத்[து] தெச[மி]யும் திங்கள் கிழமையும் பெற்ற
புணர்பூசத்து
9. நாள் அத்திபற்று திருவோத்தூர் உடைய நயினார் கோமி[லி]ல் திருவிளக்கு
4. அய்யன் வெங்கபர் அ[ய்]யன் தன்மமாக விட்ட தூசி செல்ல கோன் மகன்
5. கோனேரியை விட்டது இதுக்கு . . . காராம்பசு கொன்ற (தோ) 6. தோஷதி[லே]போவர்
111
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 67/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3:
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 15-நூற். ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 83/1939-40 மொழி : தமிழ் முன் பதிப்பு ட
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண் : 65 அரசன் :
இடம் : வேதபுரீசுவரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூர் கோயிலில் இருந்த பல பண்டங்கள் கடையை கண்காணிக்கும் சாண்டில்ய கோத்திரத்து ஆரியன் முதலியார் திருவானைக்காவுடையன் என்பவன் கோமிலுக்குக் கொடுக்கும் பொருட்களை அதே அளவு அளித்து, தொடர்ந்து நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தினை கோயில் கணக்கர் நாற்பத்து எண்ணாயிர பிரம்மராயன் எழுதியுள்ளான். கல்வெட்டு 1. ஊக வஹயொகாகடி ஹம . . . ஸ்ரீ வெஃவழா. . பமாஹநஓ விற மமாஸநடி விமாவஹு வஷ*டி பங்குனி மாதம் முதல் தியதி முதலுக்கு 2. சாண்டிஷ மோகுத்து ஆரியன் முதலியார் திருவானைக்காவுடையானுக்கு நமக்கு பல பண்டங்களும் கண்காணி காணிஆட்சி ஆக தனக்கு இன்நாள் முதல் சந்திரா- 8. தித்துவரைக்கு தந்த அளவுக்கு இம்முதலுக்கு தனக்கு நாம் தந்த முத்திரையும் இட்டுத் தாழ்வற நடத்திப்போகவும் நமக்கு சரக்கு வேண்டுபவை தனணகாணி
4. ஆக கொண்டு இட்டு தாழ்வற நடத்த . . . இவை தானத்துக்கு சமைந்த கோயில் கணக்கு நாற்பத்து எண்ணாஇர வ,ஹறாயந் எழுத்து
112
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 68/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி. ஆண்டு : சகம். 1519 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1597 ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 79/1999-40 மொழி தமிழ் முன் பதிப்பு ததை
எழுத்து : தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 66
அரசன் -
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று தெற்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : கீழையாற்றூர் ஊரில் வசூலிக்கப்படும் வெட்டிவரி, சந்தவாசல், அரைவாசி
ஆகிய வரிகளின் மூலம் பெறப்படும் பணம், நெல், கொள்ளு ஆகியவற்றினை திருவோத்தூர் உடைய நாயனார் முன் தினம் ஒரு திருவிளக்கு ளிக்க மீசுரநாயக்கர் தன்மமாக அவரின் முகவர் தாத்தி நாயக்கர் அளித்துள்ளார்.
கல்வெட்டு :
1.
செகாற்த்தம் சருஈய௯ ன் மேற் செல்லா நின்ற நள வருஷம் மார்கழி மாதம் ஸ்ரீம௯ மீசுர நாயக்கர் காரியத்துக்-
கு கடவ தாத்தி நாயக்கர் உடையார் திருவோத்தூருடைய நமினாற்கு தினக்கட்டளையாக நிற்றம் ஒரு திருவிளக்கு
. சன்னதியிலே மீசுர நாயக்கர் தன்மமாக திருவிளக்குமிட அத்திப்பற்று
படைவீட்டுக்கு வெட்டிவரி மிறுக்-
கும் கீழையாற்றூர் வெட்டிவரி சந்தல்வாசல் அரை வாசி உட்பட மிரேகைப்படி பணம் அரிசி கொள்ளு உண்டான தெ-
௨ ல்லாம் கோயிலுக்கு திருவிளக்குக்கு விட்டோம் மிந்த தன்மம் வருகிற
வருகிற மணியகாறர் கொல-
காறர் நாயக்கர் தன்மமாக சந்திறாதித்தவரையும் நடத்தக் கடவர்களாகவும் மிந்த தன்மத்துக்கு யா-
தொருத்தர் அகுதம் பண்ணினவன் கங்கை கரைமிலே காராம் பசுவை கொன்ற தோஷத்திலே போகக்கடவர்களாகவும்
113
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 69/2017
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம். 1520 செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1598 திருவோத்தூர் க இ.க. ஆண்டறிக்கை: 99/1999-40 தமிழ் முன் பதிப்பு தள்
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 67
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப மேற்குச் சுவர்.
மீசுர நாயக்கர் சார்பாக அவரது முகவர் தாத்து நாயக்கர் என்பவர் திருவோத்தூர் இறைவனுக்குத் திருநந்தாவிளக்கு ஒன்று வைத்துள்ளார்.
1. செகாற்தம் சருஈஉ௰ன் மேற்செல்லா நின்ற பிங்கள வருஷத்து மேஷ
நாயற்று . . .
2. காரியத்துக்கு கடவ தாத்து நாயக்கர் உடையார் திருவோத்தூருடைய
நமினாற்கு . . .
3. திருவிளக்கு சன்னதியிலே மீசுர நாயக்கர் தன்மமாக திருநுந்தா விளக்கு
4. டுக்கு சாதம் மிறுக்கிற தண்டலம் தென்னவராயகோன் மகன் சேவக்கோனை
5. யாக விட்டோம் மிவன் பிள்ளை பிள்ளை தலைமுறை சந்திராதித்தவரையும்
6. கு சாதம் மிறுக்க கடவனாகவும் இந்த தன்மத்துக்கு அமிதம் பண்ணினவன்
7. பிலே காராம்பசுவை கொன்ற பாவத்திலே போககடவர்களாகவும் தாத்து
114
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 70/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சுகம். 1542 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1620 ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 77/1939-40 மொழி தமிழ் முன் பதிப்பு : எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 68 அரசன் - |
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் தெற்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நாயனர்க்கு தினமும் திசவிளக்கு, அமுதுபடி, நெய்க்காக
வேண்டி சதாசிவ நாயக்கராய்யன் என்பவர் அத்திப்பற்று படைவீட்டு இடைத்துறை ஊர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். இவ்வூரில் குடியிருக்கும் மூவரை தொடர்ந்து நடத்திட இராக்குருபெருமாள் என்பவன் நியமித்துள்ளான்.
கல்வெட்டு :
1. செகாற்த்தம் சருஈ௪யஉ ன் மேல் செல்லா நின்ற பிறமாதி வருஷ சித்திரை மீ” ௨௰ தியதி ஸ்ரீம௯
சதாசிவ நாயக்கர் காரியத்துக்கு கடவ மிராக்குருப்பெருமாள் உடையார் திருவோத்தூருடைய ந-
௨ மினாற்கு தினக்கட்டளையாக நிற்றம் யாண்டு திச விளக்கும் அமுதுக்கு படைத்த நெய்க்கும் வி-
. நாயக்கர் சத[ர][சிவ நாயக்கரய்யன் தன்மமாக அத்திப்பற்று படைவீட்டுக்கு மிடத்துறை மிறுத்த குடிதந-
, தார் பென்னநம ...... பெரியாணையும் அரியாணையும் திருவிளக்குக்கும் அமுதுக்கும் நெ-
உய்க்கும் விட்டேன் யிவர்கள் பிள்ளையள் பிள்ளையள் தலைமுறை சந்திறாதிதவரையும் வேதபுரிநாதற்கு ஊழி-
115
7. யம் பண்ணி சாத்த கடமை பணமும் நெய்மிம் கோயிலுக்கு மிறுக்க கடவர்களாகவும் நாயக்கர் சதாசிவ நாயக்கரய்ய-
8. ன் தன்மமாக விட்டேன் மிந்த தன்மத்துக்குமியாதொருத்தர் அகுதம் பண்ணினவர்கள்
9. கெங்கைக் கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திலே போகக்
கடவர்களாகவும்
10. இவை யிராக்குருப்பெருமாள் எழுத்து
116
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 71/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : விஜயவருடம் வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 16-17 நூற். ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 109/1939-40 மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண்: 69
அரசன் -
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : மருதரசர் படைவீட்டில் இருக்கும் கன்னட பிராமணன் அவதாது அண்ணப்பர் மகன் சோமதேவர் என்பவருக்கு 1500 குழி நிலம் திருமுகக் காணியாக திருவோத்தூருடைய நாயனார் கோயில் தானத்தார் வழங்கியுள்ளனர். இந்நிலத்தினைத் தனது சீவிதம் ஆக கொண்டு அனுபவித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். கல்வெட்டு : ம. விஜய வருஷூ அற்பசி மாதம் எட்டா[ம்] தியதி ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து கா- 2. ழியூர் நாட்டு அத்திப்பற்று திருவோத்தூருடைய நாயனார் கோயில் தானத்தாரோம் மருதரசர் படைவீட்டி- 3. ல் இருக்கும் கண்னடிய பிராமணரில் அவதாது அண்ணப்பர் மகனார் சோம தேவர்க்கு திருமுக கா- . ணி குடுத்தபடி உடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு அடிக்கீழ் நிலைக்கு நாள் ஒன்றுக்கு 8. ஐ ௩டக்கும் மாதம் ஒன்றுக்கு ப ௩க்கும் அடைத்த திருநாமத்துக்காணி செய்யாற்று வென்றாநல்லூரி- 6. ல் சிற்றேரி கீழ் சென்னல் செறு € ௨ சந்திரசேகரன் 6 ௩௱ பெரிய ஏரிகீழ் கீ ௯ ஆக டூ சரா 7. இக்குழி ஆயிரத்து அஞ்லூறும் இந்நிலைக்கு சீவிதம் ஆக கைக்கொண்டு சந்திராதி-
8. த்தவரையும் ஆண்டு கொள்ளவும்
Hm
117
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி
எழுத்து
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை செய்யாறு திருவோத்தூர்
தமிழ்
தொடர் எண் :- 72/2017
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண்:
கி.பி. 16-17- நூற். 76/1929-40
70
வேதபுரீஸ்வரர் கோமில் முதல் திருச்சுற்று தெற்கு வெளிப்புறச் சுவர்.
திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவில்
மூன்றாம் திருநாள் செலவுகளுக்காக இக்கோயில் தானத்தார் வசம் காழியூரில் உள்ள நிலம் ஒன்றினை ராயசம் ராமசந்திர தீஷிதர்அய்யன் வழங்கியுள்ளார்.
1. விசைய வருஷூ தையி மீ” மக ௨ உடையார் திருவோத்தூர் உடைய
நயினார் கோயில் தானத்தாற்கு மி ராயஸடி ராமசந்திர தீக்ஷிதர் அய்யன் தன்மமாக சித்திரைத் திருநாள் மூன்றாந் திருநாள் உபையத்துக்கு
காழியூர் பெரிஏரி எதுவாய்ப்பிறவடை கணபதிய
பிறவடை
. . கிழார் உள்ளிட்டார்
2. மேற்கு மாவிலங்கை மேட்டுக்கு கிழக்கு உள்பட்ட பிறவடையளும் அவுடத்திற் உண்டான நிலம் உள்ளதும் காழியூர் ஊரவரை உடன்படுத்தி அவர்களைக்
* கல்வெட்டு முழுமை பெறவில்லை.
கொண்டு தானத்தாற்கு உதகம் பண்ணிவித்து மூன்றாம் திருநாள்
உபையத்துக்குச் செல்ல*
118
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 73/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 16-17 நூற். ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 116/1999-40 மொழி : தமிழ் முன் பதிப்பு நட
எழுத்து : தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண்: 71
அரசன் ற்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நயினார் கோயிலில் (தேவார மூவர் முதலிகளில் ஒருவரான) திருஞானசம்பந்தப்பெருமாளுக்கு சித்திரைத் திருநாள், ஆனித்திருநாள் திருவிழாக்களில் பத்தாந் திருநாளில் நிறுத்த மண்டபத்தில் திருகண்சாத்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் திருஞானம், சுகந்தம், அடைக்காயமுது, திருவிளக்கு ஆகியவற்றிற்காக 100 பணம் அளித்து 200 குழி நிலம் ஒன்றினை வாங்கி இந்நிலத்தின் மூலம் வரும் மேல்வாரத்தினைப் பயன்படுத்திக்கொள்ள நமினார் திருச்சனை என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். கல்வெட்டு : - பராபவ வருஷூ புரட்டாதி மீ” ௨௰ ௫/-ம்' மிந்திரபரம் உடையார் திருவி ௨.௨.௨. வேளார் சகடை நயினார் திருச்சனையாற்கு திருவோத்தூர் உடை
1
2
3. யார் திருவோத்தூருடைய நயினார் கோயில் தானத்தார் ஓம் சம்பந்தப்பெரு 4. மாள் நாயினாற்கு நடத்திற உபையத்துக்கு கல்வெட்டு பிறமாணம் பண்ணி 5
- குடுத்தபடி சித்திரை திருநாள் ஆனித்திருநாள் பத்தாந் திருநாளிலே சம்பந்தப்பெரு 6. மாள் நயினார் எழுந்தருளி சன்னதி நிற்த்த மண்டபத்திலே திருக்கண் சாத்திற உ 7. பையத்துக்கு திருஞானத்துக்கும் சுகந்ததுக்கும் அடைக்காயமுதுக்கும் திருவிள 1. ௫-தேதிக்கான குறிமீடு
119
10.
12.
19. 14.
. க்கு ஆக மிந்த உபையத்துக்கு முன்னாள் திருவ[ண்]ணாமலை உடையான்
கையில் விட்ட 8 ௪ம௰
. வல்லமுடையார் மாணிக்க நாமினார் கையில் வரவிட்ட ஸீ சும ஆக ட௱
இந்த பணம் நூ- ற்றுக்கும் விலையாக விற்ற மேலை கோமில் நங்கைக் 6' ஈ கீழைகோயில் நங்கைக் € ஈ ஆக 6 ௨ இந்த
. இருநூறு குழியில் மேல்வாரம் கொண்டு இந்த உபையம் சந்திறாதித்தவரையும்
நட-
த்தக் கடவோம் ஆகவும் இவை சந்திரமவுலி ஆழ்வார் எழுத்து இவை சைய்வசேகர பண்டிதன்
எழுத்து இவை தேவேந்திர பட்டன் எழுத்து
இவை திருடண்ணாமைல](க) பிரமாராயன் வீரட்டன் எழுத்து
120
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 74/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 16-நூற். ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 121/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு 8: ௮
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 72
அரசன் *
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நுழைவு வாமில் உள்பக்கம் இடதுபுறச் சுவர்.
குறிப்புரை : இவ்வூரில் இருந்த மூன்று பேர் தங்களுக்கு இவ்வூரில் பங்காக இருந்த
நிலத்தினை அடைமானம் வைத்திருந்தனர். அந்நிலத்தினை விற்று உரிய காசுகள் பெற்றுக்கொண்டுக் கோமிலுக்கு சிந்திக்க வேண்டிய வரிமினைக் கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு
1. 2. 3.
சுக்ல்ல வருஷூ காத்திகை மாதம் ௪ ௫” உடையார் . . . ஈயில் தண
பத்தூர் திரு. . . ணாதநும் திருவேங்கடமுடையா . . .
யெ ஒரு மாவரையும் நாங்கள் மாகாசெணத்தின் . . .
யேழுமா முக்காணி அரைக்காணியும் கணி . . . கிரம € ௭9 யும் நீக்கி
யெங்கள் மூன்று பேர்
மனையும் தறிக்குடியும் மற்றும் எப்பேற்பட்ட சகல சமுதாயப் பிறாத்தியு முள்பட 'மலைத்தாங்களில் எங்கள் . . .
ணம் நூற்றெழுபதுக்கும் வட்டிக்கு சிலவாக மிந்தப் பங்கு காகயும் 6 ௨௰ஷயும் மேலைத் தாங்கலில்
வித்து கொள்ள கடைவராகவும் அநுபவிக்கும் மிடத்திலிற்றை நாள்
௨.௨.௨றுக்கும் பத்து . . . அஞ்சு பணம் விழுக்காடு வட்டியுமிட்டு ஏறின வட்டியு முதல் பணமும்
121
9. நின்றால் 8மரியாதியாதி . . . யிதுக்கும் வட்டிமில் கூட்டின டீ ஈசுமஆக
ட ௪௯௫ கை
10. . . . நத்தம் நத்தகுறை ஏரி எதிர் வாய் . . . பிறவடை 11. சகல சமுதாய பிறாத்தியமு . . . கொள்ள கடைவாராகவும் அனுபவிக்கும் மிடத்து இதுக்கு
122
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 75/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு $=
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
டி திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 98/1900
மொழி தமிழ் : i முன் பதிப்பு : 7/108 த (தெ.க.தொ.)
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 73
அரசன் ட
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நாயனார் கோயில் நிர்வாகத்தினரான தானத்தார் புலியூர்
பெரும்பாக்கத்திலுள்ள 250 குழி நிலத்தினை பல்லவராயர் பிள்ளை என்பவரிடம் 100 பணம் பெற்றுக் கொண்டு கேதாரி நாதர் மடத்துக்காக விற்றுக் கொடுத்துள்ளனர்.” இந்நிலத்தின் மீதான வரிகளைப் பெறுவதில்லை என்றும் தெரிவித் துள்ளனர்.
கல்வெட்டு :
|
[ட தத த் த் - ட ந
குறோதனவருஷம். ஆவணி மீ” ௮ ௨ திருவோத்தூருடைய நாயினார்
. கோயில் தானத்தார் பல்லவராயர் பிள்ளைக்கு சண்டேசுர விலை-
ப் பிறமாணம் பண்ணிக்குடுத்தபடி காலாண்ட[*]ர்கள் தெருவில் பல்லவரா[ச] ௨ சிவன் கேதாரிநாதர் மடத்துக்கு புலியர் பெரும்பாக்கத்தில் நன்செய்
௨ நிலத்தில் கோலம் குழி ஈரும் மொடிசெறு குழி ஈரும் (பிராயன்) பிராயன்
6 ௨ குழி [ஈ]ரம முருக்கன்குண்டில் உ ரம ஆக குழி ர௱ இந்த குழி அஞ்-
- லூற்றுக்கும் விலைப்படி ப௱ இப்பணம் நூற்றுக்கும் இந்த நிலம் சந்திறாதித்- ௨ தவரையும் அனுபவித்துக்கொள்ளக்கடவர் ஆகவும் இந்த நிலத்தை
123
15.
16. 17. 18.
19. 20.
21.
22.
23. 24.
. நோக்கிவரும் அரைமனையிற் பிறக்கும் பழவரி புதுவரி காணிக்கை தட்- . டாயம் திருவோத்தூரில் இறுக்கும் பலவரிகளும் [வ]ச்ச வினி(வி)யோகமு- . ம் பாடிகாவல் தலையாரி பேராமை எப்பேற்பட்ட சகலவரிகளும்
. கொள்ளக்கடவது அல்ல ஆகவும் இப்படி சம்மதித்து சண்டேசுரவிலை- . ப்பிறமாணம் பண்ணிக்குடுத்தோம் பிள்ளை பல்லவராயர்க்கு திரு வோத்தூரு - . டைய நாமினார் கோயில் தானத்தாரோம் இவை சந்திறமவுலி ஆழ்வார்
எழுத்து இவை சைவசேகரபண்டிதர் எழுத்து இவை [க]ம்ப[நா]ரணனார் எழுத்து இவை
நாமினார் எழுத்து இவை கோயில்கணக்கு திருவுண்ணாழிப் பிரமராயன்
எழுத்து இவை டட. ரன் எழுத்து புவனாபதிதேவர் எழுத்த
குறோதன வருஷம் ஆவணிமீ” [௮ ௨] பிள்ளை பல்லவராயர் பிள்ளை திருவோத்தூர்
காலாண்ட [£*]ர்களில் திருப்பாட்டு காங்கேயர் மகனார் பல்லவராசசிவனுந்
திருவிட்டுக்குடுத்தபடி நாம் திருவோத்தூரில் தானத்தார் பக்கல் கொண்ட மனை
யும் புலியர் பெரும்பாக்கத்தில் நன்செய்நிலத்தில். கொண்ட ஒ ரம-ம் மனையும் ன்
சந்திறாதித்தவரையும் தாமே அனுபவித்து நம்முடைய மடம் நன்றாக நடத்த-
க்கடவர் ஆகவும் இப்படிக்குத் திருவிட்டு இட்டுக்குடுத்தமைக்கு இவை
பல்லவராயர் எழுத்து [1]
124
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 76/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 17-நூற். ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 122/1939-40 மொழி தமிழ் முன் பதிப்பு க
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 74
அரசன் ன்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் வலது நுழைவு வாயில் உட்கோபுரம் கிழக்குச் சுவர்
குறிப்புரை : கோநேட்டி திம்மைய தேவமகாராயர் நிர்வாகத்தில் அவரது முகவரான அன்னதான
பேரேற்றுப்பிள்ளை என்பவர் இக்கோயிலுக்குச் சொந்தமான திரைச்சீலை, திருப்பரிவட்டம், திருவெண்சாமரம், தேர்வடம், கொடி, குடை, திருவாடுதண்டு ஆகியவைகளை இரவலாக யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று கோமில் அதிகரிகள் மற்றும் கணக்கருக்கு கட்டளையிட்டுள்ளார். கல்வெட்டின் நடுப்பகுதி கட்டடப் பகுதிக்குள் மறைந்துள்ளது
கல்வெட்டு
1. ௨ ஆனந்த வருஷூ தை . . ல் சுரார முராசு கோநேட்டி
2. திம்மைய தேவ2ஹா[ராயற்கு] . . . கற்த்தரான அன்னதான பேரே-
3. ற்றுப் பிள்ளை அதிகார கு . . . மக் கணக்கப் பிள்ளையளும் தவம்
4. க கட்டைளையிட்டபடி நாள் . . . ல் திரிச்சீலை முதலான திருப்பரி-
5. வட்டமும் திருவெண்சாமரமு . . . சோடிப்பும் . தேர்வடமும் கொ-
6. டி குடையிடக்கைய் மப் . . . முட்டும் திருவாடுதண்டும் யா-
7. தொருத்தர் மிரவிலே ன்று . . . மும் கேட்க வந்தவன் அபிமானமும் மிது
8. குடுக்க சொன்னவர்கள் ௮ . . . ம் திருவத்தூர் ஏழு வெட்டியாற்ரும் குடுக் -
9. க கடைவர்களாகவும் . . . ல்வெட்டை அசிங்கதம் பண்ணினவர்கள்
10. கெங்கை கரையிலே தங்கள் . . . யும் தங்கள் கையாலே கொன்ற
பாவத்திலே
11.
போக கடைவர்களாகவும்
125
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 77/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1800 செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1978 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 80/1999-40 தமிழ் முன் பதிப்பு ட
கிரந்தங் கலந்த தமிழ் விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண் : 75
ஹரிஹரர்
வேதபுரீசுவரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்குச்சுவர்.
நாவனை அக்ரகாரத்தில் வசித்து வரும் பூதிமாஷ கோத்திரத்து ஆசுவலாயன குத்திரத்து ரிக்வேதம் கற்றறிந்த மாதரசர் வசவணங்கள் என்பவர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க கோட்டத்து காழினர் நாட்டு திருவோத்தூர் கோயிலுக்குத் திருநந்தவனம், சத்திரம், மடம் ஆகியவற்றினை நிர்வகிப்பதற்கு கோயில் ஸ்தானிகர் வசம் நிலம் ஒன்றினை அளித்துள்ளார். தினமும் இறைவனுக்குத் திருநந்தவனத்தில் இருந்து பூக்களைக் கொண்டு திருமாலை சாத்திட திருமாலைப்புறமாக நிலம் தானமளிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரத்தினை நிர்வகிப்பதற்கு குடிமனை ஒன்றும் தானமளிக்கப்பட்டுள்ளது.
1. ஹஹஷிய்ீ ஹாஊணமலெறறற ௬றிறாய விலாடற் லாஷெிஷூக்குத் தப்புவராயர்
கண்டன் வவ வம) உஊஷிணொத்தற ஸ2-2,ாமிவசி ஸ்ரீவீமஹறியப்ப உடையர் உரயிவிமாஜு பண்ணா நின்ற ஸகாவூ சூக௱ன் மேல்
2. செல்லா நின்ற காஓஒயுக்த வஷூஏ 8ஷல நாயற்று ௬வ௱ வக்ஷத்து வகசியுடி
திங்கள் கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் நாவனை ௯.ம, ஹாறத்தில் பூகிராஷ மோகுத்து சூழுலாய ஹுக.த்து 8ஹெகி மாதரசர் வஸவணங்கள் ஜயங்கொண்டசோழ ம-
3. ண்டலத்து காலியூர்க் கோட்டத்து காழினர் நாட்டு திருவோத்தூர் உடையார்
திருவோத்தூருடைய நாயனார்க்கு திருநந்வநத்துக்கும் குத்துக்கு ஊத்துக்கும் ஹானிகர் பக்கல் கொண்டு விட்ட ஆற்றுக்கு வடக்கு ஏரிகரைக்கு தெற்கு ஸெவாயிறாஜா கொல்-
126
4. லைக் கோட்டத்துக்கு மேற்க்கு திருவல்லமுடையார் ஜீவநத்துக்கு கிழக்கு கிளிச்சிறாக்கைத்தாக்கு நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலமும் மரமும் கொண்டு இன்னாயனார்க்கு நாள் வழி திருப்பள்ளித்தாமந் சாத்தி திருமாலைப்புறமாகவும் மரத்தில் உள்ள பழங்கள் ஆடி அருள அமுது
5. பித்து சூவரகூரவஹாயி ஆக நடக்க கல்லுவெட்டிக் குடுத்தோம் இதுவும் ஹத, மடத்துக்கு கொண்ட வடக்கு திறந்த சிறகினில் விக்ஷ£ஸத்துக்கு கிழக்கு காலாண்டார் மனைக்கு மேற்கு மனைகமுகு சேரலந் குடிமனை ஒன்றும் மனைப் பட[ப்]பையும் ஸகுத்துக்கு விட்டோம் இப்படி . . .
6. லைப்புறமும் மும் கொண்டு விட்டோம் இன்த ம$29 சூவகாக௯௯ ஹாயி ஆக நடக்கும்படி கொண்டு குடுத்தோம் வஸவனங்கள் இது பன்மாஹேஸற ஈகக்ஷ உ
127
த.நர.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 78/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம். 1290 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1908 ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 90/1939-40 மொழி : தமிழ் முன் பதிப்பு தன
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண் : 76 அரசன் : கம்பணன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : காஞ்சிகுறி பாரத்துவாசி சைவாதிராஜன் என்பவருக்கு அத்திபற்று திருவேங்கட நல்லூர் ஊரில் நாட்டு அளவு கோலால் அளக்கப்பட்ட 4 வேலி நிலத்தினை இறைநீக்கி வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு ' :
1. ஹஷிஸ்ீ 2௯ ஹாணலேமுாற் அரிறாய விபாடன் லாெிஷக்குத் தப்புமராயர் கண்டன் பூவ” ஊஷிண வயிசொத்தற ஸஹ . . .
2. நாயகன் ஸ்ரீவீரபொக்கண உடையார் குமார கம்பண உடையர் வடயிவிறாஜம் பண்ணி அருளா நின்ற காணு ௬௨௭௭௯ மேல் செல்லா
9. நின்ற கீலக வருஷத்து கன்னி நாயற்று உ௫வ*வக்ஷத்து திகியெ யும் திங்கட் கிழமையும் பெற்ற பூசத்து நாள்
4. காஞ்சிகுறி லாறத்துவாசி ஸெவாயிமாஜற்கு ௨ஃகவ-9வ-8க வாதசிகவெரையும் செல்லக் குடுத்த நிலம் நாட்[டு அள*]-
5. வு கோலால் நிலம் நாலு வேலிக்கு அத்தி பற்றில் திருவேங்கட நல்லூர் நன்செய் புன்செய் உட்பட ஸவ" 8[ஈந;]
6. அகர இறையிலி லட்டவரத்தி ஊர் அடங்கலும் சன்திராதித்தவரையும் நடக்க விட்டோம் இவை பன்மாஹேறற [மடெக்ஷ]*
128
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 79/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 17-18- நூற். ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை:
மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து தமிழ்
அரசு : 2 ஊர்க் கல்வெட்டு எண்: 77
அரசன் ஸ்
இடம் : காங்கியம்மன் கோயில் நுழைவு வாயில் வலதுபுறம் உள்ள நவகண்டச்சிற்பம்.
குறிப்புரை : இருஞ்சிபுரத்தைச் சார்ந்த வீரன் ஒருவன் தனது தலையை அரிந்து இறைவிக்கு காணிக்கை கொடுத்துள்ளான்.
கல்வெட்டு 1. பராப வருஷ 2. டி சித்திரை மாதம் ௨௰௫ 3. தியதி இருஞ்- 4. சி பரத்தில் 5. இருக்கும்
129
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 80/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1125 திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 88/1999-40 தமிழ் ப முள் பதிப்பு பல
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 78
விக்கிரமசோழன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் சன்னதி மேற்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்துக் காயிரம்பேடு நாட்டு அரியாவூர் ஊரைச் சார்ந்தோர் திருவோத்தூர் கோயிலில் இருக்கும் சிவயோகி சூரசாரம்பி ஆரனைதியாகி ஆண்டார் என்பவர் இக்கோயிலில் செந்நெல் அமுது செய்விக்க வேண்டித் திருவோத்தூர் கோயில் பண்டாரத்திலிருந்து அன்றாடு
நற்காசு 180 காசுகள் பெற்றுக்கொண்டு 5 வேலி ஒரு மா அளவு நிலம் கோயிலுக்கு விற்றுக் கொடுத் துள்ளனர்.
1. ஷஹஹிஸ்ரீ பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தரப் பாமாலை மலிந்த
பன்மணித்திரள புயத் திருநிலமடந்தையோடு ஜயமகளிருப்பத் தன்வரை மார்-
2. வந்தன் தெனப் பெற்றுத் திருமகளோடு தனிமிருப்பக் கலைமகள் சொற்றிறம்
புணர்ந்த கற்பிணளாகி விருப்போடு நாவகத் திருப்ப அகிலபுவனமுங் கவிப்ப-
3. தோர் புதுமதிபோல வெண்குடை மீமிசை நிழற்றத் திசைதோறுந் திகிரியோடு
செங்கோல் நடப்பக் கருங்கலியொளித்துப் பிலத்திடைக் கிடப்பக்குற-
4. த்திடைத் தெலுங்க வீமன் விலங்கல மிசை ஏறவுங் கலிங்கர் பூமியைக்
கனலெரி பருகவும் ஐயம்படைப் பருவத்து வெம்படை தாங்கி வேங்கை மண்டலத் தாங்கிளிதிருந்து வ-
5. ட திசைவ்விருப்பருத்தருளித் தென்றிசைத் தருமமுந் தவிழ்ந்தானமுந்
தழைப்ப வேதமும் மெய்ம்மையுமாதியுகம் போலத்த தலைத்தலை சிறப்ப வந்து ச-
130
டக
12.
18.
14.
15.
16.
17.
18.
டர்மணி மகுடம் முறைமயிற்குடி மன்னுமிர்க்கெல்லாமின்னுமிர்த் தாய் யொற்றண்ணளி பரப்பித் தனிவந்து தான் கொற்றவாய் தலபுறத் து ம-
ணி நடவோடுங் கமுர்ச்முஸ்க விசயமும் புகழுமென்மோலோங்கச் செழியர் வெஞ்சுரம்புகச் சேரலர் கடல்புக அழித்தருளி சிங்கணர் அஞ்சி டெ
நஞ்சலமரக் கங்கர் திறைமிடக் கன்னடர் வெந்நிடக் கொங்கரொதுங்க கொங்கணர் சாயமற்றெத்திசை மன்னருந் தந்தந் தமக்கராணனத் திருமலர்ச் டே
சவடி உரிமமிலிறைஞ்சித் தொல்லை ஏழுலகுந்தொழுதெழத் தோன்றிய முல்லை
வாரநங்க முக்கோக்கிழாநடி உமையோடு சங்கரன் இமயச்சீமை
. யத்திருந்தனநெனப் பொருந்தி உடநிருப்ப ஆங்கவன் மகழுங் கங்கையொப்பாகிய
தெரிபயரத்தில் தந் தியாகபதாகை புரிசூழல் மடப்பிடி புனித குணவனி-
தை திரிபுவனமுழுதுடையாளிவன் திருவுள்ளத்தருள முழுதுடையாளேன்
உடநிருப்ப வீரஷஸிஃஹாஸநதீது முக்கோக் கிழாநடிகளோம் வீற்றிருந்தருளி-
ய கோப்பரகேஸரி வநறாந கதி கி,ல-நச் சசூவர்த்திகள் ஸ்ரீவிக்கிரமசோழ சேவர்க்கு யாண்டு ஏழாவது கட்டின் உணா மண்டலத்துக்-
காலியூர் கோட்டத்துக் காயிரும்பேடு நாட்டு அரியாவூர் மன்றுனா வணக்களமர் கேட்டு நிகழ்ந்த நிலவிலை ஆவணக்கை எழுத்து இவ்வூ-
ர்க்குச் சமைந்து ஆணிகிழவன் ஏறன் பித்தனும் அவனிவீமனும் ஏறன் நிமத்தனும் தியம்பன் சூராவனும் கருவூர் ஆராவமுதும் நிமித்தன் காக்கு நாயகனு-
ம் ஆதித்தனானும் இவ்வனைவரோம் ஊர்க்குச் சமைந்து இக்கோட்டத்துக்குக் காழியூர் நாட்டு திருவோத்தூர் திருவோத்தூருடையார் ஆதிகசாஸம-
ணேறாறற்கு நிலம் நாங்கள் விற்று குடுத்த பரிசாவது இக்கோயிலில் கும்பிட்டிருக்கும் மிவயோமி ஹ-மஸஹாரம்பி ஆரணதியாகி ஆண்டார் ஷிக்கஷ புக்-
கு ஆருடையாரைச் சென்நெல்லமுர்த்து செய்விக்க நிலங் கொண்டு தேவர் ஸ்ரீமண்டாரத்து ஒடுக்கி இருந்த காசில் நாங்கள் யாண்டு ஏழாவது எங்களூர்ப்
பட்டிறைக்கு இவ்வாளுடையார்க்கு சென்நெல்லமுர்து செய்தருள விளைநிலம் குடுக்க நாங்கள் கொண்ட அன்றாடு நற்காசு நூற்று முப்பது இக்கா-
131
20.
21.
22.
28.
24.
25.
26.
27.
28.
29.
சு நூற்று முப்பதுங் கொண்டு நாங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது எங்கள் காணியான தண்டலத்தில் தென் கழனியில் தெற்கில் ஜயங்கொண்ட சோழப்
பேராற்றுக்குத் தெற்கிற் கொல்லைத் தரத்தில் கொல்லையில் நாங்கள் விற்றுக் குடுத்த பூமிக்கு எல்லையாவது தென்பாற்கெல்லை காரணை மடுவின் தெ-
ன் நாசறுதியே கிழக்கு நோக்கி திருவுனாயகர் மடப்புறத்துக்கு நீர் பாயும் வாய்க்காலின் வடகரைக்கு வடக்கும் கீழ்பாற்கெல்லை வழிச்ச கிழான் நம்பி திருத்தி
ண கீழ்வரம்புக்கு மேற்கும் வடபாற்கெல்லை மேற்படி செறுவின்று வடவரம்புக்கு தெற்கும் இவ்வரம்பே மேற்கு நோக்கி வேப்பங்கன்றிலே
பற்று மேற்கு நோக்கிப் போய் வடமேலை மூலை விளாக கொல்லையின் தென்நாசறுதிக்கு தெற்கும் மேல்பாற்கெல்லை பள்ளிபழயஞ்சி திருத்தின டே
மல் வரம்புக்கு கிழக்கும் இன்நாற்பேரல்லைக்குட்பட்ட உண்ணிலம் ஸ்ரீபாதக்கோலால் நஞ்சை விளைநிலம் குழி எண்ணாயிரத்தொரு நூரும் புஞ்சை
நிலம் செய்யாற்றுக்கு வடக்கும் பெருவழிக்கு வடக்கு மேட்டில் நிற்கும் வேட்பாலை நடுவாக புஞ்சை விளைநிலங் குழி இரண்டாமிரமும் ஆக நஞ்சை
புஞ்சை விளை நிலம் குழி பதிநாமிரத்தொரு நூற்றிநால் நிலம் ஐஞ்சே ஒரு மாவும் இன்நிலங்களுக்கு நீர்பாயக் கொல்லை நடுவே மேற்கு நோக்கி ஜயங்டெ
காண்ட சோழப் பேராற்றிலே வர நீர்பாய வாய்க்கால் கல்லிக் கொள்ளப்பெறுவதாகவும் இவ்வாய்காலால் பாயும் நீர் இன் நிலங்களுக்கல்லது மற்-
று நீர் பாயப்பெறாததாகவும் முற்சொல்லப்பட்ட ஐஞ்சே ஒரு மாவுக்கும் எம்மில்லிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு நூற்று முப்பது இக்கா-
சு நூற்று முப்பதும் ஆவணக்களியே பொருளறக்கொண்டு விலையற விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் குடுத்த பரிசாவது நாங்கள் வி-
132
90.
81. 92.
33. 94. 35. . . 36.
87.
ற்றுக் குடுத்த ஐஞ்சு வேலியும் ஒரு மாவுக்கும் ௯,ய உ,வுமும் இறை ஆஹுமும் கொண்டு இன்நிலத்துக்கு வஉாகித்தவரை இறை இழிச்சி நீர்நிலை செ
நல்லந்தராயம் சில்லிறைநற்சோறுமாட்டென்றும் வெட்டி முட்டையாள் என்னும் திருக்கொற்றவாய்ப்பாற்போந்த மற்றும் எப்பேற்பட்ட குடிமைகளும்
சால்லிப் பெறாததாகவும் இன்நிலஞ் சுட்டிவந்த நாங்களே இறுக்கவுஞ் செய்யவுங் கடவோமாகவும் ஸம்மதித்து விற்று விலையாவணஞ் செய்து
குடுத்தோம் முற்சொல்லப்பட்ட பரிசே இருகாலாவதும் முக்காலாவதும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு நூற்று முப்பதும் . . பொரு
ளைக் கொண்டு விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் ஊர்க்குச்
சமைந்த இவ்வனைவோம் இவர்கள் வேண்ட இவ்வாவணங்கேய்
எழுதிநேன் இவ்வூர் ஸமிவவாஹணந்
ற ஹன் திருமகாளமுடையான் லட்டநேன் . . . எழுத்து இப்படி
அறிவேன் இவ்வூர் வைகாநஸ . . . காஸ்டபன் அழகிய மணவாள
லட்டநேன் . . . எழுத்து
இப்படிக்கு இவ்வூர் ஆணிகிழவன் கருவூர் ஆராவமுதன் எழுத்து இப்படிக்கு 'இவ்வூர் ஆணிகிழவன் தியம்பன் குராவன் எழுத்து . . . இவை ஆணிகிழவன் பரமண்டலாதித்தன்
. ௨.௨... இவை ஆணிகிழவன் நிமத்த . எழுத்து இப்படிக்கு இவை ஆணி
கிழவன் ஏரன் நிமத்தன் எழுத்து இப்படிக்கு இவை ஆணி கிழவன் ்... ஆவனி நிமத்தன் எழுத்து
த.நா... தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன் இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திரு ங்கை செய்யாறு திருவோத்தூர் சமஸ்கிருதம் கிரந்தம்
தொடர் எண் :- 81/2017
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை: முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண்:
வேதபுரீஸ்வரர் கோயில் சந்தனம் அரைக்கும் கல்.
கிபி. 14-15
சந்தனம் அரைக்கும் கல்லினைத் தானம் அளித்த செய்தி.
1 அர சனி ஏ எிறின . . . எச்
134
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 82/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1248
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 85/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு ௩. 794 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 80
அரசன் : திரிபுவன ஸ்ரீராஜேந்திரசோழதேவர் (மூன்றாம் இராசேந்திரன்)
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : நடுவில் நாட்டு வேசாலி நாட்டு வாகூரில் இருக்கும் மன்றாடி பாதாளி எச்சிநம்பி என்னும் அமுதவல்லக்கோன் என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து காழியூர் கோட்டத்து காழியூர் நாட்டு திருவோத்தூருடையார் இறைவனுக்கு திருநந்தா விளக்கு ஒன்று வைப்பதற்கு 90 ஆடுகள் தானமளித்துள்ளான். இக்கோயில் திருநந்தாவிளக்குக் குடியைச் சார்ந்த திருவெண்காட்டுக்கோன் என்பவன் இவ்வாடுகளைப் பெற்றுக்கொண்டுத் தேவையான நெய் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ கி தி,ஹவரநவசூவத்திகள் ஸ்ரீ ராஜே... சோழமேவற்கு யாண்டு இரண்டாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டுத் திருவோ-
a. த்தூருடையார்க்கு நடுவில் நாட்டு வேசாலிநாட்டு வாகூரில் இருக்கும் மன்றாடி பாதாளி எச்சில் நம்பியான அமுதல்லவக்கோன் வைத்த திரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட
3. ஆடு தொண்ணூறு ஆடு தொண்ணூறும் கைக்கொண்டு இத்திருநந்தாவிளக்கு ஒன்றும் வர ரூ.டாசிசூவரை செலுத்தக்கடவேனாக கைக்கொண்டேன்
இத்தேவர் திருந- 4. நீதாவிளக்குக்குடி திருவெண்காட்டுக்கோனேன் இவை என்னெழுத்து இது பன்மாஸேயு। ஈகக்ஷி ॥
135
த.நா.௮. தொல்லியல் துறை
குறிப்புரை
கல்வெட்டு :
1. ஷஹுஹிஸ்ரீ[॥*] கோவிசைய கம்பவர்மர்க்கு யாண்டு இருபதா[வது ] படுவூர்க் கோட்டத்து காவதி-
திருவண்ணாமலை செய்யாறு
பிரம்மதேசம்
: - தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ் பல்லவர்
கம்பவர்மன்
தொடர் எண் :- 83/2017
ஆட்சி ஆண்டு : 20 வரலாற்று ஆண்டு : கியி. 866 இ.க. ஆண்டறிக்கை: 227/1915
முன் பதிப்பு : 80/148
ஊர்க் கல்வெட்டு எண்: 1
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
படுவூர் கோட்டத்து காவதிப்பாக்கத்து ஆளுங்கணத்து உறுப்பினர்களில் ஒருவன் ஸ்ரீபோந்தைபெருமானடிகள் கோயிலுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு
11 கழஞ்சுப் பொன் கொடையளித்துள்ளான்.
2. ப்பாக்கம் யாளும்கணத்தா
9. மல்லச் சதி[வேதிமங்]கலத் துத் திருப்போந்தை-
4. [ப்பெருமாநடிகள் ஸ்ரீகோயிலில்த் தண்ணீர் அட்டுவ . பதிநொரு கழ- 5. ஞ்சு இப்பொன்னால் வந்த பலிசை கொண்டு த[ண்ணிர]ட்டுவதாக வைத்தேன் இத-
6. 23(ம)ம் இரக்ஷித்தார் ஸ்ரீபாஓமூஜி என்தலை மேலன
136
டட [வதாக பொன்]
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 84/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 891 ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 297/1915 மொழி தமிழ் முன் பதிப்பு : 80/158 எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 2 அரசன் இராஜகேசரிவர்மன் (முதலாம் ஆதித்தன்)
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் தினமும் நண்பகலின் போது ஒரு
பிராமணனுக்கு உணவளிக்க வேண்டி இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து யாளும்கணத்து உறுப்பினர் மணற்பாக்கத்தைச் சர்ந்த குமாரடி பட்ட வாஜபேஜியர் மகன் திருப்போந்தைச் சோமாசியார் என்பவன் திகைத்திறல் ஏரிமின் கீழிருந்த நிலம் ஒன்றினை வழங்கியுள்ளான்.
கல்வெட்டு
1. 2. 3. 4, 6.
ஹஹிஸ்ரீ[॥*] கோராஜகேஸரி வ2ற்க்-
கு யாண்டு இருபதாவது தாமர் கோட்ட-
த்துத் திருவேகம்பபுறத்து ராஜ2-
ஒவக- வேதி மங்கலம் யாளும்கண-
த்தாருள் மணற்ப்பாக்கத்துக் குமாரடி ஒட்ட வாஜ-
லேஜியார் மகநார் திருப்போந்தைச் சோமா-
. சியார் ஸ்ரீபோன்தைப் பெருமா[ன*]டிகள் ஸ்ரீகோயி[லி*]- ௨ல் நிசதி ஒரு ஸூராஹணன் 8மநானத்து அடிமு- ௨ ண்பதற்கு' []வத்த திகைத்திறல் ஏரி கீ-
ஆகாரம் உண்பதற்கு
137
1), ஆடி கட்டடக் லூர்ப் பாராயணச்செல் . . . . லல ப் திருப்போந்்[தை*] . . . . த கத ல இருநூற்று அறுபத்து இர . .
18. ண்ட[ரை*]க் குழியாலும் வந்த ஹோமம் கொ- 14. ண்டு சந்திராசித்தவற் இய்ஸ்ரீகோமில் ௧-
15. ணவாரியப் பெருமக்களே ரக்ஷிப்பதாக
16. வைத்தேன் திருப்போந்தைச் சோமாசியேன்
17. இ?) ரக்ஷிப்பாரடி என்றலைமேலின
138
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 85/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 898 ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2380/1915 மொழி தமிழ் முன் பதிப்பு : 30/151 எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்:
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 3 அரசன் இராஜகேசரிவர்மன் (முதலாம் ஆதித்தன்)
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : இவ்வூர் நல்லூழான் ஊரடி என்பானின் மகன் அட்டமூர்த்தி என்பவன் நிலம்
ஒன்றினை வாங்கி தனது மனைவியின் பெயரால் அறக்கட்டளை ஏற்படுத்தி, இதன் மூலம் தினம் ஒரு பிராமணனுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
கல்வெட்டு
த
ஹஸிஷஸ்ரீ [11*] கோராஜகேஸரிவநற்க்கு யாண்டு இருபத் தேழாவது திருவேகம்பபுறத் து ராஜமல்லச்சதுவே (தி)
. மங்கலத்துத் திருப்போந்தைப் பெருமானடிகள் கோயிலில் இவ்வூர் த . .
. கை நல்லூ-
ழான் ஊரடி மகன் அட்டமூத்தி வைத்த விருத்தூணுக்கும் திருவிளக்குக்
. ஊர்க்கற்செ-
..ம்மை பதின்கழஞ்சும் திருப்போந்தைஅடிகள் கோயிலின் கிழக்கு இவன்
றக. பட் மண்டை
ஸவ௯,துஜியார் பக்கல் விற்றுக் கொண்டுடைய இருநூற்றெழுபத்தைஞ்சு
குழி 5505௨0 வந்த ோ[ம]ங் கொண்டு நிசதம் ஒரு ஹா-
. ஹணனை எட்டுவதாகவும் ஒரு நந்தாவிளக்கெரிப்பதாகவும் வைத்தேன்
இத29 [ஈக்ஷித்தார் ப]ாததூளி என் தலைமேலன் [॥*]
139
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 86/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 880 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 908 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 203/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/125 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு த் ஊர்க் கல்வெட்டு எண்: 4 அரசன் நப்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : சோழ நாட்டு வடகரை இன்னம்பர் நாட்டைச் சேர்ந்த காரி இலாடஆதித்தன் என்பவன் திருவேகம்பபுரம் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து திருப்போந்தைப் பெருமானடிகள் இறைவனுக்குத் திருநந்தாவிளக்கு ஒன்று ளிக்க 1272 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் கணப்பெருமக்கள் வசம் அளித்துள்ளான். இப்பொன்னின் வட்டியைக் கொண்டு விளக்கெரிக்கக் கணப்பெருமக்கள் சம்மதித்துள்ளனர். கல்வெட்டு : 1. ஸ்ரீ சகர யாண்டு எண்ணூற்று முப்பது திருவேகம்பபுறத்து இராஜமல்ல வதுவே.தி மங்கல- 2. த்துத் திருப்போந்தைப் பெருமானடிகளுக்குச் சோழ நாட்டு வடகரை இன்னம்பர் நாட்டு ௨௨ 14 3. டடான் காரி இலாடதித்தனேன் வைத்த ந[ந்*]தாவிளக்கு ஒன்றுக்குங் குடுத்த ஊர்க்க[ற்செம்மை பொன் பந்]- 4. நிரு கழஞ்சரையாலும் வந்த வுரதிகொண்டு இப்பெருமானடிகள் கணப் பெருமக்களாரான வ௩, 5. . . . தமி நகாவிளக்கொன்று மெரிப்பி[ப்* ]பா[ர்*]களாக வைத்தேன் இதம் ரக்ஷித்தாரடி யென்முடிமே 6. . . - இஜுத்துக்கு அஹிதம் வேண்டுவார் கங்கையிடைக் குமரிஇடைச் செய்தார் செய்த பாவமடுவார் ॥-
140
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 87/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 890 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 908 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 228/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/149 எழுத்து : தமிழ்
அரசு 3 - ஊர்க் கல்வெட்டு எண்: 5 அரசன் 3 ன
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோயிலில் நந்தா விளக்கெரிக்கக் கொடுக்கப்பட்ட .... 1218 கழஞ்சுப் பொன்னினைக் கணப்பெருமக்கள் பெற்றுக்கொண்டு அதனின் வட்டியின் வாயிலாக விளக்கெரிக்கச் சம்மதித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] சகரயாண்டு எண்ணூற்று முப்பது திருவேகம்பப்புறத்து ராஜமல்லச் ச[து]வ.திமகங்கலத்துத் திருப்போந்தைப் பெருமாநடிகள் ஸ்ரீகோயில் திருவம்பலப் பொ . . ......... ௨௨௨
2. பன்னிரு கழஞ்சரை இப்பொன்னால் வந்த வுரதி கொண்டு ஒரு நஷா விளக்கு வ,ாதித்தவற் இத்தளி கணப்பெருமக்களே முட்டாமை
எரிப்பா]ர்களாக வைத்தேன் இஜ$8 . ௨௨. ஆ
டம! ல்க க்கு கல் மாசியார் இது ரக்ஷிப்பார் அமுமேமயாகஞ் கனி லம் பெறுவதாகப் பாலித்தோம் கணப்பெருமக்களோம்
141
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 88/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம். 880 செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 908 பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 211/1915 தமிழ் முன் பதிப்பு : 30/133
கிரந்தங் கலந்த தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 6 சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
சிவக்குறி காமடிபெருமான் மற்றும் இவனது இளைய சகோதரன் பெருமாள் ஆகிய இருவரும் கம்மாளர் சபையிடமிருந்த வாங்கிய நிலத்திற்கு இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து சபையினர் வரிவிலக்களித்தனர். இந்நிலம் ஸ்ரீபோந்தை மகாதேவர் வழிபாட்டிற்குத் தினசரி 2 நாழி அரிசி வழங்கிட தானமாக வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] மக௱யாண்டு [எண்]ணூற்றுமுப்பது திருவேகம்பப்புறத்து
ராஜமல்லச் சதிவே,திமங்கலத்து அஞஷஸதத்து மமலையோம் படுவூர்க் கோட்டத்துக் . . . ஷன் சிவக்குறிக் காமடிபெ[ரு]மக்களே [எ]ம்மூர்க் கம்மாளர் ஸலையோம் பக்கல் விற்றுக்கொண்டுடைய அமரங்குழி
எண்ணூற்றிருபத்தைந்து குழியும் இக்கம்மாளர் பக்கல் மேற்ச்சொ-
2. ல்லப்பட்ட காமடிபெருமாநும் இவன்றம்பி பெருமாளும் விற்றுக்
கொண்டுடையர்களாமிந இவ்வமரங்குழி எண்ணூற்றிருபத்தஞ்சு குழியும் அஞஷமதத்து . . . . மாதும் பெருமாநும் [வி]. . .'. லடு பாடகங்களுக்கு மேற்க்கு கலிச்சங்காலுக்கு கறைக்கு இக்கா(ல்)லோடு மடையக்கல்லு நீக்கிய மஞ்சிக்கத்தில் விற்றுக்கொண்டுடைய இருநூற்றெழுபத்தைந்து கு[ழி]-
142
3. யுமாக இவ . . .. று குழியும் இக்காமடிபெருமாநும் இவன்[றம்பி] பெருமாளும் எம்மூர் ஸ்ரீபோந்தை 8ஹாசேவர்க்கு நிசதி இருநாழி குத்தலரிசியா . . த்தமையில் [இ] . . . . . . யும் இறையிலியாகப் பணித்தோம். அஞஷமதத்து ஸலை[யோ]ம் பாததூளி என்தலை மேலந [1*]
143
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 89/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சுகம். 880 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 908 ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 212/1915 மொழி தமிழ் முன் பதிப்பு : 30/134 எழுத்து கிரந்தங் கலந்த தமிழ் அரசு ம் ஊர்க் கல்வெட்டு எண்: 7 அரசன் - இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர். குறிப்புரை : கணக்காயன் சாத்தன் கணவதி எனும் பேரரையன் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க 12) கழஞ்சுப் பொன் கொடையாக அளித்துள்ளான். கல்வெட்டு : 1. . . . . னூற்று முப்பது திருவேகம்பபுறத்து இராஜ[மல்லச்] சதிவே_திமங்க 2. லத்துத் திருப் . . . . ௬மாநடிகளுக்கு செங்காட்டுக் கோட்டத்துக் கோட்டு
கணக்காயன் சாத்தன்
3. கணவதி ஆகிய . . . பேரரையனேன் வைத்த நந்தாவிளக்கு ஒன்று . . த்த
ஊர்க்கல்ச்செம்-
4. பொன் பன்னிரு கழஞ்சரை இப்பொன் பன்னிரு கழஞ்சரையால் வந்த யூதி
கொண்டுப் பெருமானடிகள் ௧-
5. ணம் பெருமக்களானாரேய் அ;ாஜித்தவற் நந்தாவிளக்கு ஒன்று
மெரிப்பிப்பார்களாக வைத்தேன் இத2-
6. ம் ரக்ஷித்தாரடி யென் முடிமேலன இ$த்துக்கு அஹிதம் வேண்டுவார்
கங்கையிடைக் குமரிமிடைச் செய்தார் செய்த பாவம்படுவார்
144
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 90/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 909 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2338/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/154 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8 அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நடைபெறும் ஸ்ரீபலி வழிபாட்டின் போது மேளம் கொட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு நிலதானம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு 1. [ஹஷிய்ீ[॥*] மதிரைகொண்]ட கோப்பரகேசரிவ? ற்கு யா[ண்டு ௨ ஆவது] தப்த இஇது மித தக த்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிக . . . . . .. 2. [மீ ஸலி]கொட்டுவதற்கு சிலவாக [சை ]வத்த ஹூசியாகின்றது [நி]ச்சம்படிக்கு
[மேவர் ஸ்ரீ]. . . . நூற்று முப்பத்து நாலேகால்(க) குழியும் நான்கு க...
145
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 91/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 911 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2381/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/152 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் பத்க் ஊர்க் கல்வெட்டு எண்: 9 அரசன் ; பரகேசரிவர்மன் (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது. திருநந்தாவிளக்கு ஒன்று ளிக்க 15 ட் கழஞ்சுப் பொன் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 கழஞ்சுப் பொன் வேறொரு பணிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனின் விவரம் அறிய
இயலவில்லை.
கல்வெட்டு
1. ஷஹுஹிஞஸ்ரீ[॥*] கோ[ப்* ]பரகேசரிபநற்கு யாண்டு னாலாவது இராஜமல்லச்சதுவே 2. ரிமல்லன் வச்ச ம2மாவது ஒரு நன்தாவிளக்குக்கு பதினைஞ்சு க . . .
3. தைஞ்சு கழஞ்சு மாக ஊர்க்கற்செம்மை தொண்ணூற்றுக் கழஞ்சு இதனால் வன்த . . . .
146
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 92/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 911 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 232/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/153 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 10 அரசன் : பரகேசரிவர்மன் (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : புலியூர் கோட்டத்து வாயினா நல்லூர் ஊரைச் சார்ந்த குண்டின கோத்திரத்து இருஷிகேசவன் என்னும் பிராமணன் இக்கோயிலில் சன்தி விளக்கு ளிக்க வழங்கிய 15 கழஞ்சுப் பொன்னின் வாயிலாக வரும் வட்டியைக் கொண்டு செயல்படுத்திட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு. : 8 ஹி ஸ்ரீ [॥1*] கோப[ப் *]பரகேசரிப.நற் கு யாண்டு னான்காவது இராஜமல்லச்சதுவேபதிமங்கலத்து [திருப்போந்தை ] பெருமானடிகள்
ஸ்ரீகோயிலில் புலியூ-
2. ர்க் கோட்டத்து வாயினானல்லூர் குணின(ர்) கோத்திரத்து நின்றயில் இருஷிகேமவ . ட. [ச]ன்தி வி[ள*]க்குக்கு வைத்த பொன் ஊர்க்கல்-
8. செம்மை பதினைஞ்கழஞ்சு இதனால் வன்த பலிசையாற் வரர£கிஷருள்ள[ள*]ள . . இருஷிகேஸ-வனேன் ॥-
147
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 93/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 911 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 298/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/159 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 11 அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டுச் சிதைந்து காணப்படுகிறது. இக்கோயிலில் திருந்தா விளக்கெரிக்க 90 ஆடுகள் வழங்கித் தினம் உழக்கு நெய் அளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு :
1. ஷுஹிஸ்ரீ[॥” ]
டக க ட்டு வஷாகிகவரை . . . .
நிர? ஓ! எட்டப் திருநந்தாவிளக்-
7. கெரிக்க வைத்த ஆடு ௯௰ இ௰கம் ர- 8. க்ஷித்தார் ஸ்ரீவா”உமென்தலை மேலன
9. இவ்வாடுமே இதன்றென்றான் . . [ட்ட]மு- 10. க்கால் நிசதம் உழக்கு நெய் அ[ட்டு]
11. வேன்னாநேன் . ஸன அர . ,
12. ணிலலி 9 .....
148
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை செய்யாறு பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
தொடர் எண் :- 94/2017
ஆட்சி ஆண்டு : 1[8] வரலாற்று ஆண்டு : கியி. 9[20] ஆம் நூற். இ.க. ஆண்டறிக்கை: 229/1915
முன் பதிப்பு : 80/150
ஊர்க் கல்வெட்டு எண்: 12
மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
கல்வெட்டு சிதைந்தும் முழுமை பெறாமலும் உள்ளது. இக்கோமிலைச் சார்ந்த பெண் ஒருத்தி தானமளித்துள்ளாள். தானத்தின் விவரம் அறிய
இயலவில்லை.
1. ஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட [பர* ]கேசரிபநற்கு யாண்டு பதி[ன்மூன்றா]- .
2. வது திருவேகம்பப்புறத்து ஈாஜ2ஓ[அது]வேஃதி மங்-
3. கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோமி-
4. ல் புறுப்பள்ளி 5. ஈம்பச்சேர் மாவி ப
6. பழுத்தாள் நங்
[ep PP
149
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 95/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 922 ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 226/1915 மொழி தமிழ் முன் பதிப்பு : 30/147 எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19 அரசன் முதலாம் பராந்தகன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஏரி வாரியத்தின் கணக்குகளை எழுதும் கணக்கனுக்கு (மத்யஸ்தன்)
அஞ்க்ஷ்ட்டசத்து சபையினர் மதிப்பூதியம் நிர்ணமித்துள்ளனர். அவனுக்கு தினமும் 4 நாழி நெல்லும், வருடத்திற்கு 7 கழஞ்சும் பொன்னும், ஒரு சோடி (ஜ் இணை) ஆடையும் வழக்கிடத் திமானித்துள்ளனர். மேலும் கணக்குகளைச் சமர்ப்பிக்கும் போது தன்னுடைய நேர்மையினை நிரூபிப்பதற்கு பழுத்தக் காய்ச்சிய இரும்பு கம்பியினை (மழு) பிடித்திட முன்வரவேண்டும். அவ்வாறு பிடிக்கும் போது கைகளில் காயங்கள் ஏற்படவில்லை எனில் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி கூடுதலாக ஊக்கத்தொகை (பாதசேஷா) வழங்கப்படும். அவ்வாறு இன்றி காயம் ஏற்பட்டால் தவறு செய்ததாகக் கருதப்பட்டு, அதற்காக 10 கழஞ்சுப் பொன் தண்டமாக வசூலிக்கப்படும். ஆனால் உடல் ரீதியான தண்டனை (சீர தண்டம்) வழங்கப்படாது என்றும் முடிவெடுத்துள்ளனர்.
கல்வெட்டு :
த் 2. 3. 4,
ஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட கோப்[ப*]ரகேஸரிவ?ற்கு யா- ண்டு பதினா(ஆ)றாவது மாஜூஒவக வேதி மங்-
௨ கல[த்*]து அய்ந்தஷமத்து
ஸலெயோம் ஒட்டிய ஹூ -
150
. வஹஜெஹெயாவது எங்கள் ம- மஹர் ஏரிக்கணக்கு எழுது- வார்க்கு ஓட்டிக் குடுத்த பரிசாவ-
. து நியதி கொற்று நெல் நான்(ந)-
னாழியும் ஆண்டு வரை செம்-
பொன் ஏழுகழஞ்சும் ஒரணை
க கூறையும் குடுப்போமாகவு-
, ம் இக்கணக்கு எழுதினான் ஓ- . ருவனும் கணக்கு காட்டி மழு
. வேற்பானாகவும் மழுவேற்-
. று வென்றான் ॥ஸலனாம வா மேஷம் குடுப்போமாகவு-
. ம் மழுவேற்று தோற்றானை
. எரி முதல் பெரிதாக இல்- லாமையில் இகசோஷத்
. துக்கு ஆக பதின்க[ழஞ்]சு பொ- ன்னே தண்டம் கொள்வோ-
. மா[க*]வும் ஒட்டினோம் ஸறிர த- . ஸ்டம் செய்[ய]ப் பெறா[தோ]
. மானோம் அய்ஞ்சஷஸத்து
. ஹஹஹெயோம் ஸஹஸெ
௨ பணிப்-
151
152
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 96/2017
மாவட்டம் வட்டம் ஊர் மொழி எழுத்து அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ட டமி செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 924 பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 224/1915 தமிழ் முன் பதிப்பு : 30/145
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 14
மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து சங்கரப்பாடியில் (எண்ணெய் வணிகர்
வசிக்கும் பகுதி)வசிக்கும் பேராய்ய நல்லூழான் ஊரடி என்பானின் மகன்
அட்டமூர்த்தி என்பவன் இக்கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தி இறைவனுக்கு
அமுதுபடி மற்றும் வழிபாட்டுச் செலவுகளுக்காக 925 குழி நிலம் தானமாக |
வழங்கியுள்ளான். | | |
1. ஷஹிஞஸ்ரீ[॥*] மதிரைகொண்ட கோப்-
2. பரகேஸரிஉர.ற்கு யாண்டு பதினேழா-
9. வது திருவேகம்பபுறத்து மாஜ£ஓ-
4. வகுவேதி மங்கலத்து சங்கரப்பா-
5. டி பேராய்()ய நல்லூழான் ஊரடி ம-
6. கன் அட்டமூர்த்தியேன் இவ்வூர் ஸ்ரீ-
7. போந்தை சக்ஷிணாச௫கி.பயாற்க்கு திருவ-
8. முதுக்கும் சோவானத்துக்குமாக
9. [வைத்த வகி வேற வா[ய்]க்காலின்
153
. தெற்கு நறையூர் நம்பியார் பா[ர]த்து
. நறையூர் வணிமமஓனார் பக்கல்
4 என்றமப்பன் விற்றுக்கொண்டு உடைய . முன்னூற்று இருபத்தைந்து கு- பழியும் [சை]வத்தேன் அட்டமூத்தி
. யேன் நான்னுள்ளளவும் கடை-
. காண்பேனானேந் இத? ஈக்ஷிப்பா-
ர் பாததூளி எந்தலை மேல[ன] உ
154
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 97/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 25
வட்டம் $ செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 992
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 222/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/143
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
குறிப்புரை : மாங்காடு என்னும் ஊரைச் சேர்ந்த கண்யன் இரணசர்மன் என்பவன் வழங்கிய
10% பொன்னினை இவ்வூர் கணப்பெருமக்கள் பெற்றுக்கொண்டு இதனின் வட்டியைக் கொண்டு ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோமிலில் நந்தா விளக்கு ளிக்க உறுதியளித் துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] மதிரைகொண்ட கோப்பரகேஸ-
ரிவ$ற்கு யாண்டு இருபத்து ஐஞ்சாவ-
து திருவேகம்பபுறத்து ஈாஜூ2ஓவுது-
வேபுதிஹ்கலத்து ஸ்ரீபோன்தை பெ-
ருமானடிகள் கோயிலில் மாங்காட்டு
மணன் இரணச2ன் ௰$மாவது ஒருநொ-
௨ ன்தா விளக்குக்கு [ன*]வத்த பொன் எடர்பு-
. (ர)ம் பதின்முக்கழஞ்சு இதனால்
௨ வந்த பலிசையாவது சசாசிகூருள்-
ளளவும் இஸ்ரீகோயில் கணப்பெரும-
க்களே எரிப்பதாக வைத்தேன் ம[ஈ]ங்காட்டு
989 531 ஐ ௭ 3 ஷே ஜு
நஸ். ஷ்... ஷ் 2 8 6
. மணன் இரணவ2_னேன்
155
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 98/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 25 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 982 ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2385/1915 மொழி தமிழ் முன் பதிப்பு : 80/156 எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 16 அரசன் மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் கோட்டத்து இராஜமல்ல சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ போந்தை மகாதேவ
பட்டாரகர் இறைவனுக்கு சூரிய கிரகணத்தின் போது திருநந்தா விளக்கு ஒன்று இரவு பகலும் எரிக்க, சோழநாட்டு கிழார் கூற்றத்து கிளிநல்லூர் ஊர்த் தலைவன் செம்பியன் கிழார் நாட்டுக்கோன் என்பவனிடமிருந்து 15 கழஞ்சுப் பொன்னினை வதியூர் ஊர்ச் சபையார் பெற்றுக்கொண்டு தினம் உழக்கு எண்ணெய் கோயிலுக்கே வந்து அளப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனுடன் பித்தளை (தரா) நிலை விளக்கு ஒன்றும் தானமளிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1.
2.
3.
ஷஹிஸ்ரீ[॥” ] மதிரை கொண்ட கோப்பரகே- ஸரி பர்(ம்)மற்கு யாண்டு இருபத்தைஞ்- சாவது சோழநாட்டுக் கிழார்க் கூற்றத்து-
௨ க் கிளிநல்லூர்[ப் பெரதிகாரஞ் செய்த கிளிநல்லூர் கிழ-
, வனான செம்பியன் கிழார் நாட்டுக்கோன் தா-
மர்க் கோட்டத்துத் திருவேகம்பபுறத்து
... ராஜமல்லவக-8வ_சிமங்கலத் து
. ஸ்ரீபோன்தை ஹாஜேவேலடா-
156
. ரகர்க்கு வல்லவரையரிடைக் [க]டவர-
. யூ ஹணத்தில் திருநன்தா விளக்கு ஒ-
. ன்று இரவும் பகலுஞ் சந்ஜாசிது[ர்*] உள்ளளவுமே
. நிசதி உழக்கு நெய்யால் எரி[ப்*]பதற்கு வைத்-
. த பொன் பதினைங்கழஞ்சு இப்பொன் பதினை- ங்கழஞ்சு[ள]தைஞ் முதலாகக் கொண்டு இப்பொ-
. ன்னாற் பொலினட்டுத் தேவர் உழக்கினால் நிசதி உழ-
. க்கெண்ணை ஸ்ரீகோஇலுக்கேய் கொடுவந்து சந்திரா-
. தி[த்*]தவல் அட்டுவோமானோம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீ- ட ர்வேளூர் நாட்டு வதியூர் ஸலெயோமும் ஊரோமும் இதற்- . நிறம்பில் ம?பாஷனத்தே நிசதிப்ப-
. டி இருபத்து . நாலேகால் காணஈணப்பட ஒட்டி இ-
. ட்டுக் குடுத்தோம் வதியூர் ஊரோம் இவ்வெ-
. ண்ணை முட்டில் செற்ற ஆளுக்கு நிசதி இரண்டு சோ- று குடுப்போமானோம் வதியூர் ஸலெயோ-
. ம் இது பன்மாயேறம ஈகக்ஷ தரா நிலைவிள-
. க்கெ[*]ன்று
157
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 99/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 29 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 996 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 202/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/124 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 17 அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : நாரணமங்கலத்து ஊரைச் சேர்ந்த ஹரிதாச பட்டன் என்பவன் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை பட்டாரகர் கோயில் இறைவனுக்கு குடிஞைக் கல்லால் நிறுக்கப்பட்ட 5 கழஞ்சுப் பொன்னிலான பட்டம் ஒன்றினை வழங்கியுள்ளான். கல்வெட்டு : i, ஹஹிஞஸ்ரீ [11*] மதிரை கொண்ட கோப்பரகேசரிவநற்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது இராஜ- 2: மல்லச்சதுவே_திமங்கலத்து ஸ்ரீபோந்தை கட்டக் ஸ்ரீகாயடம் மாராய்கின்ற கணப்பெருமக்களோம்
3. நாரணமங்கலத்து ஹறிகாஸ லடன் ப மூன்று சந்தியும் சாத்துவதற்கு இட்ட பட்டம் தன்-
4. றுளை குடிஞை க[ல்*]லால் அய்ங்கழ[ஞ்*]சு இது அழித்தோம் வெவ்வேற்று வகை இருபத்து நாலு காண-
5. ம் பரேயுமறே ஒணி[ப்*]பதாக ஒட்டிக் குடுத்தோம் கணப்பெருமக்களோம் ॥-
158
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 100/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி /
ர்ச் 2 $
அரசு அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 940 பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 218/1915 தமிழ் முன் பதிப்பு : 90/140
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 18
3 முதலாம் பராந்தகன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
தாமர் கோட்டத்து திருவேகம்பபுறத்து இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஆளுங்கணத்து உறுப்பினர்களில் ஒருவனான கூடலூர் ஊர்த் தலைவன் மணிபட்ட சர்வகிறுதுக்கள் என்பானின் மகன் அழகசர்ம கிரமவித்தன் என்பவன் ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் திருநந்தா விளக்கு ளிக்க 12 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளான்.
1. ஷஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட ே
2. காப்பரகேஸரிவ? ற்கு யாண்-
8. டு முப்பத்து மூன்றாவது தாம-
4. ர் கோட்டத்து திருவேகம்பபுறத்-
5. [து] ராஜ2ஓவுக வேதி மங்கல-
6. ம் யாளுங்கணத்தாருள் கூடல்கி-
7. மார் மணிசிவலட ஸவசூதுக்க-
8. ள் மகன் அளக? சூமவித்த-
9. ன் ஸ்ரீபோன்தைய் பெருமானடி-
159
10.
11.
12.
18.
14.
15.
16.
7.
18.
19.
களுக்கு ஒரு நொநாவிளக்கு[க்கு*] வைய்- த்தபொன் பன்னிரு கழஞ்சு இ-
ப் பொன்னால் வன்த பலிசை-
ப் பொன் கொண்டு இர(£)வும் பக-
லும் முட்டாமை எரிக்க வைய்த்-
தேன் இத29 நஈக்ஷிப்பார் ஷு_ா-
தித்தவற் காலமும் நிற்பதாகவும் இ-
தற்கு கேடு வேண்டுவார் மெங்மாகந[£] த்து செய்தா[ர்*] செய்த பாவங் . . . .
பரிசு வைத்தேன் அளகமு2 சமவித்தனேன்
160
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 101/2017
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 37 செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 944 பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 217/1915 தமிழ் முன் பதிப்பு : 30/139
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19 மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்) சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்குச் சுவர்.
இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஆளுங்கணத்து உறுப்பினர்கள் ஒருவனான கூடலூரைச் சார்ந்த மணிசிவபட்ட சர்வகிரதுக்கள் என்பவனின் மகன் மகாதேவ பட்டன் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோமிலில் நந்தாவிளக்கு எரிக்க 14/2 கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். முன் கல்வெட்டில் மணிசிவ பட்ட சறுவகிறத்துக்கள் என்பானின் மகன் மகாதேவ பட்டன் பற்றி கூறப்பட்டுள்ளது. இவனின் இரு மகன்களும் ஆளுங்கணத்து குழுவில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு கி.பி. 944-ஆம் ஆண்டைச் சார்ந்த முதலாம் பராந்தகனின் 97-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். அதாவது முன் கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 38-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஆகும். (கி.பி. 940-ஆம் ஆண்டைச் சார்ந்தது.)
1. ஷஹஹிஸ்ரீ [॥*] மதிரை கொண்ட கோப்பர- . கேஸரிமன்மற்க்கு யாண்டு மு[ப்ப*]த்தேழா-
௨வது தாமர்க் கோட்டத்துத் திருவேகம்-
, கலம் யாளுங்கணத்தாருள் கூடல் கிழார்
.. மணிசிவலட ஹவசூ.துக்கள் மக-
2 3 4. பபுறத்து ாஜூ2ஓவுக-வேதி மங்- 5 6 ச்
ன் ஹாஜேவலடன் ஸ்ரீபோந்தை-
161
8. ய் பெருமாநடிகளுக்கு ஒரு நொகா விளக்குக்கு 9. த்த பொன் பதினாற் கழஞ்சரைய் இ- 10. ப்பொன்னால் வன்த பலிசைப் பொ-
11. ன் கொண்டு சகஷாகிகவற் இரவும் பகலும்
162
வை-
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 102/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 945 ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 225/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/146 எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
அரசன் : மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்) இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : காவிரி வடகரை மழநாட்டு கற்குடியில் வசிக்கும் மூத்த குஞ்சிரமல்லன் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலுக்குத் தானம் வழங்கியச் செய்தி. கல்வெட்டு முற்றுபெறவில்லை, ஆதலால் முழுவிவரம் அறியஇயலவில்லை. கல்வெட்டு : 1. ஷஹிஸ்ரீ[॥*] மதிரை- 2. யும் ஈழமும் கொண்- 3. ட கோப்பரகேசரி பன்ம- 4. ற்க்கு யாண்டு ௩௰௮ 5. ஆவது தாமர் கோட்ட- 6. தீது திருவேகம்பபுறத்து 7. மாஜூஓவுக-வேதி-
oo \
. மங்கலத்து ஸ்ரீபோந்- 9. தை பெருமானடிகளுக்கு த
10. காவிரி வடகரை மழனா-
163
11. ட்டு கற்குடி கற்குடையான்
12. மூத்த [குஞ்]சிரமல்லனிர-
18. த்து . . கூ(ற)சர்மனா . . .
164
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 103/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததத
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 198/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/120 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 21
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர். ;
குறிப்புரை : கல்வெட்டு மிகவும் சிதைந்துக் காணப்படுகிறது. தாமர் கோட்டத்து திருவேகம்பபுறத்து இராஜமல்ல சதுர்வேதி மங்கலத்திலுள்ள ஸ்ரீபோந்தை ஆண்டார் கோயிலுக்குத் தானம்! வழங்கியச் செய்தி. தானம் பற்றிய விவரம்
அறியஇயலவில்லை. கல்வெட்டு : 1. ஷஹஹிஸ்ரீ[॥*] [மதிரை கொண்ட] கோப்பரகேசரி] . . . . . [தா]மர்க் [கோட்டத்து] . ....... ராஜமல்லச்[ச துர்வே ]-
2. தி மங்கலத்து ஸ்ரீபோந்தை ஆண்டார் திருவுண்ணாழிகை .........
3. . .. சதி நாலேகால் காணம் குறைவறாத மணப்பெருமக்களை ஃண்டமிடப் பெறுவாராகவும் இப்பரிசு ஸிலாலேவெெய் வி . . .
4. ஸ்ரீகாரியஞ் செய்கின்ற மணப்பெருமக்களோம் இ2?_த்துக்கு ௯ஹிதம் நின்றார் மெங்கா கநஷாஷரத்து செய்தார் செய்த பாவ . .......
165
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 104/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு :
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : 10- நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 1
மொழி : தமிழ் முன் பதிப்பு 1 80/125 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 22
அரசன் : முதலாம் பராந்தகன்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் சுவர்.
குறிப்புரை : சோழ நாட்டு இங்கநாட்டு நெல்வேலி ஊரைச் சார்ந்த சோழசிகாமணி பல்லவரையன் என்பவனிடமிருந்து இக்கோயிலில் உள்ள ஏரிவாரியப் பெருமக்கள் 20 கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு நந்தா விளக்கு ஒன்றுக்கு எண்ணெய் வழங்க சம்மதித்துள்ளச் செய்தி. கல்வெட்டு : 1. ஷஹுஹிஸ்ரீ[॥*] மதிரைகொண்ட கனகு யாண்டு . . . சோழநாட்டு இங்கணாட்டு 2. நெல்வேலி உடையான் சோழசிவாணிப் பல்லவரையனாகிய . . . இருபதின் கழஞ்சு இப்பொன் இ- 3. ர௬பதின் கழஞ்சும் கொண்டு சந்திராதித்தவத் ஒரு நொந்தா விளக்கு ளி . . திநமைமில் ஏரிவாரியப் பெரு- 4. மக்களே நிசதம் உழக்கெண்ணையாக திங்கள் எழுநாடுரி எ . . ணை இவ்வெண்ணை முட்டாமே 5. அட்டுவோமானோம் அட்டோமாகில் மநாஸநத்து நிசமம் கெங்கைஇடைக் குமரிஇடைசெய்தார் செய்-
6. த பாவத்தில் படுவோமாநோம்
166
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
4. இத்திருவிளக்குக்கேய் வழியும் இவரே வைத்த பொன் இரு கழஞ்சு ॥-
திருவண்ணாமலை செய்யாறு பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ் சோழர்
தொடர் எண் :- 105/2017
ஆட்சி ஆண்டு : 26 வரலாற்று ஆண்டு : 10- நூற். இ.க. ஆண்டறிக்கை: 219/1915
முன் பதிப்பு : 30/141 (தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 23
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
இக்கல்வெட்டு முழுமை பெறாமலும் சிதைந்தும் காணப்படுகிறது. ஆளுங்கணத்தைச் சார்ந்த ஒருவன் திருநந்தா விளக்கு ளிக்க பொன்
தானமளித்தச் செய்தி.
கேஸரிவஹற்கு யாண்டு இருபத்தாறாவது ராஜம[ல்* ]லச் ப
மங்கலம் யாளுங்கணத்தாருள் ம் ி. .
குடுத்த பொன் . . .
. திருப்போந்தைப் பெருமானடிகளுக்கு ஒரு ந[ந்*]தா விளக்கெரிப்பதற்க்குக்
கழஞ்சிநாலும் வந்த பலிசை கொண்டு ஒரு ந[ந்*]தா விளக்கு
எரிப்பதாக வைத்தேன் இத5)65ம் இறக்ஷிப்பார் . .
167
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 106/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததத
செய்யாறு வரலாற்று ஆண்டு : 10-நூற்.
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 220/1915
தமிழ் முன் பதிப்பு : 30/142 (தெ.க.தொ.)
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 24
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
வள்ளிவயம் என்னும் ஊரைச் சேர்ந்த நல்லூழான் பெருமான் என்பவன் அமாவாசைத் தினங்களில் இரண்டு பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டி இரண்டு கழஞ்சுப் பொன் கொடையாக அளித்துள்ளான். இவன் அளித்த பொன்னின் வட்டியைக் கொண்டு உணவளிக்க ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கணப்பெருமக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ வள்ளிவயத்து நல்லூழான் பெருமான்
2. வைத்த பொன் இருகழஞ்சு இப்பொன்னுக்குப் பலிசைஆக அமாவாஸி
3. தோறும் இருவர் ஷாஹணரைய் ஊட்டுவிப்போமாநோம் திருப்போந்தைக்
கணப்பெருமக்களோம்
168
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 107/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தனை
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 234/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு ர : 80/155 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ் -
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 25
அரசன் : முதலாம் பராந்தகன்
இடம் ₹: சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : வெண்குன்றக் கோட்டத்து இலங்காட்டு ஊரைச் சார்ந்த நற்றூழான் நக்கெருமான் என்பவன் ஸ்ரீபோந்தைப் -பெருமானடிகள் கோயிலில் நன்தாஜோதி விளக்கு வைக்க 80 கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். இக்கோயில் கணப்பெருமக்கள் இப்பொன்னினைப் பெற்றுக்கொண்டு இதனின் வட்டியின் மூலம் விளக்கெரிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட கோப்பரகேசரி வபுற்கு [யாண்டு] . . . . வது திருவேகம்ப . . . . . . ௮க-4வசிமங்கலத்து ஸ்ரீபோ[ந்தைப் பெருமா]னடிகள் ஸ்ரீகோயிலில் வெண்குன்றக் கோட்டத்திலங்காட்டில் நற்றூழான் நக்கெரு-
2. மான் வச்ச ம$மாவது ஒரு நொன்தா ஜோதி விளக்குக்கு வச்சபொன் எண்[ப]தின் கழஞ்சு இதனால் வந்த பலிசையால் வகூடாதிகருள்ளவும் இத்திருக்கோயில் கணப்பெருமக்களே ஸிப்பதாகவும் வைத்-
3. தேன் நக்கெருமானேன் ஐத2.௦ ஈச்ஷித்தார் ஸ்ரீவாஉயசஸி தலை மேலின
169
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 108/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3 -
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2386/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/157 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 26
அரசன் : பரகேசரிவர்மன்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்க்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது. கல்வெட்டு வரிகளின் இறுதி பகுதியும் சிதைந்துள்ளது. மழநாட்டு உம்பள நாட்டைச் சார்ந்த சிலருக்கு இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து மகாசபையார் நிலம் விற்பனை செய்த செய்தி. கல்வெட்டு : 1. ஷஹஹிஸ்ரீ[॥*] கோப் . . 2. கேஸரி பநற்கு யா. ... 3. து கோட்ட நாள் ௮௨ தா..... 4. த்து திருவேகம்பபுறத்து [ராஜம]- 5. ஓவுக-4வேதி மங்கலத்து [அ]- 6. ஜஷமாதத்து . ஹஊாஹூெெ!ப்]- 7. பெருமக்களோம் விற்றுக்கு[டுத்]- 8. த ல நிலவிலையாவண[ம் ம]-
9. ழ நாட்டும்பளநாட்டு மடரி ௦... .
170
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 109/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தள்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 10-நூற்.
ஊர் 3: பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 239/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/160 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 27
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : கணக்கு பணி செய்பவர்களுக்கு கணவாரியப் பெருமக்கள் அளிக்கும் ஆடை மற்றும் மதிப்பூதியத்தினை அஞ்சஷ்ட சத்து மகாசபையார் நிர்ணயித்துள்ளனர். இதனை மீறுபவர்கள் மீது 108 காணம் தண்டம் வசூலிக்கப்படும் என்றும்
எச்சரித் துள்ளனர். கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட கோப்பரகேஸரி வ2 . . . . . ஆவது தாமர்க் கோட்டத்து திருவேகம்பபுறத்து மாஜமல்லச் ச.துவே.திமங்கலத்து கஞ்சஷ
2. ப்பான் . . டிப்பார்கள் ஆகவும் கணக்குச் செ ..... க்கு கணவாரியப் பெருமக்கள் தந்த கூறையும் கொற்றுமே கொண்டிதும் ஷஹுவஷஹெ பண்ணி
3. இதன்றென்றான் ஸ்ரீபொத்தகப்படியேடு . ......... நூற்றெட்டுக்காணம்
தண்டப் படுவாராகவும். இப்பரிசு ஓட்டினோம் ௮ . . . . . . ஸ்லெயயோம்
171
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 110/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு :
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 240/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/161 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 28
அரசன் : முதலாம் பராந்தகன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : சோமாசி சானி என்னும் பிராமணப் பெண் ஒருத்தி இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் விளக்கெரிக்க 12 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளாள். எளர்புரம் என்பது பொன்னினை அளக்கும் எடைக்கல்லாகும். கல்வெட்டு : 1. ஷஹிஸ்ரீ[॥*] கோப்பரகேசரிவ?ற்க்கு யாண்டு பத்த . . . . . த்து ராஜல்லசதுவேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை . . ட. 2. ம2மாவது ஒரு நராவிளக்குக்கு எளர்புரம் பன்னிரு . . . . செய்து வஷூதிகருள்ளளவும் இத2ஒம் வை[த்jதேன் ஊ . . . ..
3. ச்சோமாசி சானி ஒரு நொதாவிளக்குக்கு வைத்த பொன் எளர்புர[ம்] . . .
172
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 111/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ட
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-11-நூற்.
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 196/1915
மொழி சமஸ்கிருதம் முன் பதிப்பு : 90/118 (தெ.க.தொ.)
எழுத்து கிரந்தம்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 284
அரசன் -
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : போந்தை நாதரை வனநாயகர் என்றும், தானாக தோன்றியவர் என்னும் கருத்தில்
“அஜ” என்றழைக்கப்படுகிறார். போந்தை நாதர் திரேதாயுகத்தில் தேவர்களாலும், துவாரபார யுகத்தில் ரேவாஸ எனினும் முனியாலும் வழிபடப்பட்டவர் என்றும், கலியுகத்தில் இங்கு சந்தன குழம்பால் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்த இக்கல்வெட்டுக் கூறுகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதனின் காலம் கி.பி. 10-11 ஆம் ஆண்டு என்று கூறலாம்.
கல்வெட்டு
1.
2.
சூஜாவழிஈ உஜய விவஜேடி ஸ்ரீ- வெொடெ நாடி பஉஷெ, காயாஷி,-
ஃயமாவி,௧௦ ஹி2ஃக ஓலாமமஜா-
வரறெ ஹாக்ஷாஜெஸஹாஃமு .நீகி[ஷி* ][பம]௩ சூதக கெ றெவமாசெெத[:*] ஷஓ சாஷா
ய௦ வந நாயக: ௯லிமாமெஹல௦ ஷஹாஉஷ மநாதிலி:
173
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 112/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ரீ
வட்டம் ₹ செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 956
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 207/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/129 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : இராட்டிரகூடர் ஊர்க் கல்வெட்டு எண்: 29
அரசன் : கன்னரதேவன் (மூன்றாம் கிருஷ்ணன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
குறிப்புரை : நரசிங்கய்யன் என்பவரிடமிருந்து 21 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் கணப்பெருமக்கள் பெற்றுக் கொண்டு அதனின் வட்டியிலிருந்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் விளக்கெரிக்கச் சம்மதித் துள்ளனர். கல்வெட்டு : 1. ஹஹிஸ்ீ[*] கன்னரசேவர்க்கு யா- 2. ண்டு பதினேழாவது தாமர் கோட்டத்- 9. து திருவேகம்பபுறத்து ராஜ£ஓ ௮- 4. துவேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை 5. பெருமானடிகளுக்கு மருதாந்மைய 6. வீரஸுத லேோமவமு௩ விநமக ஸ்ரீ- 7. ஓக்ஷணை ஸ-க ஸமிறிநறஸி[ங்]ஹைய- 8. நீ ஒரு நந்தா விளக்கு[க்கு*] வைத்த
9. [பொன் எடர்புரம் இருபத்து
174
10.
ஒரு கழஞ்சு இப்பொன்னால் வ- ந்த பலிசை கொண்டு சந்திர[ா*]கித்-
. தவற் இரவும் பகலும் ஸ்ரீகோமி- . ல் கணப்பெருமக்களே எரிப்பதா- . க வைத்தோம் இக்கோயில்
. கணப்பெருமக்களே இவ்விள-
. க்கு ளிப்போமானோம் இத்ம2-
ம் ரக்ஷிப்பாரடி என் தலைமேல-
ன இத்ம[ர்* ]மத்துக்கு விரோதம் வேண்-
. டினார் கெங்கா கநறூந்தரத்து செய்-
த பாவம் கொள்வான் [॥*]
175
த.நா.அ. தொல்லியல் தறை தொடர் எண் :- 113/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 961 i : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2238/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/144 ட் (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு “3 சோழர் த ஊர்க் கல்வெட்டு எண்: 30 அரசன். ; பார்த்திவேந்திரவர்மன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோமில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து திருவேகம்பச் சேரியைச் சார்ந்த வியாபாரி ் மங்கலபிரியன் கலிவிலங்கி என்பவனின் மகன் அலங்கார செட்டி என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோயிலில் நந்தா விளக்கு எரிக்க 15 கழஞ்சுப் பொன்னினைக் கணப்பெருமக்கள் வசம் அளித்துள்ளான். கல்வெட்டு 1. ஹஹிஸ்ரீ[॥*] வீரபாண்டியனைத் 2. தலை கொண்ட கோ2(ஈ)ஹாராஜற்கு யாண்டு ௨ ஆவது ராஜமல்ல வதுவே_தி மங்கலத்து
வே
. திருவேகம்பச்சேரி ஷாவாரி மங்கலஷி_யன் கலிவிலங்கி மகன் இன்நாங்கூர் ஆகிய அல-
4. ங்கார செட்டி போந்தைப் பெருமானடிகளுக்கு ஒரு நுந்தா விளக்குக்கு வைத்த பொன் பதி-
5. னைங் கழஞ்சு இப்பொன் பதினைங்கழஞ்சாலும் வந்த வுரதிப் பொன் கொண்டு ஸ்ரீகோ-
6. மில் கணப்பெருமக்களே வஞராகிதுவரை எரிப்பிதாக வைய்த்தேன் அலங்கார செட்டி -.
176
7. யேன் இதூ ஈக்ஷிப்பார் ஸ்ரீபாதம் என்றலை மேலன் அறமறவெற்க அறமல்லது து
8. ணையில்லை
177
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 114/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 8-2
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 961
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 195/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/17 (தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 91
அரசன் பார்த்திவேந்திரவர்மன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் வடக்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் கோட்டத்து திருவேகம்புரத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து
ஐஞ்ஜஷ்டசதத்தும் என்னும் மகாசபையினர் 8674 கழஞ்சுப் பொன்னினை வரிகளுக்கு முதலீடாகப் பெற்றுக்கொண்டு கோயிலுக்கு உரிய நிலங்களுக்கு நிலங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் உறுதியளித் துள்ளனர்.
கல்வெட்டு :
L
2.
3.
4.
ஷஷியீ[॥*] பாண்டியனைத் த- லை கொண்ட வாதிவேந வ- நற்கு யாண்டு இரண்டாவது தாமர் கோட்டத்து திருவேகம்பபுறத்து
ராஜ2ஓவதுவேஃதி மங்கலத்து ஐஞ்சஷச[த]த்து ஊஹாஸலெ . பெருமக்களோம் எம்மூர் ஸ்ரீபோஸெ ஊஹாஜேவர்க்கு யாங்கள் ௧- - டவ எண்(ம்)பத்தறு கழஞ்சே முக்கால் பொன்னும் இவருடைய ஹூதி-
௨ கள் எப்பேர்பட்டின(த் துக்கும் இறைஆவடமாக கொண்டு இன்றின்முன்
இவ-
178
9. ருடைய லூசி எப்பேர்பட்டினவும் வக,ாதிதருள்ளளவும் இறைலியா-
10. க பணித்தோம் இனிக்குடுக்கும் மூஓகள் இறைஇழிச்சே(0)ய் குடுப்பாராகவும் 11. இ ஸ்ரீகோயிலுக்கு மணமென்று பேசப்பிறாததாகவும் ஸ்ரீகாய;ம் ஸஹெ- 12. வாரியமே இட்டு கடைகாண்(ம்)பிப்போமாக்வும் இதற்றிறம்பிநாரை ஸா,தா- 13. மஷரே இருபத்து ஐங்கழஞ்சு பொன் அன்பிற் இ;?)-
14. த்து[க்*]கு ௯ஹிதநின்றார் மா கூநழாகத்திடை [செய்தார் செய்த பாபம்- 15. படுவாராகவும் பணித்தோம் ஊரஸலெ பெருமக்களோம்: வபெவ்யுள்விருத்-- 16. து பணிகேட்டு எழுதினேன் கெ.றாஜு வபுகா 8ம$ஹன் மூவாமிரவனே-
17. ன் ॥-
179
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
அரசு : அரசன் 3 இடம் 3
குறிப்புரை :
கல்வெட்டு ;
திருவண்ணாமலை செய்யாறு பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
பார்த்திவேந்திரவர்மன்
தொடர் எண் :- 115/2017 ஆட்சி ஆண்டு 5 த வரலாற்று -.ஆண்டு- : கி.பி, 908 இ.க. ஆண்டறிக்கை: 199/19[$ .
முன் பதிப்பு : 90/11, (தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 92
சந்திரமெளலீஸ்வரர் கோமில் கருவறை வடக்குச் சுவர்.
தாமர் கோட்டத்து திருவேகம்பபுரம் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் உள்ள ரிசபவாகன தேவர் திருமேனி வழிபாட்டிற்காகவும், நந்தாவிளக்கு எரிப்பதற்காகவும் சிங்கபெருமாள் என்பவன் 127 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளான்.
1. ஷுஷிஸ்ரீ[॥*] கோப்பார்த்திவேஷ, [ஈதிபதி] பந்[மர்*]க்கு யாண்டு ௪ ஆவது
தாமர்-
2. கீகோட்டத்து திருவேகம்புறத்து [இ]ராஜ[2ஓவக ]வே[.* ]திமங்கலத் து ஸ்ரீபோந்தை து
னே
இஷலவ[]-
. பெருமா(ன)நடிகளுக்கு சிங்கபெருமாள் ம . . திரு . . .ன் திருமேனி
4. ஹன[ர்*]க்கு ஒரு திருவமிர்து[க்*]கும் ஒரு நந்தாவிள[க்கு]க்கு[ம் இடுவித்த] பொன் பன்னிரு கழஞ்செய் கால்
5. இப்பொன் கொண்டு பர[வி] புலத்து மேர்க்கடைய முன்னூறு . . . குழி
விற்று குடுத்தோம் 2ஊஹரஸ்லெ
180
10.
. பெருமக்கள்[ளோம்] விற்று இறைஇழிச்சி குடு[த்தோம்] இந்நிலம் கொண்டு
ஒருபொழ்து [ந் ]
திருஅமிர்து ஐய்விழக்கு! அரிசியால் [காட்டுவதா]கவும் ஒரு நந்தா விளக்கு
எரிப்-
. பதாகவும் இப்பரிசு ஸஷிராதிகர் உள்ள[ள* ]வும் [நி]-
..ற்பதாக வைத்தோம் ஹாஸலெ பெரும[க்களோம்] கடன் ஸ்ரீகோயில்
வாரியப் பெ[ரு]-
மக்களேய் ரக்ஷிப்பாராகவும் ஊத்து[க்கு கேடு நினைத்தார் இத்திருவமிர்தும் திருவி-
ளக்கும் இறக்கினார் பாவத்திற் படுவார் [இஜ?6 ஈக்ஷி]ப்பார் [ஸ்ரீ]பா25 என்றலை மேலன[॥*]
1: ஐய் உழக்கு - என்று படிக்க
181
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை செய்யாறு பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ் சோழர்
பார்த்திவேந்திரவர்மன்
தொடர் எண் :- 116/2017
ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு (தெ.க.தொ.)
ஊர்க்கல்வெட்டு எண்:
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
காட்டமய்யன் எபவன் திருவே தவ சவகிரு துயாஜியர் என்பிடமிருத் 1018% குழி நிலம் வாங்கி ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனுக்கு இரவு சந்திக்குத் தேவையான அமுதுபடிக்கும், திருநந்தா விளக்கு வைக்கவும் இந்நிலத்தினை கோயிலுக்குத் தானமளித்துள்ளான். மேலும், இவ்வூர் சபையார் இந்நிலத்தின் மீதான வரியை நீக்கியுள்ளனர்.
4 கியி. 908 205/1915
30/127
33
1. ஹஷிஹீ[॥*] பாணியனை தலைகொண்ட பாதிவேஷாகிபதி வூ -
2. ற்கு யாண்டு ௪ ஆவது தாமர் கோட்டத்து திருவேகம்பபுறத்து ஈாஜ2ஓ -
3. சதுவேபதி மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகளுக்கு
4. ௬தறாத, திரிகஷதி' திருவ?து நாநாழி யுரிக்கும் ஒரு நொ-
5. நீதாவிளக்கு[க்*]குச் சின்னமைய்யப் பேற்கடை மகந்
6. காட்டமைய்யன் வைத்த ல-கியாகின்றது பனை-
7. யுடை நல்லூ(ர்)ரேரிகீழ்த் தேவியார் தூம்பி-
8. ன் கிழக்கு வெம்பன் குழிப் பாடகத்து பாக்க-
1. திரிசந்தி-என்று படிக்கவும்
182
. த்து திருவேங்கடமாமவ ஸவ௯,துயாஜியார் பக்- . கல் விலைகொண்டுடைய ஆமிரத்தொருபத்தெட்-
. டே முக்காற் குழி நிலமுஞ் சகர£சிகூவற் ஸலெயார் இப்ல-கிக்கு இறையிலியாகப் பணித்தமையா-
௨ல் இறையிலியாக்கிப் பணித்து வைத்தமைமி-
௨ல் இறையிலியா[க *]வத்த(ரத)து இ௰$$த்துக்கு விரோத- ஞ் செய்தாரை ஸா,தா8கறெ ௰3_ஹனமுள்ளி-
. ருந்து அன்றா[ள்]கோவுக்கு நிசதமிருபத்தைங். ௧- . மஞ்சு பொன் தண்டமிடப் பெறுவதாகப் பணித்தோ- ம் ஸலஸெயோம் இமஜத்துக்கு. விரோயஞ் செய்தா டர் கங்கா கராஷாஸம் நடுவுபட்டா[ர்*] செய்தார் செய்த . பாபத்தில் படுவாராகவுடி ௨ இப்படி ஸலெெய்-
௨ யுள்ளிருந்து
..ஹலெெ பணி-
ப்ப வெழுதிநே-
௨ன் நாதகணப்-
. போசன் ஏழா-
. மிரவநேன்
. இவையென்
௨ னெழுத்து
. இவை ஸா”
, திருணஷ
௨.௨.௨. ஆசான்
. எழுத்து [॥*]
183
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 117/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு .: கி.பி. 965
ஊர் 2. பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 208/1915 ....
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/130 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 34
அரசன் : பார்த்திவேந்திரவர்மன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை : வேதம் நன்கறிந்த இரண்டு பிராமணர்களுக்கு நண்பகலில் உணவளிப்பதற்காக தாமர் கோட்டத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து என்னும் நிர்வாகச் சபையினர் 440 குழி நிலம் அளித்துள்ளனர். இவ்வூரில் உள்ள பெரிய மண்டபத்தில் ஒரு பகல் வேளையில் சபை உறுப்பினர்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர். மேலும் கணவாரியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] கோபாதி வேக வர்க்கு யாண்டு ஆறாவது தாமர்க் கோட்டத்துத் திருவேகம்பபுறத்து ராஜ2-
62 .
ஒச்சதுவேகி மங்கலத்து குஞ்சஷனத்து 2ஹாஸடெிெப் பெறுவோம் எம்- : . ட
3. மூர் பெருமண்டபத்தே பகல் பெருங்குறி கூடி இருந்து இவ்வூர் குவல கிழார் மணிமிவ லட்ட ஹவபசுஉ-
4. யாஜியார் மகந் 8ஹாமேவ சூ2வித்தநீ ர கைத்திறோத்துமத் குற்றப்பாக் கிழான் ப்மிவல,க சூ2வி ்
5. தீதன் தரவுக்கு கூறப்பட்ட பாடகத்து [மே]க்கடையத் தந் அமிசந் நானூற்று * நால்ப்பது குழி இரண்டாஷ-
184
12.
ரம் இவ்வூர் ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் ஸ்ரீகோயில் இரண்டு ஹாஹணர்
விருந்துண் உண்ப-
, தாக வச்ச நானூற்று நால்ப்பது குழியாலும் வக இறை(ய்)மா [வொ]ரு மா
நிலமும் -ஆசத,காலமு-
- மாக இறை ஒழி[ய*]ப் பணிய்த்து இறைஇழிச்சி இணாஷணர் இருவர்க்குமா
உத்தம ஒ ஒருவநே 8மமாஷத்தில் வ-
. ஈவேறரர் அமுது செய்வத[ர்*]க்கு முன்பு கறியும் நெ[ய்*]யும் தமிரு[ம்*]
இரண்டு பாக்கும் நாலு வெற்றிலையும் இப்பரி-
சு உத்தம முட்டாமே நிசதம் ஒரு வாஷணன் வேலம் வல்லான்
ஆச, காலமும் அபூவி,களே ஊட்டுவதா-
- க இநாநூற்று நால்பது குழியும் [இ]றை இழிச்சி குடுத்தோம் அஞ்சஷஸத்து
ஷஹோஹலெலெப் பெருமக்களோம் இபப்*]படி-
க் செய்வாரே ஊட்டப் பணித்தோம் இஸடெப் பணிக்க எழுதிநேந் ஆயிரத்திருநூற்றுவ [திக [திற*]லோத்தமநேந் 1-
(85
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 118/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 12 நாள் 184
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 971
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 241/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/162 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 35
அரசன் ₹ பார்த்திவேந்திரவர்மன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர். குறிப்புரை : வெளியன் நுளம்பர் விசுத்தமதி பண்டிதர் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த யாமத்திலும் வேதத்தில் வல்லவனாய் உள்ளவன் அபிஷேகம் செய்வதற்காக 525 குழி நிலத்தினை வரிநீக்கிப் பெற்று தானமாக அளித்துள்ளான். கணப்பெருமக்கள் கண்காணிக்க ஏற்பாடு செல்ப்பட்டள்து. கல்வெட்டு : 1. ஹஹிஸ்ரீ[॥*] கோபாதி,வேந்உாதி பன்மற்கி யாண்டு பன்னிரண்டு நாள் நூற்று எண்பத்துநாலு தாமர்க் கோட்டத்து திருவேகம்பபுறத்து 2. இராஜமல்ல சதுற்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தைய் பெருமானடிகளுக்கு பொத்தன் மடுவுடைய வெளியன் னுளம்பர் விம 9. தமதிபண்டிதர் இறையிலியாக ஸலெலெயார் பக்கல் மஞ்சிக்கமான கடுகிலி குழி அஞ்லுற்றிருபத்து அஞ்செய் . . . 4. குழியும் ஸ்ரீபோந்தைய் பெருமானை மூன்று ஸந்யியும் அத_யாமமும் வேதம் வல்லானாய் நல்ல . . . 5. ன் அஹிஷேகம் செய்வாநுக்கு கடைக்காக வைத்தேன் விஸய-$மதி பண்டிதநேன் இமநம் அவ்வாண்டு . . . .
186
6. ஸ்ரீகோமில்வாரியஞ் செய்கின்ற கணப்பெருமக்களேய் கடைக்காண்பாராக
- வைய்த்தேன் இ ..... 7. த்துக்கு தீங்கு நினைத்தார் மெங்மா கன்நியான்தம் நடுவு செய்தார் செய்த பாவம் கொள் . . . .
8. இத?) மக்ஷிப்பருடைய ஸ்ரீவாத தூளி என்சிரஸின அறம் மறவேல் ௮
9. ய் இல்லை இத29 ஸ்ரீவாஹேறாறற டைய ணக ॥-
187
த.நர.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 119/2017.
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 138
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 972
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 199/1915
மொழி தமிழ் முள் மதிப்பு 1” உ: ட் (தெ.க.தொ.) . ...
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் கார்க் கல்வெட்டு எண்: 98
அரசன் பார்த்திவேந்திரவர்மன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : இக்கல்வெட்டு முழுமை பெறவில்லை. மிகவும் சிதைந்து காணப்படுகிறது.
பறியலூர் ஊரைச் சார்ந்த ஜாதவேத கிரமவித்தன் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் நடைபெறும் பெருவீற்றை நாள் விழாவின் போது பெருந்திருவமுது செய்வதற்காகத் தானமளித்துள்ளச் செய்தி.
கல்வெட்டு :
1.
2.
3.
ஷஹிஸ்ரீ[॥*] கோப்பாதிவேரூாதி அதிபதி பநற்க்கு யாண்டு ௰௩: ஆவது. பறிய(ல்)லூர் ஜாதவே- த௲மவி(ய)த்தன் ஸ்ரீபோந்தைப்-
. பெருமானடிக(ள்)ளூுடைய பெருவீ-
ற்றை நாளைத் திருவோலக்கத்து ஞா-
பக... ரியும்மதற்க்குத் . . . நெ. . . பெருந்திரு[வ]மிர்[தி]- ௨ற்க்கு வைய்த்த . . .
188
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 120/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு
திருவண்ணாமலை . ஆட்சி ஆண்டு : 18 வருடம் 120 நாள்.
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 972
பிரம்மதேசம் இ.க. ண்ட்திச்மை 194/1915
தமிழ் - முன் பதிப்பு : 30/116 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் : ஊர்க் . கல்வெட்டு எண்: 37 பார்த்திவேந்திரவர்மன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
திரைராஜ்ய கடிகாவின் மத்யஸ்தன் (கணக்கர்) சதுரன் மூவாமிரவன் என்பவன் ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்குகள் வைப்பதற்கு 80 கழஞ்சு துளைநிறைப் பொன் தானமளித்துள்ளான். கணப்பெருமக்கள் நந்தாவிளக்கு எரிப்பதைக் கண்காணிக்கவும், ஸிக்கவில்லை எனில் தெண்டம் வசூலிக்கவும் சிரதாமந்தர் எனும் நிர்வாகப்பிரிவினருக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
1. ஷுஹிஸ்ரீ[॥* ] கோப்பாதி,வெஷி_திபதற்கு
2. யாண்டு ம௩ ஈ* ஈ௨௰ தாமர் கோட்டத்து தி-
9. ௬ருவேகம்பபுறத்து மாஜ2ஓவ-
1 51. ஷூ. ட. ஷூ
. தாஃவேபுதி மங்கலத்து கெறாஜுவ்புகா-
- மஹந் ஸ்ரீகயிகாரியாகி[ய] சதுரன் மூவாயிரவந் இவ்வூர் ஸ்ரீ- போந்டெகப் பெருமானடிகளுக்கு இரண்டு நஷாவிளக்கு இரவும் பகலுஞ் வஞூ[தி]ஆவத் எரிப்பதற்கு தஷபொன் மநகட்டளை
- துளை நிறை முப்பதிந் கழஞ்சு இப்[பொ]ன் முப்பதிந் கழஞ்சும் இதே-
9. வர்க்கே குடுத்து இஜேவருடைய லூசி திருசுற்றாலைமின் தெற்கில் நங்-
* ££ -நாளுக்கான குறிமீடு
189
10. கை செய்யாளாகிய அறுநூறு குழியு முள்ளெ! இறையிலியாந- 11. மையில் இச்செறுவில் போக லோமங்கொண்டு இரண்டு நந்தா 12. விளக்கும் எரிப்பதாக மிலாலேலகெ செய்து குடுத்தோம் 8ஹா- 12. வெல பெருமக்களோம் இது அவ்வாண்டு கணவி- 14. யஞ் செய்யும் பெருமக்களேய் எரிய்ப்பிக்க கடவாராகவும்
15. எரிய்ப்பியாது முட்டில் மர,தாமரரேய் அவ்வவாண்டு செய்யு- 16. ங் கணவாரியப் பெருமக்களையே பெறுவகை நிசதம் அரை- 17. க்காற்ப் பொன் அன்றாழ்கோவுக்கு மன்றப் பெறுவாராகவும் இ- 18. ப்பரிசு மமிலவாலேஷெ செய்விய்த்துக் குடுத்தோம்
19. ஊஹாஸலெப் பெருமக்களோம் பெருமக்கள் பணிப்ப
20. எழுதினேன் கெெ.றாஜ$வடுகா மய்ஹுந் திருவேகம்ப கற்பி- 21. ச்சனேன் ॥ ௨ இப்படிய்
க ல அப ட, !- முன்னே - என்று படிக்கவும்
190
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 121/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 972 ஊர் 3: பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 197/1915 மொழி : தமிழ் (ம) சமஸ்கிருதம் முன் பதிப்பு : 90/119
. (தெ.க.தொ.) எழுத்து : தமிழ் (ம) கிரந்தம் அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 38 அரசன் 3 பார்த்திவேந்திரவர்மன் இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயில் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த சாமத்திலும் அபிஷேகம் செய்யும் பிராமணனுக்கு நெல் மற்றும் கூறை (துணி) ஆகியவை வழங்குவதற்குத் தானமாக 30 கழஞ்சுப் பொன் அளிக்கப்பட்டுள்ளது. இப்பொன் தன்மக்கட்டளைக் கல்லால் நிறுத்து தரத்தினை இராஜமல்ல சதுர்வேதி மங்கலத்து திரைராஜ்ய கடிகாவைச் சார்ந்த மத்தியஸ்தன் - பொற்கோயில் மூவாமிரவன் என்னும் சதுரன் என்பவன் சரிபார்த் துள்ளான். கல்வெட்டு. :
1. ஷுஹிஸ்ரீ[॥*] ஸ்ரீவாரு: வாதிவேராயிவதி நறவதெ தாயா நஷ ராஸெமாஜெஸிஜா ஜ2ூஜெஸற[மு]ணவுநிகெக ஒட கபடி
2. ஏஸி பொற்கோயில் மூவாயிரவ . ஈ-யமமா: வா௫ஜித-ஷ ஹா[ஹ]ணாய தி,மமாநிஷா ஸ-வந_௦ மண[ம] நிஓயொலாந வ ஸெ);கஷி . . .
9. மோசிபரத யாண்டு ௩வது தாமற்க்கோட்டத்து - [திரு]வேகம்ப[பு றத்து மாஜ[2]ஓவு-வே[ஃ]தி மங்கலத்து கதெற[ா]ஜுவ்புகா 2யடஷன் சதுரனாகிய . . .
4. . . க் கோயில் மூவாமிரவன் இவ்வூ[ர்] ஸ்ரீபொந்[ண]த பெருமான[டி ]க[ளை* ] கதி,[ஸ௩பியு]ம் ௬௨யாமமும் ௬லிஷேமஞ் செய்[யு]ம் வஹணனுக்கு நிசதி . . . ..
191
5. லும் ஆறுமாஸத்து ஒரணை கூ[றை]யும் வரராகி[த்தவற்] தேவரே குடுப்பாராக . [இத்]டேவர்க்குக் குடுத்த பொன் ம[$]க்கட்டளை துளைநிறை முப்பதின் - கழஞ்சு இ-
6. வ்வாண்டு மணவாாரிய]ஞ் செய்[யு]ம் [ம]ணப்பெரும[க்க]ளே இன[ஷாஷனு] ்் [வ]றுப்பாரகவும் . . , றைவறது முட்டில் . . . . .
192
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 122/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18 வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 972 ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 242/1915 மொழி தமிழ் முன் பதிப்பு : 30/163 (தெ.க.தொ.) எழுத்து கிரந்தங் கலந்த தமிழ் அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 39 அரசன் பார்த்திவேந்திரவர்மன் இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர். குறிப்புரை : ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் விளக்கெரிக்கத் தன்மகட்டளை என்னும் நிறுத்தல் அளவையால் நிறுத்திய 15 கழஞ்சுப் பொன்னினை சேவன் என்பவன் தானமாகக் கொடுத்துள்ளான். கல்வெட்டு : 1. ஷஹிஞஸ்ரீ[॥*] கோப்பாதி) வேணி . ... . 2. ர் பநற்கு யாண்டு ௩ தாமர் . .....
3. மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமா .. ..
4. ம்பந் சேவந் சஷாதித்தவல், கண்ல மி
8. ற்கு வைத்த பொந் மரக்கட்ட . . . . 6. ங்கழஞ்சு இப்பொந் பதினை . . . .. 7. விளக்கு எரி[ப்போமானோம்] ராஜ . . . . .
%
193
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 123/2017
மாவட்டம் வட்டம் ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 974
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 206/1915
தமிழ் முன் பதிப்பு : 30/128 (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 40 இராசகேசரிவர்மன் (சுந்தர சோழன்)
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
இராசகேசரிவர்மன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டு சுந்தரசோழனின் கல்வெட்டாக இருக்கலாம். கச்சிபேட்டு திருவேகம்பத்து திருவுண்ணாழிகை சபையைச் சார்ந்த பாரத்வாஜி சதாசிவன் என்பவன் ஒரு குறிப்பிட்ட நிலத்தினை விலைக் கொடுத்து வாங்கியும், மற்றொரு நிலத்தினைப் பரிவர்த்தனையாக மாற்றியும் ஆக இவ்விரு நிலங்களையும் இக்கோயில் இறைவனுக்குத் திருமெய்ப்பூச்சு பூசுவதற்கு வேண்டிய சந்தனம் வழங்கிட வழிவகைச் செய்துள்ளான்.
1. ஹஹிய்ீ[॥*] ராஜகேஸரிவன்2[க்குயா]- 2. ண்டு பதினேழாவது கச்சிப்பேட்டு -
டத் திருவேகம்பத்துக் திருவுண்ணா-
3 4. ழிகையுடைய ஹாறதாஜி ஹலாமிவ-
5. நீ தாமர் கோட்டத்துத் திவேகம்பப்பு-
6. றத்து மாஜ$ஒச்சக- வேதி மங்கலத்து ஊ-
7. ரார் கூரி பேசங்குமாரவாய்பேசியார் தர-
8. வில் புதுப்பள்ளிச் சிறுநாவல் பக்கல் வி-
194
௨.ற்றுக் கொண்டுடைய ஒரு பங்கினாலும் பங்கி[ல்] . நிலம் அய்ந்தா[ம் ப]ாடகத்து யான்மி . . .
௨ம் பரிவதனையாலு நா. . ....
௨ய் குழி பொத்தகத்து என் . . ....
வ்வூர் ஸ்ரீபோந்தைப் பெரு . . . . .
. நந திருமெய்பூச்சுக்குச் ச௩[ந*]த்துக் . . .
. த்தேன் வஞூகித்தருள்ளளவும் [வரத ப-
ற்றி இறை நீங்கலான லோமங் கொண்டு ஸ்ரீ-
. கோயிற் கணவாரியப் பெருமக்களோடும் [இ]- தும் றக்ஷிப்போமாக ஒட்டிக்குடுத்தோம் ஹாதகிலோகத்தால் வந்த நெ[ல்*]லைம்பதி[ன் கா]- டி கழஞ்சுக்கு முப்பதின் காடி வண்ணம் வ- ந்த பொன் கழஞ்சரை இது திங்களோபாதி-
தி அரைக்கால்ப் பொன்னால் சநநங்
. மிதற் நிறம்பில் மங்[கையிடைக் கும] ரி இடைச் செய்தார் செய்த பாவத்து- ப் படுவோமானோம் இத2 மூல
. கணவாரியரோமை பதா ஹஸ்ரரே]-
. நிசதங் குன்றிப் பொன் மன்[றி] ஒட்டி- . க்குடுத்தோம் இத[2*]ம் [ஈக்ஷி]ப்பார் ஸ்ரீ பாதம் என்றலை [மேல]ன
. அறமறவேற்க
195
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 124/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 1
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 996
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 190/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/112 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 41
அரசன் : முதலாம் இராசராசன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முழுமையாக இல்லாமல் ஒரு பகுதி மட்டும் உள்ளது. திருவேகம்பபுறத்து ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊர்ப்பெயர் மட்டும் காணப்படுகிறது. கல்வெட்டு : 1. ஹஷியஸ்ீ[॥*] சாலைகலமறுத்த கோராஜராஜகேராரிபநமற்கு யாண்டு மக ஆவது ....
2. கோட்டத்து திருவேகம்புறத்து மாஜூஓமாதுர்வேதிமங்கல[த்]து . . .
196
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16 வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1001 ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 199/1915 மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/121 (தெ.க.தொ.) எழுத்து தமிழ் அரசு சோழர் ஊர்க் . கல்வெட்டு எண்: 42 அரசன் முதலாம் இராசராசன் இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர். குறிப்புரை : ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் மூன்று சந்திகளின் போது திருப்பதியம் பாடும் இருவருக்கு 1200 குழி நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டு அல் இங வயி ப மட் உம்ம் க கில் மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கக்கி 4 கங்கபாடியும் நுளம்பபாடியுந் தடிகைபாடியும் வேங்கை நாடுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலி- கல்மடு மடிக் திரு தெண்டாற் கொண்டு [தன்னெழில் வள]ருழியுளெல்லா யாண்டுந் தொழுதெழில் வணங்கும் யாண்டே செழிஞரைத் தேசுகொள் கோஇராஜராஜ ராஜகேஸரி[வ*]நர்க்கு யாண்டு 6௬ ஆவது தாமர்க் கோட்டத்து திருவேகம்ப தவ வல் மங்கலத் . . . . மூன்று ஸஷியு(ம்) ஷிருப்பதியம் பாடுவாரிருவர்க்கு வைத்த பூமிய்வது கிரன்பாடி குழி ஆயிரமும் அரைய் தூம்பில் முடக்கு வாய்க்கால் கரை குழி இருநூற்றுச் சின்னமும் ஆக குழி ஆயிரத்திரு தீ ல்ல லால் கலக க இதுகள் க சில ல வகுக்க பய
தொடர் எண் :- 125/2017
197
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 126/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 10038
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 192/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/114 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ் ;
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 43
அரசன் 2 முதலாம் இராசராசன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : தும்பூர் ஊரைச் சார்ந்த கம்பன் மலையன் மற்றும் நக்கன் பவித்ரம் எனும் இராஜராஜ தலைக்கோலி லக்ஷ்ணத்தாள் ஆகிய இருவரும் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நந்தாவிளக்கு வைப்பதற்காக 12 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளனர். நடனத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படும் உயரிய பட்டம் தலைக்கோலி என்பது
... ஆகும். கல்வெட்டு : 1. ஹஹிஸ்ரீ[॥*] திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயு-
2. ரிமை பூண்டமை மனக்கொள காஷளூர் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியு நுளம்பபாடியு கடிகைபாடியுங் குடமலைநாடுங் கொல்ல-
9. முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டு தன்னெழில் வளர் ஊழியுளெல்-
4. லா யாண்டு ஷொழுதெழ விளங்கும் யாண்டே செழிஞரைத் தேசுகொள் கோறாஜமாஜ மாஜகேஸறிவநற்கு யாண்டு அ ஆவது
5. தாமர்க் கோட்டத்துத் திருவேகம்பபுறத்து மாஜமல்ல வக-ஃவே_திமங்கலத்து 2ஹாஸ்லெயோம் எங்களைத் தனிசுடைய-
6. தும்பூரூடையான் கம்பன் மலையனும் நக்கன் பவித்திரமான மாஜஙாஜத் தலைக்கோலியும் ஓக்ஷணத்தாலுடைய பொ-
198
7
10.
11. 12. 1.
14.
ன் யம் இப்பொன் பன்னிரு கழஞ்சுக்கும் பொலிசைக்கும் எங்களூர் ஸ்ரீபோஷை வ௱ஙேரரர்க்கு நாங்கள் எரிப்பதா-
ன திருநஷாவிளக்கு ஒன்றும் வஷிறாகிகஷவற் நிசதம் உழக்கெண்ணையா லெரிப்பதாகவும் இவ்விளக்கு ஒன்று
. ஆட்டாண்டு தோறும் மரகோய;வய்யக் கடவ ஷ_வதற வாரியப்
பெருமக்களே இவ்வெண்ணை அட்டுவித்து
எரிப்பிக்க கடவார்களாகவும் இவ்விளக்கு எரிப்பியாது முட்டில் ஸம, ஜா2றெ மநாஸகமுள்ளிட்ட தாம் வேண்டு
கோவுக்கு நா . . . . ப்பேர்ப்பேர் உணமிடப்பெறுவதாகவும் இத்த- ண்டமிறுத்தும் இவ்விளக்கு வஞ_ாதித்தவற் எரிப்பதாக இப்பரிசு ஸ்ரி- லாஜேவவெ செய்யப் பணித்துக் குடுத்தோமிவூர் ஊஹரஸடலெெப் பெ-
ர௬ுமகீகளோம் ஸலெலெயிருநீது பணிப்பணி கேட்டேழுதினேன்
கேசுவபட்ட[னேன்* |
1. ஒன்றினால்-என்று வாசிக்க
199
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 127/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தா அதர்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1012
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 204/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/126 (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 44
அரசன் : முதலாம் இராசராசன் ்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்கு மற்றும் மேற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு கரைக்கோட்டு பிரமதேயம் என்கிற பராக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து கோயிலில் ஒரு நந்தா விளக்கெரிக்க 10 கழஞ்சுப் பொன்னினை காமக்கொடி சானி என்னும் பிராமணப் பெண் தானமளித்துள்ளாள். இந்த 10 பொன்னினைக் கொண்டு 90 ஆடுகள் வாங்கி விளக்கெரிக்கத் தினம் உழக்கு அளவு நெய்மினை அளிப்பதாக தில்லைச்சேரியைச் சார்ந்த இடையன் ஒப்புக்கொண்டுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] திருமகள் போலப் பெருநிலச் செல்வியு[ந்தனக்]கேயுரிமை பூரண்ட]மை ம[னக்கொள காகளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நா-
2. டுங் கங்கபாடியுங் நுளம்பபாடியு ஷடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமு[ங் கலி]ங்கமு[ம் எண்டிசை.